Saturday, November 2, 2013

ராதை மனதில்...

என் முதல் குறுந் திரைப்படம்...

http://www.youtube.com/watch?v=_4CZIlqQ7jU

Saturday, October 5, 2013

இமைகளும் துடிக்குதோ...

சிலிர்க்கும் இந்த இரவுகள், தவித்து இருக்கும் இந்த தருணங்கள்,
 சிரிப்பை மறந்து நிற்கும் நிமிடங்கள், தினம் நீளுதே உயிரே...

கொட்டும் பனியில் இந்த கோடை வெயில் வந்து,
 என்னை அள்ளிச் சென்று கோடம்பாக்கம் விட்டுச் செல்ல...

உன்னைத் தேடியே நானும் ஏறும் பேருந்து கூட,
 விண்ணைத் தொடும் வேகம் கொண்டு தான் பறந்து செல்ல...

பேசுவாயோ கிளியே தினம் பேதையாகுறேன் தனியே,
 சாலையோரம் எங்கும் என் விழிகள் உன்னைத் தேடிடும் இனியே...

உன் கூந்தல் வருடிடவே, ஏங்கிடுதே எந்தன் விரல்கள்..
 உன் பாதம் தொட்டு இசைத்திடவே தவித்திடுதே இந்தக் கொலுசுப் பரல்கள்...

ஒரு நெஞ்சம், உயிர் காதல், உருவாகி அலைப்பாயுதே..
 இரு துருவம், இணைத்தக் காதல், உருகியே அலைமோதுதே...

~அன்புடன் கோகுலன்.

Monday, July 1, 2013

என்ன செய்தாய் பெண்ணே?

என் கண்ணுக்குள்ளே நீ நுழைந்தாய் பெண்ணே,
உன்னைக் கண்டதாலே மனம்  திண்டாடுதே...
விழி மோகம்  கொண்டு உன்னுள் புகுந்ததே இன்று,
கள்ளி என்னை நீயே கொத்திச் சென்றாய் நேற்று...

தொட்டால் குற்றமில்லை தொலைத் தூரத்தில் எல்லை,
விட்டில் கூட்டத்துக்கு வித்தைகள் வேலை இல்லை..
என் இதழ் ஈரம் கொண்டு உன் முகமும் நனைக்க,
ஆசைக் கொண்டதே இன்று  மனதின் திரையும் விலக...

மோகம்  தீரவில்லை மோட்சம் அடையும் நிலை,
மாலைத் தாங்கும் வரை வேகம் ஓய்வதுமில்லை,
விண்ணைத் தொடவா அன்பே மின்னல் மறையும் முன்னே,
காற்றில் தனியாய்ப் பறந்த நாட்களும் தடமானதே...

பெண்ணே எந்தன் மனம் அலைப்பாயுதே தினமும்,
கண்ணே உந்தன் கரம் பற்றும் காலமும் வரணும்...
சாலையில் தனியாய் நடந்த காலங்களும் அன்று,
அருகில் நீயும் வரவே தனிமை தொலைந்ததே இன்று...

~அன்புடன் கோகுலன்.

Tuesday, June 18, 2013

தரித்திருக்கிறேன்... தனித்திருக்கிறேன்... தவித்திருக்கிறேன்...

இதயங்கள் தடுமாறும்
தடம்மாறி வழி தேடும்
விடை இன்றி வினா கூடும்
கனவுகள் அலைந்தோடும்
காதலும் கசந்திடும்
கல் தட்டி தீட்டிடும்
சிலை(யின்) கண்கள்  என்னாகும்...?

மணி குயில் வெட்கத்தில் 
மனமிங்கு திகைத்து நிற்க
மலைக்குள்ளே ஒரு கிளியும்
மயங்கி தான் மரணிக்க
மன்னிப்பாயா? என்னை, என நானும்
மதில் மேல் பூனையாய் - ஏனடி?
மதி முடங்கி நிற்க...

கண் திறந்தேன் கனவில்லை இன்று,
விண் தொட எண்ணி தோற்றே உடைந்து,
மண் தொட்டு வீழ்ந்த பிணமாய் வெந்து,
பெண் அவள் விட்டு கண்ணீரில் நனைந்து,
புன் பட்டு அலைந்தே வீழ்ந்து,
பன் பட்டே மரமாய் எழுந்து....
உன் சொல்லால் கலங்கி கவிழுதோ என் இதயமே....

காலை உன்னை பார்க்க விளிக்கும் கண்களும்,
சாலை கண்டு உனக்காய் தேங்கும்,
மாலை வரை காத்திருந்தே ஏங்கும்,
பாலை நிலத்தில் வீழ்ந்த புழுவாய் வாடும்....

~அன்புடன் கோகுலன்

Saturday, May 25, 2013

எப்போதடி உணர்வாய்?

இதயமே இடையிலே இடைவெளிவிட்டுதான் துடிக்கிறதோ?
இரவிலே இமைக்குள்ளே உன் நினைவுகள் நனைக்கிறதோ?
இரு விழிகளே உன் இதழிலே என் உயிர் சமர்ப்பிக்குதோ?
இளமையோ இரு நொடியிலே நீ இன்றேல் முடியுதோ?

போதை மறந்து கிளியே புத்தனாய் நானும்,
பேதை போல் போதி மரம் தேடினேன் தினமும்,
பாதை மறந்து பயனிக்குதோ என் மனமும்,
சீதை இன்றேல் என்னாகும் இராமனின் கனவும்?

கொத்தும் தேளை அரவணைக்கும் என் மனமும் - இரவில்
கத்துதே காற்று வருடுகையில் தினமும்...
முத்துப் போல் மூழ்கியெடுத்தக் காதலும் - சடுதியில்
சத்தமின்றி போன மாயம் தான் விளங்கனும்...

கண் மூடுகையில் இருந்த நீ, கண் திறக்கவே மறைந்தாய்,
விண் சென்று தேடியும் கிடைக்கவில்லை எங்கே நீ தொலைந்தாய்?
என் கண்மணியே உன் வலியை ஏனடி மறைத்தாய்?
மண் இருக்கும் வரை என் காதல் அழியாது எப்போது அதை உணர்வாய்?

~அன்புடன் கோகுலன்.

Friday, May 10, 2013

மழையே ...

என்னை கொஞ்சி நனைத்திடும் மழையே,
கோடையில் இன்று என்னை கட்டியணைத்திடும் மழையே ,
வாடையில் கோடி பூப்பூத்தாட் போல் பூத்தாயே மழையே,
தாடை ஓரம் வழியும் நீரில் என் உணர்வும் கரையுமோ மழையே...

கரும் கட்டழகி கண்கசக்கி தோன்றினாயோ மழையே?
வெறும் தரை காய்கிறதே என மண்ணில் வீழ்ந்தாயோ மழையே?
சிறு தூரல் கொண்டு கண்ணம் முத்தமிட்டாயோ மழையே? - அதில்
மறுபுறம் என் உடலையும் குளிரச் செய்தாயே மழையே...

தொடுவானம் இருந்து என்னை தொட்டாயே மழையே,
தொடுதூரம்  இல்லை, இருந்தும் என்னை விட்டாயா மழையே?
தொலைதூரத்தில் அவள், நனைக்காதே மழையே,
தொலைக்கவில்லை அவளை, நனைந்தாள் நான் கரைவேனே மழையே...

அடை மழைக்குள் அவள் கூந்தல் என் முகம் வருடிடுமா மழையே?
மடை இன்றி ஓடும் கண்ணீர், உன் தூரல் மறைக்குமோ மழையே?
குடை இருந்தும் தனிமையில் தினம் தவிக்கின்றேனே மழையே...
விடை எழுத மையாகி நீ அவள் மனதை நனைப்பாயோ மழையே?

~அன்புடன் கோகுலன்.

Friday, April 26, 2013

அழகின் மாயம்

உன் கண்கள் கண்டதும் ஏற்பட்ட மயக்கம்,
 என் உள்ளத்துள் நான் உணர்ந்த நடுக்கம்,
வெண் முகிலுக்குள் ஏற்பட்ட அந்த கலக்கம்,
 என் காதல் சொல்ல வழியின்றி தவித்த தயக்கம்...

உன்னுடன் பல ஜென்மம் நான் வாழ்ந்த நெருக்கம்,
 என்னுடன் புதிதாய் இன்று பூத்திருக்கும் வெட்கம்,
மண்ணுடன் நான் வாழும் இக்காலம் இனி சுவர்க்கம்,
 மானுடன் என் வாழ்க்கையில் வீசிய புது மகரந்தம்...

என் விழிக்குள் இன்று நான் செதுக்கிய உன் சிற்பம்,
 இங்கு கல் பட்டும் நொறுங்கிடாத கண்ணாடி இதயம்,
பெண் கண்டு விறைத்திருந்தும் ஏதோ சிறு வெப்பம்,
 அங்கு பாலைநிலத்தில் நான் தொலைத்துவிட்ட தடயம்..

உன் பெயர் எழுத்துக் கூட்டி எழுதவே தோன்றிடும் கவிதையும்,
 பெண் நீ என் கண்ணுள் சிக்கியதால் ஏற்பட்ட இம்மாற்றமும்,
மண் உலகம் நான் விட்டு விண்ணுலகம் வென்றிட இன்று வித்திடும்,
 உன்  ஞாபகங்களும் இனி என் வாழ்கையை அழகாய் சிதைத்தே செதுக்கிடும்...

~அன்புடன் கோகுலன்.

Sunday, April 21, 2013

உன்னால் மயங்கினேன்...

என் தோழியே.. என் தோழில் சாய்ந்துவிடு,
 கண் மூடியே... கனவுகள் காண்போம் வந்துவிடு,
விண் நாடியே... விரைவோமா? சம்மதித்திடு,
 பெண் ராணியே... என் விரல்களுக்குள் உன் விரல்கள் சேர்த்துவிடு...

வயதிருக்கு நமக்கு வாழ்ந்திடவே வழிகள் திறந்தே இருக்கு,
 கொய்து நீ சென்ற என் இதயம் வாழ்த்திட உன் உயிரும் இருக்கு,
பெய்து நின்ற இம்மழையில் நனைந்து, காய்ந்தே என் உடலுமிருக்கு,
 ஆய்ந்து விட்ட என் உயிர் திரும்பிடாத உன் கடனுமிருக்கு...

கண் முழுதும் உன் நினைவுகள் ரேகையாய் மாறுதே,
 என் தேகம் உன் உதட்டின் ஈரம் பட்டுக் குளிர்ந்துப் போனதே,
மண் முழுதும் படரும் உன் நிழலில் குடிப்புகுந்திட என் உயிர் ஏங்குதே,
 மின் பாய்ந்த மரமாய் உன் பார்வையால் என் உதிரமெல்லாம் கருகியதே...

தன்னந்தனியாய் பேசி தவிக்கும் இந்நாட்கள்,
 வெட்டவெளியில் பட்ட மரமாய் பட்டுப் போன வார்த்தைகள்,
தொட்டுப் போவாயா என சுடுபட்டுப் போய் காத்திருக்கும் காலங்கள்,
 என்று தான் என்னை விட்டு மறையுமோ?
நீ இன்றியே இந்த உலகும் மாயமோ?
 உன் நினைவே இறுதியில் என்னை மாய்க்குமோ?

~அன்புடன் கோகுலன்.

Friday, April 12, 2013

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர
மட்டும் நீ பறிச்சுப் போன?
கொல்லும் பார்வையாள என் உசுர
கொத்தி நீயும் பிரிச்சுப் போன...
முதல் மழை தொட்டப் பாதையில,
மண் வாசணை நெறயும் வேளையில,
ஒத்தயில உன்ன எதிர்பார்த்து,
தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச?

உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும்,
நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்...

சொல்லு புள்ள இது நியாயமா?
காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா?
வெயிலில் என் மனமும் காயுமா?
உன் நிழல் வரும்வரை தவிக்குமா?

போதும் போடி உந்தன் கல் மனசு,
சாகுதேடி தனிமையில் என் மனசு,
சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு,
சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு...

உடம்பு மெலியுதே புள்ள,
ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல...
சோலைத் தேடி உன் நெனப்புல,
புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள...

ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல,
அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல,
உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல,
இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல...

எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள,
உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் புள்ள,
முத்தம் இடும் சத்தம் கூட மறந்துருச்சே புள்ள,
சத்தியமா நீ இல்லாட்டி செத்துருவேன் புள்ள...

முகில் இல்லாத வானத்துல,
 ஊணம் கொண்ட நிலவாய் நட்சத்திரத்துக்கு மத்தியில,
நண்பர்கள் என்ன சூழ்ந்து இருந்தாலும்,
உன் நெனப்பு என் கண்கள நனைக்குதே ஏன்டி புள்ள...

தக்காளி உன் சிரிப்பு என் கனவ நிறைக்குது தினமும்,
உன்ன காண தாண்டி தினமும் தூங்குறேன் நான் பகலும்,
பத்திரமா இரு என் உயிரே,
உனக்காய் உன்ன நினைச்சு வாழும் காலமும் கொடுமையான சுகமே...

~அன்புடன் கோகுலன்.

Saturday, March 30, 2013

கத்தும் குழந்தையாய் மனமும்...

முத்துக்குள் முத்தங்கள் இடவும்,
 திக்கித் திணறிடுதோ இதயம்,
தத்தித்  தாவித் தடுமாறித் தினமும்,
 கத்தும் குழந்தையாய் கதறியே அழும்,
சிக்கிக் கொண்டு சிக்கல்கள் கூடும்,
 தத்-தம் தருணம் திணறினால் மரணம்...

பத்துக் கைவிரலும் பற்றிப் பிடிக்கும்,
 சத்து இன்றி சதைதான் குறையும்,
சொத்து சுகம் தேடாத மனமும்,
 கொத்துக் கொத்தாய் முள்ளையும் பறிக்கும்,
பித்துப் பிடித்து திரிய துவங்கும்,
 கத்துக் குட்டியை கவலைகளும் சூழும்...

நித்தம் கண்ட கனவுகள் மறையும்,
 சத்தம் இன்றியே சந்தங்கள் அடங்கும்,
புத்தம் புதிதாய் பூத்திடும் ரோஜாவும் - என்
 ரத்தம் கண்டு தலைதான் கவிழும்,
சித்தம் கொண்ட சித்தனாய் நானும் - இங்கு
 புத்தனாய் மாறினால் வலிகளும் குறையும்...

செத்துப் போகுதே மனமும் இன்று - ஏனடி என்னை
 வித்தாப் பெற்றேன் உன்னிடம் காதலும் அன்று...
முத்தா முடிவா மூழ்கியதால் அன்று - காதல் இனி
 பத்தா(த) உண்டியாய் மாறிடும் நிலைதான் இன்று...

~அன்புடன் கோகுலன்.

Wednesday, March 20, 2013

அன்புள்ள மகனுக்கு, (தாயின் பார்வையில்)

கண்ணே நீ என் உயிர் தானே?
 என் கண்ணுள் விம்பமாகி பதிந்த என் உணர்வு தானே?
பொன்னே மணியே பூந்தேனே பூவரசே,
 மலருள் ஒளிந்திருக்கும் அமுதே என் அரசே...

என் கை தொட்டு, பிடித்து கட்டியணைத்து,
 என் எச்சில் உன் கன்னம் நனைத்து,
என் உணர்வுகளால் உன்னை பிணைத்து,
 நான் சிரிக்க நீ மகிழ்வாயே என் நிலவே...

மண்ணை நீ தொட வலிக்குது என் மனந்தான்,
 வெயில் உன் தேகம் சுட எரியுது என் உடல்தான்,
கண்ணில் ஒருத் துளி நீர் கண்டு கலங்கிடும் என் இதயம் தான்,
 குயில் இல்லை அன்பே காக்கையாய் வாழ்கிறேன் நான்...

சேலையை நீ இழுத்திடும் கணங்கள் என்னை மறக்கிறேன்,
 மார்பினில் உன்னை நான் சுமந்து தினம் உறங்கினேன்,
மொழிகள் அறியா உன் வார்த்தையில் உள்ளம் உறுகினேன்,
 உனக்காய் தானே என் செல்லமே இன்று உயிர் வாழ்கிறேன்...

~அன்புடன் கோகுலன்.

Saturday, March 16, 2013

மழலை மொழி பேசுமா?

பொன்னிற மேனி, அழகின் ராணி,
 தொடுகையில் சிரித்திடும் சிரிப்பும் வகைகளில் தனி,
கள்ளமில்லை கண்ணீரில் கலப்படமில்லை,
 மொழியில்லை மழலைக்கு மொழியவதில்லை எல்லை...

புயங்கள் நான்கும் மண்ணில் புதையும் போது,
 காயங்கள் தினம் காணும் புவித்தாயும் சிலிர்க்கிறாள் இன்று,
மாயங்கள் இல்லை அவர்களிடம் மர்மங்கள் இல்லை,
 தாயங்கு கண்டு சிதறிடும் சிரிப்புக்கு ஏதடா விலை?

காதல் கொண்டு காமத்தால் நின்று,
 இரவினில் நடத்திய இன்ப ஆட்டத்தின் சான்று,
பெண்ணும் ஆணும் பேதையாய் மாறி,
 விதைத்து விட்ட விதையின் பத்தாம் மாத விளைவு...

அழகுக்கு அளவில்லை, மழலை அழகை அளந்திட வழியுமில்லை,
 விடலை பெண்ணிடம் கூட இவ்வழகு இவ்வளவுக்கில்லை...
மழலையை தொட்டுக் கொஞ்ச என் மயிரிழை கூட,
 தாண்டிட துடிக்குதடா புவியின் எல்லை...

~அன்புடன் கோகுலன்.

Saturday, March 9, 2013

பெண்ணே மௌனமேன்?


மார்கழி மாத பனிக் கோட்டைக்குள்,
மங்கையவள் மனதுக்குள் சாரல்,
கோடை வெயிலில் - அவள்,
உடலுக்குள் பெய்திடும் தூறல்,
நித்திலங்கள் மேல் அவள் கூடல்,
கூட்டுதோ எமக்குள் இந்த ஊடல்...

செந்தேனே  இரவின் வெண்ணிலவே,
பட்டுக் காட்டில் பெற்றெடுத்தக் கட்டழகே,
வந்தேனே வைகறைப் பெண்ணிலவே,
தொட்டு மண்ணில் விட்டுப் போன முத்தழகே,
நொந்தேனே உன்னாலே என்னிலவே,
கட்டு மரத்தில் கட்டி விட்ட கள்ளழகே...

சோலைகள் கண்டு கருகி - தவித்தேன்
சேலை பெண்ணே ஏன்?
மாலைகள் வண்டு மணிமகுடமோ,
மலை பெண்ணே சொல்?

பதில் கூறு பதற்றம் வேண்டாமடி,
பதபதைத்து என்னை பிதற்ற வைக்காதடி,
காதலே கண்ணின் திரைக்குள் - உன்
விம்பம் கல்லறையான வித்தை விளங்கிடவில்லையடி...

~அன்புடன் கோகுலன்.

Saturday, March 2, 2013

வரமாய் கிடைத்த சாபம்.


விலகிய அந்த நினைவுகளும் மனமே,
தினம் இரவினில் கனவுகளாய் வருமே...

எந்தன் எதிர்காலம் சுவையானது,
காதல் இனித்திடும் புது கனியானது...

மனதுக்குள் மாயமும் இங்கே,
கண்ணுக்குள் இருந்த காயங்கள் எங்கே?

இனி,
இதழ்கள்  இணைத்ததும் நாவும் இனித்திடும்,
முதல் இன்றியே லாபம் நிலைத்திடும்,
திசைகள் எங்கிலும் உந்தன் விம்பங்களும்,
நிலையாய் தோன்றியே என் உயிரை அணைத்திடும்...

என் உலகம் கூட, பிரபஞ்சங்கள் தாண்டி,
புகலிடம் தேடியே, உன் இதய அறைக்குள் நுழையும்...

காதல்! - வரமாய் கிடைத்த சாபமாய் மாறும்...

~அன்புடன் கோகுலன்.

Monday, February 25, 2013

கனவுக் காதலும் வாழ்கவே...


கண்ணே உன் கண்கள் கண்டு காதல் மலர்ந்தது மென்மையாய்,
பெண்ணே உன் மௌனத்தில் மொழிகள் தேடிடும் உள்ளமாய்,
முன்னே நீயும் நிற்கையில் பதைபதைக்கும் தேகமாய்,
மண்ணே ஆறடி நிலமும் அவளின்றேல் எனக்கு ஆகிடும் உண்மையாய்...

ஆசைக் கூட்டி ஆட்டம் தொடங்க,
பரமபதமும் தினம் அழைக்குமே...
ஆசைக் காதலும் இன்றி தனிமையில்,
உள்ளம் மெலிவதை உடல் உணருமே...

முதல் பார்வையில் உனக்குள்ளே ஈர்த்துக்கொண்டாய்,
குளிர் காலத்திலும் உடலை வியர்க்கச் செய்தாய்,
இதயத்தில் சிரங்காய் நீயும் இன்று மாறிவிட்டாய்,
சுரண்டிய வலிகளுடன் வாழ வழியமைத்தாய்...

காரிருள் கானகத்துள் தொலைந்தக் குழந்தையைப் போலவே,
காரிகையே கருங்கூந்தளுக்குள் ஒரு மலராய் நான் வாழவே,
கானல் நீரை கரும் முகிலாய் மாற்றிடும் காதலே,
காற்றிலே மறைந்து கண்களுக்குள் கரைந்த காதலும் வாழ்கவே...

~அன்புடன் கோகுலன்.

Thursday, February 21, 2013

உனக்காக காத்திருப்பேன்...



கண்மூடி கனவை தொட்டு விளையாடு,
மலை குருவியாய் மழைக்குள் குளித்துவிடு,
செந்தேனே நீயும் மலரிடம் மௌனம் கற்றுவிடு,
இசை மீட்டி தமிழையும் திசை எங்கும் பரப்பிவிடு...

துள்ளி திரியும் காற்றே தாய் மொழியால் அழகாக்கிடவா?
மின்னல் கொண்டு மாலை கோர்த்து உனக்கு சூடிடவா?
கொடும் பனியில் என் இதயத்தை நானும் புதைத்திடவா?
என் இதழ் கொண்டு உன் இதழ் தினம் நிதம் நனைத்திடவா?

புல்மீது பூத்த பனித்துளியே,
சூரியனாய் நானும் உன்னை எனக்குள் ஈர்க்கவா?
புன்னைகையால் என்னை நீ சிதைக்கையில்,
இடைமீது நானும் கரம் கொண்டு விடைதேடவா?

அந்தி நேர தென்றலில் ஆற்றங்கரை மணலில்
உன் பாதம் தேடி அலையச் செய்தாய்...
மனம் காதலுடன் கை குலுக்கி கவிதையால் பெயரெழுதி,
காத்திருக்க இன்று நீ பழக்கி விட்டாய்...

~அன்புடன் கோகுலன்.

Wednesday, February 13, 2013

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்... பகுதி 2 (ஆட்டம் முடிந்தது...)


தங்கள் நினைவுகளை இழந்து செய்வதறியாது தவித்திருந்த அவர்களின் வாழ்க்கை சுமூகமடைய மூன்று ஆண்டுகள் சென்றது, இரண்டு வருட நினைவுகளை அவர்கள் முழுமையாகவே தொலைத்து இருந்தனர். நிஷாவின் தந்தை அவளுக்கு விபத்து ஏற்பட்டவுடனேயே அவர்களின் நிறுவனத்தின் பெங்களூர் கிளையை மூடி விட்டார், ஏனெனில் அதனால் தானே இவ்வளவு சேதாரம் என அவர் மனதுக்குள் ஒரு நினைப்பு. நிஷா ஜெர்மெனியில் உள்ள அவர்களின் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த துவங்கினாள். தருண் சென்னையிலேயே பெரிய ஒரு நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்தான். இவ்வாறு இருக்கையில் அவர்கள் இருவருக்கும் தங்கள் இரண்டு வருட வாழ்கையில் என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பத்திலேயே பல நாட்கள் கழித்தனர்.

தருணின் வேலைகளை கண்டு தருணின் நிறுவன அதிபர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார் அவனுக்கு பல விதத்தில் உதவியாக இருந்தவர் அவரே... ஒரு நாள் அவர்கள் நிறுவனத்தில் ஒரு விருந்துபச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மிகவும் பெரிய அளவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது, பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். அங்கு அந்த நிறுவனத்தின் அதிபர் மகளும் வந்திருந்தாள். விருந்துபச்சாரத்தின் நடுப்பகுதியில், "அன்புக்குரியவர்களே, இன்று இங்கு வந்திருக்கும் எல்லாருக்கும் ஓர் சந்தோசமான விடயம் சொல்ல போகிறேன் அது வேறொன்றுமில்லை என் மகள் இனியாவின் திருமணத்தை பற்றிய அறிவிப்பு மாப்பிள்ளை வேற யாருமில்லை உங்களுக்கெல்லாம் மிகவும் பரிட்சியமானவர் தான், தருண்!!!" என்றார் நிறுவனத்தின் அதிபர். குழப்பத்துடன் அவர் அருகே சென்றான் தருண், அருகில் சென்று அதை ஏற்றுக் கொண்டான். கல்யாண வேலைகள் தடபுடலாக ஆரம்பமானது...

ஜெர்மனியில், நிஷாவின் நிறுவனம் அதிக லாபங்கள் ஈட்ட தொடங்கியது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு பலருக்கு சந்தோசம் பலருக்கு பொறாமை, நிஷா தன் தந்தையிடம் சென்று, "அப்பா, நம்ம நிறுவனத்தின் கிளை ஒன்றை இந்தியாவுல தொடங்கலாமே, உங்களுக்கு தான் பெங்களூருல நிறைய பெற தெரியுமே..." என்றாள், அதை கேட்டு திணறிப்போன நிஷாவின் தந்தை "அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை" என்றார் கோபத்துடன், "இல்லப்பா நல்ல வருமானம் வரும்" என கூறி நச்சரித்தாள், அவர் முடியவே முடியாதென கூறி விட்டார். காரணம் கேட்டு நிஷா அவரை குடைந்தெடுத்தாள், அவளை சமாளிக்க முடியாத கட்டத்தில், "பெங்களூர்ல தாம்மா உனக்கு விபத்தாச்சு அதான் வேண்டாம்னு சொல்றேன்ம்மா" என்றார். "இத ஏன்பா முதல்லயே சொல்லல எனக்கு என்ன நடந்துச்சின்னு நான் தெரிஞ்சுக்கணும் தானேப்பா" அழுகையுடன். "இல்லமா உன்னை ஏன் சங்கடத்துல ஆழ்த்துவோம்னு தான் சொல்லலமா", "சரிப்பா நான் இந்தியா போக போறேன் எனக்கு என்ன அந்த இரண்டு வருஷமா நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கப் போறேன்" என்றாள், அவளின் தந்தை எவ்வளவோ தடுத்தும் இந்தியா போவதில் அவள் உறுதியாகவே இருந்தாள், வேறு வழியின்றி அவர் அவளின் கோரிக்கைக்கு உடன் பட்டார், மறுநாள் நிஷா இந்தியாவுக்கு பயணமானாள்.

அதே நேரம் சென்னையில்,
"அண்ணா உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்" என்றாள் தருணின் தங்கை, "என்னமா சொல்லு" தருண் அன்புடன், " அண்ணா இந்த விஷயத்தை நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கணும் இல்லாட்டி என்னைக்கோ ஒரு நாளைக்கு நீங்க கவலை படக்கூடம்" என்று கூறியவள் மேலும் தொடர்ந்தாள் " நீங்க உங்களுக்கு என்ன நடந்துச்சின்னு கேட்டு பல முறை அம்மா,அப்பாவ நச்சரிச்சிருக்கிங்க தானே? நீங்க பெங்களூருல தான் இரண்டு வருஷம் இருந்திங்க அங்க ஒருத்தவங்கள காதலிச்சும் இருந்திங்க அவங்கள கூட்டிக்கிட்டு நீங்க இங்க வரும் போது தான் உங்களுக்கு அந்த விபத்து ஆச்சு" இதை கேடு அதிர்ச்சி அடைந்தான் தருண்,  "இத ஏன் இவ்வளவு காலம் என்கிட்ட சொல்லல?", "இல்லை அண்ணா அம்மாவுக்கு இந்த விஷயம் புடிக்கல அதன் சொல்ல வேண்டாம் என்றாங்க, நீங்க காதலிச்சவங்க பற்றி எங்களுக்கு ஒன்னும் தெரியாது அவங்க பெங்களூருனு மட்டும் தான் தெரியும், அங்க போனிங்கனா மிச்சம் எல்லாம் உங்களுக்கே தெரியவரும்" என்றாள் அமைதியாக... கோபம் கொண்டவனாய் எழுந்தவன், தன் தாய் தந்தையை ஏசிவிட்டு கல்யாண வேலையை நிறுத்தினான். அவன் வேலை செய்த நிறுவனத்தின் அதிபரை கண்டு நடந்ததை கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டான். அவர் அவனுக்கு ஆசி கூறி விடைபெற்றார், கல்யாண வேலைகள் நின்றது, தான் பெங்களூரு கிளம்புவதாக வீட்டில் கூறினான், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை ஆனால் தருணின் அம்மா,"நீ அவளை கண்டுபிடிக்காட்டி நீ இங்க எப்ப வாரியோ அன்று உனக்கு கல்யாணம் - நான் காட்டுற பொண்ணு கூட இதுக்கு ஒத்துகிறதுன இப்ப போ"என்றார், கேலி சிரிப்புடன் "அம்மா என் காதல் உண்மை, நான் என்னைக்கும் பொய்யா ஒருத்திய காதலிச்சிருக்க மாட்டேன் அது உங்களுக்கு தெரியும், நாங்க கட்டாயம் ஒன்னு சேருவோம்" என கூறியவன் பெங்களூருக்கு கிளம்பினான்.

பெங்களூரு,
நினைவுகளை இழந்து தவித்து வந்திருக்கும் இரு பறவைகளுக்கு அவர்களின் கனவுகளை நிஜமாக்கிடுமா? தொடருவோம்...

இருவரும் ஒரே நாள் ஆனால் வேறு வேறு விதமாக பெங்களூரு வந்தடைந்தனர், மனதில் குழப்பம்,சலசலப்பு, தயக்கம், பயம் என்றவாறு பல வித உணர்வுகளுடன் பெங்களூரில் தங்கள் நினைவுகளை தேடும் பணியை துவங்கினர், வெவ்வேறு பாதைகள் பலரை சந்தித்தனர் எவரிடமும் தகுந்த விடையில்லை, நிஷாவின் நிறுவனத்தில் வேலை செய்த எவரும் இப்போது பெங்களூரில் இல்லை அவர்கள் எல்லோரும் வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் நிறுவனம் மூடியவுடன் அவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர், பலரும் நிறுவனம் சடுதியாக மூடப்பட்டதால் அவளின் மேல் கடும் கோபத்தில் இருந்தனர் ஆகவே அவர்கள் நிஷாவுக்கு பதில் கூறிவிட விரும்பவில்லை...

தருண் தான் தங்கியிருந்த இடம் பழைய நண்பர்கள் என தேடினான் அவன் வேலை செய்த நிறுவனம் மூடப்பட்டு 3 வருடம் போனதை மட்டுமே கூறினார்களே தவிர அவன் காதலித்து எவருக்கும் தெரியவில்லை, காரணம் அவன் அந்த விஷயத்தை எவரிடமும் கூறவில்லை மறைத்திருந்தான், ஒரு நாள் மாலை நேரம் தருண் தேநீர் அருந்த ஒரு உணவுச்சாலைக்கு சென்றிருந்தான், அவன் குழப்பத்தில் மூழ்கியவனாக தேநீர் அருந்திவிட்டு எழுந்தான் அப்போது வேறொருவருக்காக கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த தேநீர் தட்டுபட்டு அருகில் இருந்தவர் மேல் கொட்டியது, கோபத்துடன் எழுந்தாள் நிஷா!!!!, " கண்ணு தெரியலையா எங்க பாத்துகிட்டு எழும்புனிங்க?" தருண் திரும்பி நிஷாவை கண்டான் கத்தியவள் அமைதியானாள் "உங்களை எனக்கு தெரியுமா?" என்றாள், தருணுக்கும் எங்கேயோ கண்ட ஞாபகம்," இல்லையே, எனக்கும் உங்களை எங்கையோ கண்ட ஞாபகம் என்றான்.." உடனே நிஷா (மனதுள் :தெரியலைனா தெரியலைன்னு சொல்ல வேண்டியது தானே பொறுக்கி எங்கையோ கண்டு இருக்காறாம் கொஞ்சம் சிரிச்சா போதுமே உடனே பல்ல காட்டிற வேண்டியது) " இல்லை பரவாயில்லை நான் கிளம்புறேன்" என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள், அவள் வெளியே செல்ல அவளை பின்தொடர்ந்தான் தருண்...

அவள் பின்னே திரும்பி பார்க்கும் போது அவன் பின் தொடர்ந்து வருவது அவளுக்கு தெரிந்தது, அவள் அவனை பார்த்த படியே சென்றாள், மிக பெரிய அலறல் அவள் தூக்கி வீசப்பட்டு வீழ்ந்தாள், இரண்டு மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன, பெங்களூரு கண்ட மிகப் பெரிய விபத்துகளில் ஒன்று அது, அந்த விபத்தில் சற்றே காயப்பட்டு பிழைத்தவன் அவள் அருகே ஓடி அவளை தூக்கி கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தான்...

பெங்களூரில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏற்படவில்லை மிகவும் கோரமான சம்பவம் அது, நிஷா அதிகளவில் காயப்பட்டிருந்தாள் அவள் அவசர பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளுக்கு ஓ+ குருதி வகை தேவை பட்டிருந்தது, அதே சம்பவத்தில் சில காயங்களுடன் தப்பிய தருண் அவளுக்கு குருதியை கொடுத்துகொண்டிருந்தான்...

இவன் கண்ணில் கவலையுடன் கலக்கமும் நிறைந்திருந்தது ஏதோ ஒன்று இல்லாமல் போன தவிப்பு இருந்தது, அவள் உயிருக்கு போராடுவதை விட வேறொரு விடயத்தால் மிகவும் நொந்திருந்தாள். நிஷாவுக்கு நினைவு திரும்பவில்லை தருண் அவள் அருகேயே இருந்தான் அவள் தந்தைக்கு செய்தி அனுப்பி இருந்தான், அவர் வந்தவுடன் அவரிடம் அவளை விட்டுவிட்டு அவன் கிளம்பினான். அவர் அவளை ஜெர்மெனிக்கு கொண்டு சென்றார், தருண் நடந்த நிகழ்ச்சியை நினைத்து மிகவும் நொந்தான், தன் பிழையால் தானே இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று கவலையடைந்தான்.. நாட்கள் உருண்டது எந்த நினைவுகளும் அவனுக்கு வரவில்லை, மாதங்கள் போனது குழப்பத்திலேயே வாழ்ந்திருந்தான் அவனுக்கு சென்னையில் இருந்து அழைப்பு வந்தது, அவன் அம்மா "உனக்கு குடுத்த காலம் முடிஞ்சுருச்சு கண்ணா இன்னும் எவ்வளவு காலம் தான் யாருனே தெரியாதவளை தேடுவ? சீக்கிரம் வா!" அதற்கு தருண் கண்கலங்கியவனாய் "உங்க விருப்பப்படியே நடந்துருச்சு, சரி உங்க விருப்பப்படியே கல்யாணத்துக்கு தயார் பண்ணுங்க" என்றான். "நான் அடுத்த 25 வந்துருவேன் இன்னும் இரண்டு கிழமை இருக்கு நான் வார அன்னைக்கே கல்யாணத்தை வைச்சுக்கலாம்" என கூறி அழைப்பை துண்டித்தான்.

25ம் திகதி தருணுக்கு தடபுடலாக கல்யாணம் ஏற்பாடாகியிருந்தது வீடு போய் சேர்ந்தவன், மணமகன் கோலத்தில் மணமேடைக்கு சென்றமர்ந்தான், ஏறியவன் தலை குனிந்தபடியே இருந்தான், அவள் அருகே மணமகள் வந்தமர்ந்தாள் அவன் அருகே அமர்திருந்தவள் தருணின் படமொன்றை அவன் காலருகே வைத்தாள், அதை கண்ட தருண் அந்த படத்தை எடுத்தான், அது மடிக்கப்பட்டு இருந்தது அதை விரித்தான் அதில் அவனருகே ஒரு பெண்... அவனால் அன்று விபத்தில் சிக்கிய பெண்... ஆச்சரியத்துடன் மணப்பெண்ணை பார்த்தான் அங்கே நிஷா அமர்ந்திருந்தாள், அவன் கண்களில் கண்ணீர் அதை துடைத்த நிஷா நான் தான் உங்க நிஷா, நீங்க விரட்டி விரட்டி காதலித்த உங்க நிஷா!" (அன்று விபத்து ஏற்பட்டு அவள் ஜெர்மெனிக்கு கொண்டு சென்றபின் நினைவு திரும்பிய வேளையில் அவளுக்கு பழைய நினைவுகளும் திரும்பியிருந்தது உடனே அவள் தந்தையிடம் கூறி தருண் வீட்டை கண்டறிந்து அவனுக்கு தெரியாமலேயே அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுப்போம் என முடிவெடுத்தவளாய் கல்யாண வேலைகளை செய்தாள் அதன் விளைவே இன்று தருணின் திருமணம்.) என கூறிவிட்டு தருணை அணைத்து மணமேடையிலேயே அவனை முத்தமிட்டாள்.

அவர்கள் காதல் கைகூடியது, எல்லோரும் வாழ்த்த  அவர்களுக்கு திருமணம் நிகழ்ந்தது, தருணுக்கு அவன் முதல் குழந்தை பிறந்த போது பழைய ஞாபகங்கள் வந்து சேர்ந்தது, அந்நாள் அவன் மிகவும் சந்தோஷமடைந்தான்...


"காதல் உண்மையுள்ளங்களை என்றுமே பிரித்து விடுவதில்லை,
உயிருக்குள் உறவாகவே இணைத்துவிடும்
..."

~அன்புடன் கோகுலன்.

Thursday, February 7, 2013

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்...


பெங்களூரில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏற்படவில்லை மிகவும் கோரமான சம்பவம் அது, நிஷா அதிகளவில் காயப்பட்டிருந்தாள் அவள் அவசர பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளுக்கு ஓ+ குருதி வகை தேவை பட்டிருந்தது, அதே சம்பவத்தில் சில காயங்களுடன் தப்பிய தருண் அவளுக்கு குருதியை கொடுத்துகொண்டிருந்தான்...

இவன் கண்ணில் கவலையுடன் கலக்கமும் நிறைந்திருந்தது ஏதோ ஒன்று இல்லாமல் போன தவிப்பு இருந்தது, அவள் உயிருக்கு போராடுவதை விட வேறொரு விடயத்தால் மிகவும் நொந்திருந்தாள்.யார் இவர்கள் இவர்களுக்குள் என்ன? சற்று பின்னோக்கி சென்று பார்போம்...

5 வருடங்களுக்கு முன்பு

தருண் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த வாலிபன்,மிகவும் சுறுசுறுப்பானவன் துருதுரு என திரிவான், 25 வயது அன்று தான் பெங்களூர் வந்திறங்கினான். பெங்களூரில் மிகவும் பிரபல்யமான கணணி நிறுவனத்தில் அவனுக்கு வேலை  கிடைத்திருந்தது. நல்ல சம்பளம் ஓடி வந்துவிட்டான் சென்னையில் இருந்து. முதல் நாள் பெரும் எதிர் பார்ப்புகளுடன் நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தான், சடுதியாக அவன் சென்ற பஸ் வண்டி தரித்தது பெரும் சத்தம், அது முன்னால் வந்த ஒரு காருடன் விபத்துக்குள்ளாகியிருந்தது அரண்டவன் "என்னடா இது முதல் நாளே இப்படி ஆகிவிட்டதே" என்று நொந்து கொண்டு பஸ்ஸில் இருந்து நொந்து கொண்டு இறங்கினான். வெண்ணிற கார் ஒன்று முகப்பு நொறுங்கி கிடந்தது உள்ளே ஒரு பெண் சுயநினைவின்றி மயங்கி கிடந்தாள் யாரும் கவனிப்பாரற்று இருந்தாள் இரத்தம் ஓடி கொண்டு இருந்தது பார்த்து திகைத்தவன் ஓடிச்  சென்று அவளை தூக்கினான் அங்கு நின்றவர்கள் ஏதோ கூறினார் அவர்கள் பேசிய மொழி இவனுக்கு விளங்கவில்லை, அதை அவன் பொருட்படுத்தவும் இல்லை அவளை தூக்கி அங்கு நின்ற ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தான். அவளை வைத்தியசாலையில் அவசர பிரிவில் சேர்த்து விட்டு அங்கு நின்று கொண்டிருந்தான். வைத்தியர் வெளியே வந்து ஓ+ குருதி தேவை என்றார், அவன் தன்னுடையதும் ஓ+ தன என கூறி குருதி வழங்க சென்றான். படுக்கையில் படுத்து குருதி வழங்கிய வண்ணம் தனது  நிலைமையை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான், "முதல் நாளே விடுமுறையா?, என்ன காரணம் சொல்வது இதை சொன்னா நம்புவார்களா? அடுத்த வேலை தேட வேண்டியது தான் போல, என்ன செய்ய எல்லாம் விதி பரவாயில்லை  ஏதோ ஓர் உயிரை காப்பாற்றியதே  பெரிய விஷயம்" என நினைத்து விட்டு குருதி எடுத்து முடிந்ததும் தன் விலாசத்தை கொடுத்து விட்டு வீட்டுக்கு சென்றான்.

மறு நாள் என்ன நடக்குமோ என நினைத்துக்கொண்டே வேலைக்கு கிளம்பினான். நிறுவனத்தை வந்தடைந்தான் நேராக மேலாளரை பார்க்க சென்றான், உள்ளே நுழைந்தவன் வாயை திறக்கும் முன் மேலாளர்,"வாங்க தருண் எப்படி இருக்கீங்க நல்ல நேரம் நேற்று நீங்க வரல நேற்று எங்க உரிமையாளருக்கு ஒரு விபத்து ஆகவே நாங்க நிறுவனத்தை மூட வேண்டிய சூழல்" உடனே தருண் "அவர் இப்ப நல்ல இருக்காரா?", "ஒன்னும் பிரச்சனை இல்லை தருண் நல்ல இருக்காங்க,அடுத்த கிழமை வருவாங்க நீங்களே பார்ப்பிங்க தானே, சரி இது தான் உங்க வேலை பற்றிய அறிக்கை இதற்கேட்ப நீங்க வேலைகளை தொடங்கலாம் உங்க பயிற்றுவிப்பாளர்  இப்ப வைத்தியசாலையில் ஆகவே அவர் வரும் வரை கொஞ்சம் வேலை பழகுங்க வந்தவுடன் அடுத்து என்ன என்னனு பார்ப்போம்"என அவர் முடிக்க நிம்மதி பெருமூச்சி விட்டவனாய் வேலைகளை தொடங்கினான் தருண் இறைவனுக்கு நன்றி கூறியவாறு...

ஒரு கிழமைக்கு பிறகு,

தருண் அவன் நிறுவனத்தை நோக்கி வேகமாய், கோபத்துடன் சென்று கொண்டிருந்தான் அவன் கையில் ஒரு கடிதம் அதில் அவன் வேலையை  விட்டு நீக்கப்பட்டிருப்பதாக இருந்தது, ஏன் காரணமே இல்லாமல் வேலையை விட்டு நீக்கினார்கள் என அவனுக்கு கோபம் நேராக மேலாளரை போய்   பார்த்தான் ஏன் இவ்வாறு ஒரு கடிதம் என கேட்டான்,அவர் தனக்கு ஒன்றும் தெரியாது சென்று  உரிமையாளரை பார்க்க சொல்லி விட்டார். கதவை அடித்து மூடிவிட்டு  உரிமையாளர் அறைக்குள் நுழைந்து கத்த தொடங்கினான், "வணக்கம் தருண்..." என கூறியவாறு கதிரை சுழன்றது, அமர்ந்து இருந்தவரை கண்டதும் அவன் வார்த்தைகள் அடங்கியது காரணம் அது ஒரு அழகிய பெண், தன்னை மறந்து கண்கள் பிளந்து நின்றான்..

"என்னை ஞாபகம் இருக்கா?" அவள் கேட்டாள், "இல்லையே, உங்கள இதற்கு முதல் கண்டதில்லையே!?!", மனதுள் "சட்டப்படி பிகருடா, கத்தி மானமே போச்சு...". "என்னா என்னை தெரியலையா இப்டி ஒரு செம்ம கட்டைய மறந்துடிங்களா?"சிரிப்புடன் அவள் முடிக்க, "உண்மையா  ஞாபகம் இல்லங்க" அசடு வழியும் சிரிப்புடன்... "நீங்க இல்லாட்டி  நான் இன்னைக்கு உயிரோடவே இல்ல தருண், நீங்க தான் அன்னைக்கு என்னை காப்பாத்துனிங்க" என அவள் கூறி முடிக்க அவனுக்கு ஞாபகம் வந்தது, அன்று அவள் முகம் இரத்தத்தால் தோய்ந்திருந்ததால் அவள் முகம் அவனுக்கு சரியாக நினைவில்லை அது மட்டுமன்றி அன்று அவன் அவளை காப்பாற்ற  வேண்டுமென  மட்டுமே போராடிக்கொண்டிருந்தான்.

பிறகு இருவரும் உரையாட தொடங்கினர் அவன் பெங்களூரில் உள்ள அவளின் நிறுவனத்தின் இன்னுமொரு கிளைக்கு மேலாளராக நியமிக்கப் பட்டிருந்தான், அதனாலேயே அவன் அங்கு வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தான் அவனை ஆச்சரியத்துக்குள்ளாக்கவே அதை முதல் அவனிடம் அவள் கூறவில்லை. நாட்கள் ஓட தொடங்கியது அவர்கள் மிகவும் நெருங்கத்தொடங்கினர், அவர்களுக்குள் காதல் பூக்கத்தொடங்கியது...

ஒரு நாள் மாலை வேலை கடலோரம் அவர்கள் உரையாடி கொண்டிருந்தனர், யாருமே இன்றி அமைதியாக அவர்கள் உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது, திடீரென அவன் கத்தினான் அவள் திகைத்தாள் அவன் கண்ணுக்குள் ஒரு எறும்பு விழுந்துவிட்டது கண்திறக்க முடியாது கஷ்டப்பட்டான், "டேய், கொஞ்சம் இருடா நான் எடுக்குறேன்"என்றாள், "போடி எரியுதுடி நீ கை வைக்காத" அவனை அடித்து விட்டு மெதுவாக அவள் கண் இமைகளை  திறந்து ஊதினாள், எறும்பு ஒரு மூலைக்கு சென்று விட்டது அவள் தன் கை விரல்களை போட பார்த்தாள் ஆனால் அவை மாசாக இருந்தது, அவன் எரியுது என குமுறிக்கொண்டு இருந்தான், அவள் அவனை அப்படியே கீழே தள்ளி, அவன் மேல் ஏறி, அவன் இமைகளை திறந்து தன் நுனி நாக்கால் அந்த இரும்பை தொட்டு எடுத்தாள்... இவன் உடல் பரவசத்தில் ஆடிப்போய் இருந்தது, அவன் இரு விழிகளும் திறந்தான் அவள் கண்களை பார்த்தான், இருவர் கண்களும் காதலால் நிறைந்திருந்தது... "நான் உன் மேல உயிரா இருக்கேன்டி" என கூறி முடிக்க அவள் அவனது உதடுகளை மெல்ல சுவைத்தாள்.

காதல் ஆனந்தநிலை பரவசத்தின் உச்சம் உலகில் பலரின் தவம் சிலரின் வரம் ஒரு சிலருக்கு யுத்தம் தருனைப் போல் அவனுக்குள்  யுத்தம்  தொடங்கியது, அவர்களின் தொடர்பு அவன் வீட்டுக்கு தெரிய வந்தது, அவர்கள் இந்த சம்பந்தத்தை விரும்பவே இல்லை அவனை கண்டித்தனர் அவனுக்கோ வேறு வழி  எதுவும் தெரியவில்லை அவன் வீட்டுக்கு சென்று அவர்களை சமாதனப்படுத்த முடிவெடுத்தான், நிஷா தானும் அவனுடன் வருவதாகக் கூறினாள், அவன் எவ்வளவோ வேணாம் என்று கூறியும் அவள் தான் வந்தே தீருவேன் என அடம்பிடித்தால் வேறு வழியின்றி இவனும் அவளை அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் பேரூந்தில் ஏறி சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். "நிஷா எனக்கு என்ன செய்றதுனே தெரில வீட்ல அம்மா வேணாம்னு சொல்றாங்க அவங்கள சமாலிக்கிறது தான்  பெரிய விஷயம் ஆனா நீ இல்லாம எனக்கு வாழ ஏழாது  பேசாம செத்துடலாம் போல இருக்கு" என அவன் கூறி முடிக்க அவன் வாயை அவள் அடைத்தாள். அவன் மார்பில் அவள் தலை வைத்தாள். அகோர சத்தம் பேருந்து ஒரு கல் பாறையில் பாதை விலகி சென்று மோதியது, பேருந்தில் இருந்த எல்லாரும் பிரண்டனர், இருவரும் பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டனர் அவர்கள் உடல் வேறுவேறாக பிரிந்து வீழ்ந்தது. கடுமையாக அடிபட்டது இருவருக்கும்...!

அங்கு வந்த ஊர்காரர்கள் எல்லோரையும் வைத்தியசாலையில் கொண்டு சேர்த்தனர் நிஷாவும்,தருணும் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவர் தலையிலும் பலமாக அடிபட்டு இருந்தது. இருவரும் சுயநினைவின்றி இருந்தனர். நிஷாவின் தந்தை ஜேர்மனியிலிருந்து வந்து அவளை அங்கு மருத்துவத்துக்காக அழைத்து சென்றார், தருண் சென்னையில் ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். இருவருக்கும் சுயநினைவில்லாமலேயே சிகிச்சை நடந்தது, கோமாவில் இருந்தனர் இருவரும்..

மூன்று மாதம் கழித்து இருவருக்கும் நினைவு திரும்பி கண் திறந்தனர் மெல்ல மெல்ல விழிகளை திறந்தனர் . இரு குடும்பத்தாருக்கும் சந்தோஷம் ஆனால் யாரும் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்திருந்தது அவர்கள் இருவருக்கும் கடந்த சில வருட நினைவுகள் மறந்து போய் விட்டது.

 "அம்மா எனக்கு என்ன ஆச்சு? கடைசியா நான் பரீட்சை எழுதிட்டு வந்தது தான் ஞாபகம் இருக்கு..." என தருண் கூற, அதே நேரம் ஜேர்மனியில் நிஷா "அப்பா எனக்கு சஞ்சய புடிகலன்னு உங்க கிட்ட சொன்னேன் தானே அப்பறம் ஏன் கட்டாயப் படுத்துநிங்க இப்ப பாருங்க நான் அடிப்பட்டு இங்க கிடக்குறேன்", அதற்கு நிஷாவின் தந்தை "இல்ல நிஷா நான் தான் அது அப்பவே உன் விருப்பம்னு சொல்லிட்டனே அது நடந்து கிட்டத்தட்ட 2 வருஷம் இருக்கும்மா" என கேள்வியுடன் சொல்லி முடிக்க" என்னப்பா சொல்றிங்க அப்பா இது நடந்து ரெண்டு வருஷம்னா இந்த ரெண்டு வருஷமா என்ன நடந்துச்சி?", அதே நேரம் சென்னையில் "சொல்லுங்கம்மா இந்த ரெண்டு வருஷமா என்ன நடந்துச்சு?" என்றான் தருண் குழப்பத்தில்...

தொடரும்...

~அன்புடன் கோகுலன்.

Monday, January 14, 2013

மடமையை மன்னிப்பாயா?


விளையாடி திரிந்த என்னை விண்ணை நோக்கிப் பார்க்கச் செய்தாய்,
தனியாய் வாழ்ந்த என்னை தினம் உன்னால் திணறச் செய்தாய்,
கனவுகளோ உந்தன் நினைவின் வரங்கள்,
விழிக்குள் தினமும் உன் விம்பத்தின் நிழல்கள்...

நான் பேசும் நொடிகளை என்னால் நீ வெறுக்கிறாய்,
மௌனங்கள் தழுவி என்னை நீ கொல்கிறாய்,
என் வலிகள் கோபங்களாய் உன்னை வாட்டுதோ?
உன் கண்ணீர் என்னால் நிதம் பெருகுதோ?

பேதையடி நான் மடமையுள் மூழ்கினேன்,
சில கணம் அதனால் என்னையே நான் வெறுக்கிறேன்,
பெண்ணல்ல நீ எனக்காய் பிறந்த தேவதை,
உன்னை சரணடைந்து மரணிக்க இன்று விரும்பினேன்...

என் கனவுகளும் ஈரம் காணுதோ,
இருள் விலகியும் இமை திறக்க மறுக்குதோ,
நான் செய்த தவறுகள் கோடி தான்,
உன்னிடம் மன்னிப்பு கேட்டு நிற்கும் பாவி நான்...

~அன்புடன் கோகுலன்.

Friday, January 11, 2013

விடை தேடும் விடைகள்...



மனமே மனமே மௌனம் ஏனோ?
உன் மௌனம் என் மனதின் மரணம் தானோ?
கனவுக்குள் தினமும் நான் தரிப்பது வீணோ?
கண்கள் இமைக்கையில் உயிர் கலங்குவதும் ஏனோ?

இமைகள் திறந்தது இமைக்க மறந்தது,
விழிக்குள் உன் விம்பத்தை பதுக்கிடவே,
வருஷம் கடக்குது வயதும் போகுது,
பதைபதைக்கும் பாதையும் தெளியுமோ?

இதயம் என்பது சதை தானா?
தினம் நினைவுகள் சிக்கிடும் வலை தானா?
தேகமும் கூட சடலமாகையில்,
இதயம் மட்டும் உன்னால் வாழ தவிப்பது வீணா?

நிறங்களும் இன்றி ஒரு வானவில்,
வானில் தோன்றினால் தெரியுமா?
காதலால் அவள் என்னுள் நிறைந்து விட்டாள்,
அவள் இருந்தும் இன்றி தவிக்க விட்டாள்...

~அன்புடன் கோகுலன்.

Thursday, January 10, 2013

பரபரப்பான விற்பனையில்...


 
"அடிபட்டவன்,
அடைந்திடவில்லை,
அடங்கிடவில்லை,
அடிஎடுத்தேன்,
தடம்பதித்தேன்..."

~அன்புடன் கோகுலன்.