Monday, January 14, 2013

மடமையை மன்னிப்பாயா?


விளையாடி திரிந்த என்னை விண்ணை நோக்கிப் பார்க்கச் செய்தாய்,
தனியாய் வாழ்ந்த என்னை தினம் உன்னால் திணறச் செய்தாய்,
கனவுகளோ உந்தன் நினைவின் வரங்கள்,
விழிக்குள் தினமும் உன் விம்பத்தின் நிழல்கள்...

நான் பேசும் நொடிகளை என்னால் நீ வெறுக்கிறாய்,
மௌனங்கள் தழுவி என்னை நீ கொல்கிறாய்,
என் வலிகள் கோபங்களாய் உன்னை வாட்டுதோ?
உன் கண்ணீர் என்னால் நிதம் பெருகுதோ?

பேதையடி நான் மடமையுள் மூழ்கினேன்,
சில கணம் அதனால் என்னையே நான் வெறுக்கிறேன்,
பெண்ணல்ல நீ எனக்காய் பிறந்த தேவதை,
உன்னை சரணடைந்து மரணிக்க இன்று விரும்பினேன்...

என் கனவுகளும் ஈரம் காணுதோ,
இருள் விலகியும் இமை திறக்க மறுக்குதோ,
நான் செய்த தவறுகள் கோடி தான்,
உன்னிடம் மன்னிப்பு கேட்டு நிற்கும் பாவி நான்...

~அன்புடன் கோகுலன்.

Friday, January 11, 2013

விடை தேடும் விடைகள்...



மனமே மனமே மௌனம் ஏனோ?
உன் மௌனம் என் மனதின் மரணம் தானோ?
கனவுக்குள் தினமும் நான் தரிப்பது வீணோ?
கண்கள் இமைக்கையில் உயிர் கலங்குவதும் ஏனோ?

இமைகள் திறந்தது இமைக்க மறந்தது,
விழிக்குள் உன் விம்பத்தை பதுக்கிடவே,
வருஷம் கடக்குது வயதும் போகுது,
பதைபதைக்கும் பாதையும் தெளியுமோ?

இதயம் என்பது சதை தானா?
தினம் நினைவுகள் சிக்கிடும் வலை தானா?
தேகமும் கூட சடலமாகையில்,
இதயம் மட்டும் உன்னால் வாழ தவிப்பது வீணா?

நிறங்களும் இன்றி ஒரு வானவில்,
வானில் தோன்றினால் தெரியுமா?
காதலால் அவள் என்னுள் நிறைந்து விட்டாள்,
அவள் இருந்தும் இன்றி தவிக்க விட்டாள்...

~அன்புடன் கோகுலன்.

Thursday, January 10, 2013

பரபரப்பான விற்பனையில்...


 
"அடிபட்டவன்,
அடைந்திடவில்லை,
அடங்கிடவில்லை,
அடிஎடுத்தேன்,
தடம்பதித்தேன்..."

~அன்புடன் கோகுலன்.