Monday, February 25, 2013

கனவுக் காதலும் வாழ்கவே...


கண்ணே உன் கண்கள் கண்டு காதல் மலர்ந்தது மென்மையாய்,
பெண்ணே உன் மௌனத்தில் மொழிகள் தேடிடும் உள்ளமாய்,
முன்னே நீயும் நிற்கையில் பதைபதைக்கும் தேகமாய்,
மண்ணே ஆறடி நிலமும் அவளின்றேல் எனக்கு ஆகிடும் உண்மையாய்...

ஆசைக் கூட்டி ஆட்டம் தொடங்க,
பரமபதமும் தினம் அழைக்குமே...
ஆசைக் காதலும் இன்றி தனிமையில்,
உள்ளம் மெலிவதை உடல் உணருமே...

முதல் பார்வையில் உனக்குள்ளே ஈர்த்துக்கொண்டாய்,
குளிர் காலத்திலும் உடலை வியர்க்கச் செய்தாய்,
இதயத்தில் சிரங்காய் நீயும் இன்று மாறிவிட்டாய்,
சுரண்டிய வலிகளுடன் வாழ வழியமைத்தாய்...

காரிருள் கானகத்துள் தொலைந்தக் குழந்தையைப் போலவே,
காரிகையே கருங்கூந்தளுக்குள் ஒரு மலராய் நான் வாழவே,
கானல் நீரை கரும் முகிலாய் மாற்றிடும் காதலே,
காற்றிலே மறைந்து கண்களுக்குள் கரைந்த காதலும் வாழ்கவே...

~அன்புடன் கோகுலன்.

Thursday, February 21, 2013

உனக்காக காத்திருப்பேன்...



கண்மூடி கனவை தொட்டு விளையாடு,
மலை குருவியாய் மழைக்குள் குளித்துவிடு,
செந்தேனே நீயும் மலரிடம் மௌனம் கற்றுவிடு,
இசை மீட்டி தமிழையும் திசை எங்கும் பரப்பிவிடு...

துள்ளி திரியும் காற்றே தாய் மொழியால் அழகாக்கிடவா?
மின்னல் கொண்டு மாலை கோர்த்து உனக்கு சூடிடவா?
கொடும் பனியில் என் இதயத்தை நானும் புதைத்திடவா?
என் இதழ் கொண்டு உன் இதழ் தினம் நிதம் நனைத்திடவா?

புல்மீது பூத்த பனித்துளியே,
சூரியனாய் நானும் உன்னை எனக்குள் ஈர்க்கவா?
புன்னைகையால் என்னை நீ சிதைக்கையில்,
இடைமீது நானும் கரம் கொண்டு விடைதேடவா?

அந்தி நேர தென்றலில் ஆற்றங்கரை மணலில்
உன் பாதம் தேடி அலையச் செய்தாய்...
மனம் காதலுடன் கை குலுக்கி கவிதையால் பெயரெழுதி,
காத்திருக்க இன்று நீ பழக்கி விட்டாய்...

~அன்புடன் கோகுலன்.

Wednesday, February 13, 2013

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்... பகுதி 2 (ஆட்டம் முடிந்தது...)


தங்கள் நினைவுகளை இழந்து செய்வதறியாது தவித்திருந்த அவர்களின் வாழ்க்கை சுமூகமடைய மூன்று ஆண்டுகள் சென்றது, இரண்டு வருட நினைவுகளை அவர்கள் முழுமையாகவே தொலைத்து இருந்தனர். நிஷாவின் தந்தை அவளுக்கு விபத்து ஏற்பட்டவுடனேயே அவர்களின் நிறுவனத்தின் பெங்களூர் கிளையை மூடி விட்டார், ஏனெனில் அதனால் தானே இவ்வளவு சேதாரம் என அவர் மனதுக்குள் ஒரு நினைப்பு. நிஷா ஜெர்மெனியில் உள்ள அவர்களின் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த துவங்கினாள். தருண் சென்னையிலேயே பெரிய ஒரு நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்தான். இவ்வாறு இருக்கையில் அவர்கள் இருவருக்கும் தங்கள் இரண்டு வருட வாழ்கையில் என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பத்திலேயே பல நாட்கள் கழித்தனர்.

தருணின் வேலைகளை கண்டு தருணின் நிறுவன அதிபர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார் அவனுக்கு பல விதத்தில் உதவியாக இருந்தவர் அவரே... ஒரு நாள் அவர்கள் நிறுவனத்தில் ஒரு விருந்துபச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மிகவும் பெரிய அளவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது, பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். அங்கு அந்த நிறுவனத்தின் அதிபர் மகளும் வந்திருந்தாள். விருந்துபச்சாரத்தின் நடுப்பகுதியில், "அன்புக்குரியவர்களே, இன்று இங்கு வந்திருக்கும் எல்லாருக்கும் ஓர் சந்தோசமான விடயம் சொல்ல போகிறேன் அது வேறொன்றுமில்லை என் மகள் இனியாவின் திருமணத்தை பற்றிய அறிவிப்பு மாப்பிள்ளை வேற யாருமில்லை உங்களுக்கெல்லாம் மிகவும் பரிட்சியமானவர் தான், தருண்!!!" என்றார் நிறுவனத்தின் அதிபர். குழப்பத்துடன் அவர் அருகே சென்றான் தருண், அருகில் சென்று அதை ஏற்றுக் கொண்டான். கல்யாண வேலைகள் தடபுடலாக ஆரம்பமானது...

ஜெர்மனியில், நிஷாவின் நிறுவனம் அதிக லாபங்கள் ஈட்ட தொடங்கியது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு பலருக்கு சந்தோசம் பலருக்கு பொறாமை, நிஷா தன் தந்தையிடம் சென்று, "அப்பா, நம்ம நிறுவனத்தின் கிளை ஒன்றை இந்தியாவுல தொடங்கலாமே, உங்களுக்கு தான் பெங்களூருல நிறைய பெற தெரியுமே..." என்றாள், அதை கேட்டு திணறிப்போன நிஷாவின் தந்தை "அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை" என்றார் கோபத்துடன், "இல்லப்பா நல்ல வருமானம் வரும்" என கூறி நச்சரித்தாள், அவர் முடியவே முடியாதென கூறி விட்டார். காரணம் கேட்டு நிஷா அவரை குடைந்தெடுத்தாள், அவளை சமாளிக்க முடியாத கட்டத்தில், "பெங்களூர்ல தாம்மா உனக்கு விபத்தாச்சு அதான் வேண்டாம்னு சொல்றேன்ம்மா" என்றார். "இத ஏன்பா முதல்லயே சொல்லல எனக்கு என்ன நடந்துச்சின்னு நான் தெரிஞ்சுக்கணும் தானேப்பா" அழுகையுடன். "இல்லமா உன்னை ஏன் சங்கடத்துல ஆழ்த்துவோம்னு தான் சொல்லலமா", "சரிப்பா நான் இந்தியா போக போறேன் எனக்கு என்ன அந்த இரண்டு வருஷமா நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கப் போறேன்" என்றாள், அவளின் தந்தை எவ்வளவோ தடுத்தும் இந்தியா போவதில் அவள் உறுதியாகவே இருந்தாள், வேறு வழியின்றி அவர் அவளின் கோரிக்கைக்கு உடன் பட்டார், மறுநாள் நிஷா இந்தியாவுக்கு பயணமானாள்.

அதே நேரம் சென்னையில்,
"அண்ணா உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்" என்றாள் தருணின் தங்கை, "என்னமா சொல்லு" தருண் அன்புடன், " அண்ணா இந்த விஷயத்தை நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கணும் இல்லாட்டி என்னைக்கோ ஒரு நாளைக்கு நீங்க கவலை படக்கூடம்" என்று கூறியவள் மேலும் தொடர்ந்தாள் " நீங்க உங்களுக்கு என்ன நடந்துச்சின்னு கேட்டு பல முறை அம்மா,அப்பாவ நச்சரிச்சிருக்கிங்க தானே? நீங்க பெங்களூருல தான் இரண்டு வருஷம் இருந்திங்க அங்க ஒருத்தவங்கள காதலிச்சும் இருந்திங்க அவங்கள கூட்டிக்கிட்டு நீங்க இங்க வரும் போது தான் உங்களுக்கு அந்த விபத்து ஆச்சு" இதை கேடு அதிர்ச்சி அடைந்தான் தருண்,  "இத ஏன் இவ்வளவு காலம் என்கிட்ட சொல்லல?", "இல்லை அண்ணா அம்மாவுக்கு இந்த விஷயம் புடிக்கல அதன் சொல்ல வேண்டாம் என்றாங்க, நீங்க காதலிச்சவங்க பற்றி எங்களுக்கு ஒன்னும் தெரியாது அவங்க பெங்களூருனு மட்டும் தான் தெரியும், அங்க போனிங்கனா மிச்சம் எல்லாம் உங்களுக்கே தெரியவரும்" என்றாள் அமைதியாக... கோபம் கொண்டவனாய் எழுந்தவன், தன் தாய் தந்தையை ஏசிவிட்டு கல்யாண வேலையை நிறுத்தினான். அவன் வேலை செய்த நிறுவனத்தின் அதிபரை கண்டு நடந்ததை கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டான். அவர் அவனுக்கு ஆசி கூறி விடைபெற்றார், கல்யாண வேலைகள் நின்றது, தான் பெங்களூரு கிளம்புவதாக வீட்டில் கூறினான், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை ஆனால் தருணின் அம்மா,"நீ அவளை கண்டுபிடிக்காட்டி நீ இங்க எப்ப வாரியோ அன்று உனக்கு கல்யாணம் - நான் காட்டுற பொண்ணு கூட இதுக்கு ஒத்துகிறதுன இப்ப போ"என்றார், கேலி சிரிப்புடன் "அம்மா என் காதல் உண்மை, நான் என்னைக்கும் பொய்யா ஒருத்திய காதலிச்சிருக்க மாட்டேன் அது உங்களுக்கு தெரியும், நாங்க கட்டாயம் ஒன்னு சேருவோம்" என கூறியவன் பெங்களூருக்கு கிளம்பினான்.

பெங்களூரு,
நினைவுகளை இழந்து தவித்து வந்திருக்கும் இரு பறவைகளுக்கு அவர்களின் கனவுகளை நிஜமாக்கிடுமா? தொடருவோம்...

இருவரும் ஒரே நாள் ஆனால் வேறு வேறு விதமாக பெங்களூரு வந்தடைந்தனர், மனதில் குழப்பம்,சலசலப்பு, தயக்கம், பயம் என்றவாறு பல வித உணர்வுகளுடன் பெங்களூரில் தங்கள் நினைவுகளை தேடும் பணியை துவங்கினர், வெவ்வேறு பாதைகள் பலரை சந்தித்தனர் எவரிடமும் தகுந்த விடையில்லை, நிஷாவின் நிறுவனத்தில் வேலை செய்த எவரும் இப்போது பெங்களூரில் இல்லை அவர்கள் எல்லோரும் வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் நிறுவனம் மூடியவுடன் அவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர், பலரும் நிறுவனம் சடுதியாக மூடப்பட்டதால் அவளின் மேல் கடும் கோபத்தில் இருந்தனர் ஆகவே அவர்கள் நிஷாவுக்கு பதில் கூறிவிட விரும்பவில்லை...

தருண் தான் தங்கியிருந்த இடம் பழைய நண்பர்கள் என தேடினான் அவன் வேலை செய்த நிறுவனம் மூடப்பட்டு 3 வருடம் போனதை மட்டுமே கூறினார்களே தவிர அவன் காதலித்து எவருக்கும் தெரியவில்லை, காரணம் அவன் அந்த விஷயத்தை எவரிடமும் கூறவில்லை மறைத்திருந்தான், ஒரு நாள் மாலை நேரம் தருண் தேநீர் அருந்த ஒரு உணவுச்சாலைக்கு சென்றிருந்தான், அவன் குழப்பத்தில் மூழ்கியவனாக தேநீர் அருந்திவிட்டு எழுந்தான் அப்போது வேறொருவருக்காக கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த தேநீர் தட்டுபட்டு அருகில் இருந்தவர் மேல் கொட்டியது, கோபத்துடன் எழுந்தாள் நிஷா!!!!, " கண்ணு தெரியலையா எங்க பாத்துகிட்டு எழும்புனிங்க?" தருண் திரும்பி நிஷாவை கண்டான் கத்தியவள் அமைதியானாள் "உங்களை எனக்கு தெரியுமா?" என்றாள், தருணுக்கும் எங்கேயோ கண்ட ஞாபகம்," இல்லையே, எனக்கும் உங்களை எங்கையோ கண்ட ஞாபகம் என்றான்.." உடனே நிஷா (மனதுள் :தெரியலைனா தெரியலைன்னு சொல்ல வேண்டியது தானே பொறுக்கி எங்கையோ கண்டு இருக்காறாம் கொஞ்சம் சிரிச்சா போதுமே உடனே பல்ல காட்டிற வேண்டியது) " இல்லை பரவாயில்லை நான் கிளம்புறேன்" என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள், அவள் வெளியே செல்ல அவளை பின்தொடர்ந்தான் தருண்...

அவள் பின்னே திரும்பி பார்க்கும் போது அவன் பின் தொடர்ந்து வருவது அவளுக்கு தெரிந்தது, அவள் அவனை பார்த்த படியே சென்றாள், மிக பெரிய அலறல் அவள் தூக்கி வீசப்பட்டு வீழ்ந்தாள், இரண்டு மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன, பெங்களூரு கண்ட மிகப் பெரிய விபத்துகளில் ஒன்று அது, அந்த விபத்தில் சற்றே காயப்பட்டு பிழைத்தவன் அவள் அருகே ஓடி அவளை தூக்கி கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தான்...

பெங்களூரில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏற்படவில்லை மிகவும் கோரமான சம்பவம் அது, நிஷா அதிகளவில் காயப்பட்டிருந்தாள் அவள் அவசர பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளுக்கு ஓ+ குருதி வகை தேவை பட்டிருந்தது, அதே சம்பவத்தில் சில காயங்களுடன் தப்பிய தருண் அவளுக்கு குருதியை கொடுத்துகொண்டிருந்தான்...

இவன் கண்ணில் கவலையுடன் கலக்கமும் நிறைந்திருந்தது ஏதோ ஒன்று இல்லாமல் போன தவிப்பு இருந்தது, அவள் உயிருக்கு போராடுவதை விட வேறொரு விடயத்தால் மிகவும் நொந்திருந்தாள். நிஷாவுக்கு நினைவு திரும்பவில்லை தருண் அவள் அருகேயே இருந்தான் அவள் தந்தைக்கு செய்தி அனுப்பி இருந்தான், அவர் வந்தவுடன் அவரிடம் அவளை விட்டுவிட்டு அவன் கிளம்பினான். அவர் அவளை ஜெர்மெனிக்கு கொண்டு சென்றார், தருண் நடந்த நிகழ்ச்சியை நினைத்து மிகவும் நொந்தான், தன் பிழையால் தானே இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று கவலையடைந்தான்.. நாட்கள் உருண்டது எந்த நினைவுகளும் அவனுக்கு வரவில்லை, மாதங்கள் போனது குழப்பத்திலேயே வாழ்ந்திருந்தான் அவனுக்கு சென்னையில் இருந்து அழைப்பு வந்தது, அவன் அம்மா "உனக்கு குடுத்த காலம் முடிஞ்சுருச்சு கண்ணா இன்னும் எவ்வளவு காலம் தான் யாருனே தெரியாதவளை தேடுவ? சீக்கிரம் வா!" அதற்கு தருண் கண்கலங்கியவனாய் "உங்க விருப்பப்படியே நடந்துருச்சு, சரி உங்க விருப்பப்படியே கல்யாணத்துக்கு தயார் பண்ணுங்க" என்றான். "நான் அடுத்த 25 வந்துருவேன் இன்னும் இரண்டு கிழமை இருக்கு நான் வார அன்னைக்கே கல்யாணத்தை வைச்சுக்கலாம்" என கூறி அழைப்பை துண்டித்தான்.

25ம் திகதி தருணுக்கு தடபுடலாக கல்யாணம் ஏற்பாடாகியிருந்தது வீடு போய் சேர்ந்தவன், மணமகன் கோலத்தில் மணமேடைக்கு சென்றமர்ந்தான், ஏறியவன் தலை குனிந்தபடியே இருந்தான், அவள் அருகே மணமகள் வந்தமர்ந்தாள் அவன் அருகே அமர்திருந்தவள் தருணின் படமொன்றை அவன் காலருகே வைத்தாள், அதை கண்ட தருண் அந்த படத்தை எடுத்தான், அது மடிக்கப்பட்டு இருந்தது அதை விரித்தான் அதில் அவனருகே ஒரு பெண்... அவனால் அன்று விபத்தில் சிக்கிய பெண்... ஆச்சரியத்துடன் மணப்பெண்ணை பார்த்தான் அங்கே நிஷா அமர்ந்திருந்தாள், அவன் கண்களில் கண்ணீர் அதை துடைத்த நிஷா நான் தான் உங்க நிஷா, நீங்க விரட்டி விரட்டி காதலித்த உங்க நிஷா!" (அன்று விபத்து ஏற்பட்டு அவள் ஜெர்மெனிக்கு கொண்டு சென்றபின் நினைவு திரும்பிய வேளையில் அவளுக்கு பழைய நினைவுகளும் திரும்பியிருந்தது உடனே அவள் தந்தையிடம் கூறி தருண் வீட்டை கண்டறிந்து அவனுக்கு தெரியாமலேயே அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுப்போம் என முடிவெடுத்தவளாய் கல்யாண வேலைகளை செய்தாள் அதன் விளைவே இன்று தருணின் திருமணம்.) என கூறிவிட்டு தருணை அணைத்து மணமேடையிலேயே அவனை முத்தமிட்டாள்.

அவர்கள் காதல் கைகூடியது, எல்லோரும் வாழ்த்த  அவர்களுக்கு திருமணம் நிகழ்ந்தது, தருணுக்கு அவன் முதல் குழந்தை பிறந்த போது பழைய ஞாபகங்கள் வந்து சேர்ந்தது, அந்நாள் அவன் மிகவும் சந்தோஷமடைந்தான்...


"காதல் உண்மையுள்ளங்களை என்றுமே பிரித்து விடுவதில்லை,
உயிருக்குள் உறவாகவே இணைத்துவிடும்
..."

~அன்புடன் கோகுலன்.

Thursday, February 7, 2013

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்...


பெங்களூரில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏற்படவில்லை மிகவும் கோரமான சம்பவம் அது, நிஷா அதிகளவில் காயப்பட்டிருந்தாள் அவள் அவசர பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளுக்கு ஓ+ குருதி வகை தேவை பட்டிருந்தது, அதே சம்பவத்தில் சில காயங்களுடன் தப்பிய தருண் அவளுக்கு குருதியை கொடுத்துகொண்டிருந்தான்...

இவன் கண்ணில் கவலையுடன் கலக்கமும் நிறைந்திருந்தது ஏதோ ஒன்று இல்லாமல் போன தவிப்பு இருந்தது, அவள் உயிருக்கு போராடுவதை விட வேறொரு விடயத்தால் மிகவும் நொந்திருந்தாள்.யார் இவர்கள் இவர்களுக்குள் என்ன? சற்று பின்னோக்கி சென்று பார்போம்...

5 வருடங்களுக்கு முன்பு

தருண் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த வாலிபன்,மிகவும் சுறுசுறுப்பானவன் துருதுரு என திரிவான், 25 வயது அன்று தான் பெங்களூர் வந்திறங்கினான். பெங்களூரில் மிகவும் பிரபல்யமான கணணி நிறுவனத்தில் அவனுக்கு வேலை  கிடைத்திருந்தது. நல்ல சம்பளம் ஓடி வந்துவிட்டான் சென்னையில் இருந்து. முதல் நாள் பெரும் எதிர் பார்ப்புகளுடன் நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தான், சடுதியாக அவன் சென்ற பஸ் வண்டி தரித்தது பெரும் சத்தம், அது முன்னால் வந்த ஒரு காருடன் விபத்துக்குள்ளாகியிருந்தது அரண்டவன் "என்னடா இது முதல் நாளே இப்படி ஆகிவிட்டதே" என்று நொந்து கொண்டு பஸ்ஸில் இருந்து நொந்து கொண்டு இறங்கினான். வெண்ணிற கார் ஒன்று முகப்பு நொறுங்கி கிடந்தது உள்ளே ஒரு பெண் சுயநினைவின்றி மயங்கி கிடந்தாள் யாரும் கவனிப்பாரற்று இருந்தாள் இரத்தம் ஓடி கொண்டு இருந்தது பார்த்து திகைத்தவன் ஓடிச்  சென்று அவளை தூக்கினான் அங்கு நின்றவர்கள் ஏதோ கூறினார் அவர்கள் பேசிய மொழி இவனுக்கு விளங்கவில்லை, அதை அவன் பொருட்படுத்தவும் இல்லை அவளை தூக்கி அங்கு நின்ற ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தான். அவளை வைத்தியசாலையில் அவசர பிரிவில் சேர்த்து விட்டு அங்கு நின்று கொண்டிருந்தான். வைத்தியர் வெளியே வந்து ஓ+ குருதி தேவை என்றார், அவன் தன்னுடையதும் ஓ+ தன என கூறி குருதி வழங்க சென்றான். படுக்கையில் படுத்து குருதி வழங்கிய வண்ணம் தனது  நிலைமையை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான், "முதல் நாளே விடுமுறையா?, என்ன காரணம் சொல்வது இதை சொன்னா நம்புவார்களா? அடுத்த வேலை தேட வேண்டியது தான் போல, என்ன செய்ய எல்லாம் விதி பரவாயில்லை  ஏதோ ஓர் உயிரை காப்பாற்றியதே  பெரிய விஷயம்" என நினைத்து விட்டு குருதி எடுத்து முடிந்ததும் தன் விலாசத்தை கொடுத்து விட்டு வீட்டுக்கு சென்றான்.

மறு நாள் என்ன நடக்குமோ என நினைத்துக்கொண்டே வேலைக்கு கிளம்பினான். நிறுவனத்தை வந்தடைந்தான் நேராக மேலாளரை பார்க்க சென்றான், உள்ளே நுழைந்தவன் வாயை திறக்கும் முன் மேலாளர்,"வாங்க தருண் எப்படி இருக்கீங்க நல்ல நேரம் நேற்று நீங்க வரல நேற்று எங்க உரிமையாளருக்கு ஒரு விபத்து ஆகவே நாங்க நிறுவனத்தை மூட வேண்டிய சூழல்" உடனே தருண் "அவர் இப்ப நல்ல இருக்காரா?", "ஒன்னும் பிரச்சனை இல்லை தருண் நல்ல இருக்காங்க,அடுத்த கிழமை வருவாங்க நீங்களே பார்ப்பிங்க தானே, சரி இது தான் உங்க வேலை பற்றிய அறிக்கை இதற்கேட்ப நீங்க வேலைகளை தொடங்கலாம் உங்க பயிற்றுவிப்பாளர்  இப்ப வைத்தியசாலையில் ஆகவே அவர் வரும் வரை கொஞ்சம் வேலை பழகுங்க வந்தவுடன் அடுத்து என்ன என்னனு பார்ப்போம்"என அவர் முடிக்க நிம்மதி பெருமூச்சி விட்டவனாய் வேலைகளை தொடங்கினான் தருண் இறைவனுக்கு நன்றி கூறியவாறு...

ஒரு கிழமைக்கு பிறகு,

தருண் அவன் நிறுவனத்தை நோக்கி வேகமாய், கோபத்துடன் சென்று கொண்டிருந்தான் அவன் கையில் ஒரு கடிதம் அதில் அவன் வேலையை  விட்டு நீக்கப்பட்டிருப்பதாக இருந்தது, ஏன் காரணமே இல்லாமல் வேலையை விட்டு நீக்கினார்கள் என அவனுக்கு கோபம் நேராக மேலாளரை போய்   பார்த்தான் ஏன் இவ்வாறு ஒரு கடிதம் என கேட்டான்,அவர் தனக்கு ஒன்றும் தெரியாது சென்று  உரிமையாளரை பார்க்க சொல்லி விட்டார். கதவை அடித்து மூடிவிட்டு  உரிமையாளர் அறைக்குள் நுழைந்து கத்த தொடங்கினான், "வணக்கம் தருண்..." என கூறியவாறு கதிரை சுழன்றது, அமர்ந்து இருந்தவரை கண்டதும் அவன் வார்த்தைகள் அடங்கியது காரணம் அது ஒரு அழகிய பெண், தன்னை மறந்து கண்கள் பிளந்து நின்றான்..

"என்னை ஞாபகம் இருக்கா?" அவள் கேட்டாள், "இல்லையே, உங்கள இதற்கு முதல் கண்டதில்லையே!?!", மனதுள் "சட்டப்படி பிகருடா, கத்தி மானமே போச்சு...". "என்னா என்னை தெரியலையா இப்டி ஒரு செம்ம கட்டைய மறந்துடிங்களா?"சிரிப்புடன் அவள் முடிக்க, "உண்மையா  ஞாபகம் இல்லங்க" அசடு வழியும் சிரிப்புடன்... "நீங்க இல்லாட்டி  நான் இன்னைக்கு உயிரோடவே இல்ல தருண், நீங்க தான் அன்னைக்கு என்னை காப்பாத்துனிங்க" என அவள் கூறி முடிக்க அவனுக்கு ஞாபகம் வந்தது, அன்று அவள் முகம் இரத்தத்தால் தோய்ந்திருந்ததால் அவள் முகம் அவனுக்கு சரியாக நினைவில்லை அது மட்டுமன்றி அன்று அவன் அவளை காப்பாற்ற  வேண்டுமென  மட்டுமே போராடிக்கொண்டிருந்தான்.

பிறகு இருவரும் உரையாட தொடங்கினர் அவன் பெங்களூரில் உள்ள அவளின் நிறுவனத்தின் இன்னுமொரு கிளைக்கு மேலாளராக நியமிக்கப் பட்டிருந்தான், அதனாலேயே அவன் அங்கு வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தான் அவனை ஆச்சரியத்துக்குள்ளாக்கவே அதை முதல் அவனிடம் அவள் கூறவில்லை. நாட்கள் ஓட தொடங்கியது அவர்கள் மிகவும் நெருங்கத்தொடங்கினர், அவர்களுக்குள் காதல் பூக்கத்தொடங்கியது...

ஒரு நாள் மாலை வேலை கடலோரம் அவர்கள் உரையாடி கொண்டிருந்தனர், யாருமே இன்றி அமைதியாக அவர்கள் உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது, திடீரென அவன் கத்தினான் அவள் திகைத்தாள் அவன் கண்ணுக்குள் ஒரு எறும்பு விழுந்துவிட்டது கண்திறக்க முடியாது கஷ்டப்பட்டான், "டேய், கொஞ்சம் இருடா நான் எடுக்குறேன்"என்றாள், "போடி எரியுதுடி நீ கை வைக்காத" அவனை அடித்து விட்டு மெதுவாக அவள் கண் இமைகளை  திறந்து ஊதினாள், எறும்பு ஒரு மூலைக்கு சென்று விட்டது அவள் தன் கை விரல்களை போட பார்த்தாள் ஆனால் அவை மாசாக இருந்தது, அவன் எரியுது என குமுறிக்கொண்டு இருந்தான், அவள் அவனை அப்படியே கீழே தள்ளி, அவன் மேல் ஏறி, அவன் இமைகளை திறந்து தன் நுனி நாக்கால் அந்த இரும்பை தொட்டு எடுத்தாள்... இவன் உடல் பரவசத்தில் ஆடிப்போய் இருந்தது, அவன் இரு விழிகளும் திறந்தான் அவள் கண்களை பார்த்தான், இருவர் கண்களும் காதலால் நிறைந்திருந்தது... "நான் உன் மேல உயிரா இருக்கேன்டி" என கூறி முடிக்க அவள் அவனது உதடுகளை மெல்ல சுவைத்தாள்.

காதல் ஆனந்தநிலை பரவசத்தின் உச்சம் உலகில் பலரின் தவம் சிலரின் வரம் ஒரு சிலருக்கு யுத்தம் தருனைப் போல் அவனுக்குள்  யுத்தம்  தொடங்கியது, அவர்களின் தொடர்பு அவன் வீட்டுக்கு தெரிய வந்தது, அவர்கள் இந்த சம்பந்தத்தை விரும்பவே இல்லை அவனை கண்டித்தனர் அவனுக்கோ வேறு வழி  எதுவும் தெரியவில்லை அவன் வீட்டுக்கு சென்று அவர்களை சமாதனப்படுத்த முடிவெடுத்தான், நிஷா தானும் அவனுடன் வருவதாகக் கூறினாள், அவன் எவ்வளவோ வேணாம் என்று கூறியும் அவள் தான் வந்தே தீருவேன் என அடம்பிடித்தால் வேறு வழியின்றி இவனும் அவளை அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் பேரூந்தில் ஏறி சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். "நிஷா எனக்கு என்ன செய்றதுனே தெரில வீட்ல அம்மா வேணாம்னு சொல்றாங்க அவங்கள சமாலிக்கிறது தான்  பெரிய விஷயம் ஆனா நீ இல்லாம எனக்கு வாழ ஏழாது  பேசாம செத்துடலாம் போல இருக்கு" என அவன் கூறி முடிக்க அவன் வாயை அவள் அடைத்தாள். அவன் மார்பில் அவள் தலை வைத்தாள். அகோர சத்தம் பேருந்து ஒரு கல் பாறையில் பாதை விலகி சென்று மோதியது, பேருந்தில் இருந்த எல்லாரும் பிரண்டனர், இருவரும் பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டனர் அவர்கள் உடல் வேறுவேறாக பிரிந்து வீழ்ந்தது. கடுமையாக அடிபட்டது இருவருக்கும்...!

அங்கு வந்த ஊர்காரர்கள் எல்லோரையும் வைத்தியசாலையில் கொண்டு சேர்த்தனர் நிஷாவும்,தருணும் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவர் தலையிலும் பலமாக அடிபட்டு இருந்தது. இருவரும் சுயநினைவின்றி இருந்தனர். நிஷாவின் தந்தை ஜேர்மனியிலிருந்து வந்து அவளை அங்கு மருத்துவத்துக்காக அழைத்து சென்றார், தருண் சென்னையில் ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். இருவருக்கும் சுயநினைவில்லாமலேயே சிகிச்சை நடந்தது, கோமாவில் இருந்தனர் இருவரும்..

மூன்று மாதம் கழித்து இருவருக்கும் நினைவு திரும்பி கண் திறந்தனர் மெல்ல மெல்ல விழிகளை திறந்தனர் . இரு குடும்பத்தாருக்கும் சந்தோஷம் ஆனால் யாரும் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்திருந்தது அவர்கள் இருவருக்கும் கடந்த சில வருட நினைவுகள் மறந்து போய் விட்டது.

 "அம்மா எனக்கு என்ன ஆச்சு? கடைசியா நான் பரீட்சை எழுதிட்டு வந்தது தான் ஞாபகம் இருக்கு..." என தருண் கூற, அதே நேரம் ஜேர்மனியில் நிஷா "அப்பா எனக்கு சஞ்சய புடிகலன்னு உங்க கிட்ட சொன்னேன் தானே அப்பறம் ஏன் கட்டாயப் படுத்துநிங்க இப்ப பாருங்க நான் அடிப்பட்டு இங்க கிடக்குறேன்", அதற்கு நிஷாவின் தந்தை "இல்ல நிஷா நான் தான் அது அப்பவே உன் விருப்பம்னு சொல்லிட்டனே அது நடந்து கிட்டத்தட்ட 2 வருஷம் இருக்கும்மா" என கேள்வியுடன் சொல்லி முடிக்க" என்னப்பா சொல்றிங்க அப்பா இது நடந்து ரெண்டு வருஷம்னா இந்த ரெண்டு வருஷமா என்ன நடந்துச்சி?", அதே நேரம் சென்னையில் "சொல்லுங்கம்மா இந்த ரெண்டு வருஷமா என்ன நடந்துச்சு?" என்றான் தருண் குழப்பத்தில்...

தொடரும்...

~அன்புடன் கோகுலன்.