Saturday, March 2, 2013

வரமாய் கிடைத்த சாபம்.


விலகிய அந்த நினைவுகளும் மனமே,
தினம் இரவினில் கனவுகளாய் வருமே...

எந்தன் எதிர்காலம் சுவையானது,
காதல் இனித்திடும் புது கனியானது...

மனதுக்குள் மாயமும் இங்கே,
கண்ணுக்குள் இருந்த காயங்கள் எங்கே?

இனி,
இதழ்கள்  இணைத்ததும் நாவும் இனித்திடும்,
முதல் இன்றியே லாபம் நிலைத்திடும்,
திசைகள் எங்கிலும் உந்தன் விம்பங்களும்,
நிலையாய் தோன்றியே என் உயிரை அணைத்திடும்...

என் உலகம் கூட, பிரபஞ்சங்கள் தாண்டி,
புகலிடம் தேடியே, உன் இதய அறைக்குள் நுழையும்...

காதல்! - வரமாய் கிடைத்த சாபமாய் மாறும்...

~அன்புடன் கோகுலன்.

2 comments: