Friday, April 26, 2013

அழகின் மாயம்

உன் கண்கள் கண்டதும் ஏற்பட்ட மயக்கம்,
 என் உள்ளத்துள் நான் உணர்ந்த நடுக்கம்,
வெண் முகிலுக்குள் ஏற்பட்ட அந்த கலக்கம்,
 என் காதல் சொல்ல வழியின்றி தவித்த தயக்கம்...

உன்னுடன் பல ஜென்மம் நான் வாழ்ந்த நெருக்கம்,
 என்னுடன் புதிதாய் இன்று பூத்திருக்கும் வெட்கம்,
மண்ணுடன் நான் வாழும் இக்காலம் இனி சுவர்க்கம்,
 மானுடன் என் வாழ்க்கையில் வீசிய புது மகரந்தம்...

என் விழிக்குள் இன்று நான் செதுக்கிய உன் சிற்பம்,
 இங்கு கல் பட்டும் நொறுங்கிடாத கண்ணாடி இதயம்,
பெண் கண்டு விறைத்திருந்தும் ஏதோ சிறு வெப்பம்,
 அங்கு பாலைநிலத்தில் நான் தொலைத்துவிட்ட தடயம்..

உன் பெயர் எழுத்துக் கூட்டி எழுதவே தோன்றிடும் கவிதையும்,
 பெண் நீ என் கண்ணுள் சிக்கியதால் ஏற்பட்ட இம்மாற்றமும்,
மண் உலகம் நான் விட்டு விண்ணுலகம் வென்றிட இன்று வித்திடும்,
 உன்  ஞாபகங்களும் இனி என் வாழ்கையை அழகாய் சிதைத்தே செதுக்கிடும்...

~அன்புடன் கோகுலன்.

Sunday, April 21, 2013

உன்னால் மயங்கினேன்...

என் தோழியே.. என் தோழில் சாய்ந்துவிடு,
 கண் மூடியே... கனவுகள் காண்போம் வந்துவிடு,
விண் நாடியே... விரைவோமா? சம்மதித்திடு,
 பெண் ராணியே... என் விரல்களுக்குள் உன் விரல்கள் சேர்த்துவிடு...

வயதிருக்கு நமக்கு வாழ்ந்திடவே வழிகள் திறந்தே இருக்கு,
 கொய்து நீ சென்ற என் இதயம் வாழ்த்திட உன் உயிரும் இருக்கு,
பெய்து நின்ற இம்மழையில் நனைந்து, காய்ந்தே என் உடலுமிருக்கு,
 ஆய்ந்து விட்ட என் உயிர் திரும்பிடாத உன் கடனுமிருக்கு...

கண் முழுதும் உன் நினைவுகள் ரேகையாய் மாறுதே,
 என் தேகம் உன் உதட்டின் ஈரம் பட்டுக் குளிர்ந்துப் போனதே,
மண் முழுதும் படரும் உன் நிழலில் குடிப்புகுந்திட என் உயிர் ஏங்குதே,
 மின் பாய்ந்த மரமாய் உன் பார்வையால் என் உதிரமெல்லாம் கருகியதே...

தன்னந்தனியாய் பேசி தவிக்கும் இந்நாட்கள்,
 வெட்டவெளியில் பட்ட மரமாய் பட்டுப் போன வார்த்தைகள்,
தொட்டுப் போவாயா என சுடுபட்டுப் போய் காத்திருக்கும் காலங்கள்,
 என்று தான் என்னை விட்டு மறையுமோ?
நீ இன்றியே இந்த உலகும் மாயமோ?
 உன் நினைவே இறுதியில் என்னை மாய்க்குமோ?

~அன்புடன் கோகுலன்.

Friday, April 12, 2013

இதுவா தனிமை?

கள்ளச் சிறுக்கி ஏன்டி என் உசுர
மட்டும் நீ பறிச்சுப் போன?
கொல்லும் பார்வையாள என் உசுர
கொத்தி நீயும் பிரிச்சுப் போன...
முதல் மழை தொட்டப் பாதையில,
மண் வாசணை நெறயும் வேளையில,
ஒத்தயில உன்ன எதிர்பார்த்து,
தனிமையில ஏன்டி என்ன தவிக்க வச்ச?

உன் குரலுக்காக காத்திருக்கேன் நிதமும்,
நீ பேசிப் போன வார்த்தைகள் மட்டும் நினைச்சிருக்கேன் தினமும்...

சொல்லு புள்ள இது நியாயமா?
காதலின் ஒரு சுகம் இந்தக் காயமா?
வெயிலில் என் மனமும் காயுமா?
உன் நிழல் வரும்வரை தவிக்குமா?

போதும் போடி உந்தன் கல் மனசு,
சாகுதேடி தனிமையில் என் மனசு,
சொல்லும் வரைக் கூடவே இருந்துப்புட்டு,
சொன்னப் பிறகு போய் விட்டாயே என்ன தவிக்க விட்டு...

உடம்பு மெலியுதே புள்ள,
ஒருக்க எட்டிப் பாரு கனவுக்குள்ள - நீ மெல்ல...
சோலைத் தேடி உன் நெனப்புல,
புதையுரேனே இந்த தனிமை சேத்துக்குள்ள...

ஏன்  புலம்பல கேக்க நாதியுமில்ல,
அத  சொல்லித் தவிக்க வார்த்தைகள் இல்ல,
உன் கிட்ட சொல்லிடவும் வார்த்தைகள் வெளிவரவில்ல,
இந்த தனிமை வழிப் போல வேறெதுவும் என்ன வாட்டுனதேயில்ல...

எழுதுற எழுத்தெல்லாம் உன் பேரா மாருதுப் புள்ள,
உன் பேர எழுதி அத கட்டிக்கிட்டு தூங்குறேன் புள்ள,
முத்தம் இடும் சத்தம் கூட மறந்துருச்சே புள்ள,
சத்தியமா நீ இல்லாட்டி செத்துருவேன் புள்ள...

முகில் இல்லாத வானத்துல,
 ஊணம் கொண்ட நிலவாய் நட்சத்திரத்துக்கு மத்தியில,
நண்பர்கள் என்ன சூழ்ந்து இருந்தாலும்,
உன் நெனப்பு என் கண்கள நனைக்குதே ஏன்டி புள்ள...

தக்காளி உன் சிரிப்பு என் கனவ நிறைக்குது தினமும்,
உன்ன காண தாண்டி தினமும் தூங்குறேன் நான் பகலும்,
பத்திரமா இரு என் உயிரே,
உனக்காய் உன்ன நினைச்சு வாழும் காலமும் கொடுமையான சுகமே...

~அன்புடன் கோகுலன்.