Skip to main content

பிரிவு


மாடி-1                                                                                                                      படி-2


வாழ்கை ஒரு நாடக மேடை, வாழ்கை ஒரு சக்கரம் என பலர் பலவாறு கூறுவதை தினமும் கேட்டு வளர்கிறோம். இதற்கு புதிதாக ஓர் அர்த்தத்தை வழங்க முடிவு செய்து விழிகள் புத்தகங்கள் சிலவற்றை ஊடுறுவத் தொடங்கியது. பல மணிநேர முயற்சிக்கு பின்பு தெளிவாக ஒன்று மட்டும் விளங்கியது, அர்த்தம் தேடிட இது ஒன்றும் ஆங்கில புத்தகத்தில் நான் வாசித்த இலக்கிய சொல் அல்ல என்பது. உண்மைதான் வாழ்கையை நாம் வாழ்ந்து தான் அர்த்தம் தேடிட முடியுமே தவிர, ஆராய்ச்சியால் அல்ல.

 ஏன் இவன் திடீர் என்று வாழ்கையை பற்றி அலட்டிக் கொண்டு இருக்கிறான் என நீங்கள் என்ன கூடும். ரசித்து வாசிக்கும் வாசகனுக்கு அது இரண்டாம் வசனம் வாசிக்கும் போதே என்ன கூறப் போகிறேன் என அவனுக்கு விளங்கி இருக்கும், "உண்மைதானே?"-விளங்கியவரிடம், சரி உங்களுக்கு இனி சொல்கிறேன்,எல்லாவற்றுக்கும் ஒரு முகப்பு அவசியம் அல்லவா? அதுதான்."சம்பந்தம் இல்லாமல் குழப்புகிறானே..." என என்ன வேண்டாம் சம்பந்தமுண்டு கட்டுரைக்கு இது அவசியம் .

வாழ்கையில் நாம் இன்பம், துன்பம், தவிப்பு, சலனம், நிம்மதி, தடங்கல், நிறைவு,காதல் போன்ற பலவற்றை சந்தித்திருக்கிறோம் அதில் முக்கியமான ஒரு பகுதி எனக்கு, நான் இங்கு கூறப்போவது, சிலருக்கு அது அவர்கள் கடந்து வந்த பாதையை பொருத்தது.அனுபவசாலிகள் அப்படித்தான் என்னவென்று யோசிக்காதிர்கள் தலைப்பை பற்றித்தான் கூறுகிறேன், "பிரிவு" அனுபவசாலிகளுக்கு ஆயிரத்தில் ஒன்று, என் போல் சாதரணமானவனுக்கு அனுபவத்துக்கு ஒன்று...

 ஏன் இன்று பிரிவைப் பற்றி பேசுகிறான் என நீங்கள் என்னக்கூடும். இது ஒரு பொது விடயம் ஆனால் மனதளவில் பலரையும் பாதிப்படையச்செய்யும்  நிகழ்வு, பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்கக் கூடும் இப்பொழுது, சரி பொதுவாக அலசி, துவைத்து, காயவைக்கும் அளவுக்கு எனக்கு அனுபவமில்லை ஆகவே நான் சந்தித்த பிரிவுகளின்/பிரிவின் தொகுப்பைத் தருகிறேன். தொகுப்பு என்று கூறிவிட்டு அதிகளவில் அடுக்கி விடப்போவதில்லை.ஒரு சில முக்கியமான நிகழ்வுகளை அல்லது ஒரு நிகழ்வை பற்றி மட்டுமே எழுதப்போகிறேன், பார்ப்போம் எவ்வளவு முடியும் என்று அது என் நினைவுகளைப் பொறுத்தது...

 வாழ்நாளில் நான் பல பிரிவுகளைச் சந்தித்திருப்பினும் கூட மனம் எதிலும் சலனம் அடைந்ததில்லை எதிலும் பெரிதாக காயப்பட்டதில்லை.பிரிவில் என்னை மிகவும் பாதித்தது ஒரே விடயம் தான் அது  என் அம்மம்மாவின் இறப்பு தாயின் ஸ்தானத்தில் இருந்து என்னை நேசித்து வளர்த்தவர்,இந்த உலகில் நான் அதிகளவில் நேசித்த மனிதரில் ஒருவர் அதிலும் என்னை மிகவும் நேசித்த மனிதரில் ஒருவர். அம்மாவை விடவா? என நீங்கள் என்ன கூடும், அம்மா என்னை நேசிப்பதை போல தம்பியையும் நேசிக்க வேண்டும் நாங்கள் இருவரும் அவரின் இரு கண்கள் ஆனால் என் அம்மம்மாவுக்கு எத்தனை பேரன்,பேத்திமார் இருப்பினும் எனக்கு காட்டிய அளவுக்கு யாருக்கும் பாசத்தை காட்டவில்லை என்றே கூறலாம்.

அவரை பற்றி நினைக்கும் போதே கண்கள் கலங்குகிறது கண்ணீரால் நிரம்புகிறது,கவலை! மனதில் ஆழமாக ஏற்பட்ட காயம் "அழுதுவிட்டேன்". அடிக்கடி அவர் நினைப்பு என்னை கண்கலங்க வைத்துவிடும்,பிரிவின் வேதனையை நான் உணர்ந்த முதல் தருணம். புவிஅதிர்ச்சியை என் உள்ளம் உணர்ந்தத்  தருணம், அவரின் ஆத்மா ஆழ்ந்த உறக்கத்தை தழுவிய அந்த நொடி.இறந்துவிட்டார், என்னைப்  பிரிந்து சென்றுவிட்டார் என்பதை மனம் இன்னும் ஏற்க மறுக்கிறது.எங்கோ என்னைப்  பார்த்துக்  கொண்டு இருக்கிறார், எனக்காக காத்துக் கொண்டுயிருக்கிறார் எனும் எண்ணம் என்னைச் சுற்றி தினமும் ஓடுகிறது.

ஏன் அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என சிலர் கேட்கலாம்,மறந்தால் தானே அதை மறுபடி நினைக்க என் மனம் கேள்வி கேட்பவருக்கு தரும் பதில். என் மனம் படும் அவஸ்தையை நான் யாரிடமும் சொல்லவில்லை காரணம் அதை கேட்க பெரும்பாலும் எவரும் விரும்பவில்லை.ஆயினும் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து இறுக்கம் கொண்டு தவிப்பதை விட இங்கு கொட்டிவிடுவது சற்று மனதை இலகுவாக்கும். பிரிவுகளின் வேதனை பலருக்கும் உண்டு ஆனால் கண் முன்னே அவர் பிரிந்துச்சென்ற அந்த நொடி நான் உடைந்ததை இன்றும் மறந்திட முடியவில்லை, நிம்மதியான உறக்கம் தான், உறக்கத்திலேயே ஏற்பட்ட மரணம் எவருக்கும் அந்த பாக்கியம் இலகுவாக கிடைத்து விடுவதில்லை கேட்பவருக்கு நான் சொன்ன பதில்..., அனால் "அம்மா! என்னை தனியாக விட்டுவிட்டாயே!உன் மகனை பார்த்துக்கொள்ள இனி யார் இருக்கிறார்கள்?" என எண்ணிப் பார்க்கும் முன்பே என்னை பிரிந்து சென்றுவிட்டார்.

வருடக்கணக்கில் பக்குவமாய் செதுக்கிய சிலை ஒரு நொடியில் சிதையும் போது அதை செதுக்கிய சிற்பியின் நிலை தான், அன்று நான் உணர்ந்தது. குளிர்ச்சியை விரும்பாத உடல் குளிர்ந்துப் போனது,என் தலையை மிருதுவாய் தடவும் விரல்கள் விரைத்துப் போனது, எனக்காய் ஓடித் திரிந்தக் கால்கள் நின்றுவிட்டது. எனை பாசத்துடன் பார்த்திருக்கும் அந்த விழிகள் மங்கிவிட்டது, "அப்பா,மகனே" என அழைத்த அந்தக் குரல் இனி கேட்க்காது. இதுதான் உலக நியதியா? இதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கையா? கத்தி அழுது உருண்டு வீழ்ந்தேன், துடிதுடித்தேன், உடல் நடுக்கம் கொண்டது, பயம் அறிந்தேன், பதறிப்போனேன்...

உள்ளம் கண்ட உயரிய அதிர்ச்சி அது, என்னை வளர்த்த தாய், என்னை நேசித்த, மிகவும் நேசித்த ஒரே ஜீவன் என்னை பிரிந்துவிட்டாள் , தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டாள், என் வளர்ச்சியை காண இன்று அவள் இல்லை,எதை செய்தாலும் அவரிடம் சொல்லாமல் இருந்ததில்லை. இன்று அவரை பற்றி ஒரு கட்டுரையை எழுதும் அளவுக்கு செய்துவிட்டார். அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது ஆனாலும் நான் வாசித்துப் புரியவைப்பேன் ஆனால் அவரை பற்றி எழுதி இன்று நான் இந்த வெண் காகிதத்தை நனைப்பேன் என கடைசிவரை நான் நினைத்ததில்லை. தனிமையின்  கொடுமையை உணர்ந்துவிட்டேன். அம்மா,அப்பா அன்புக்கு இலக்கணமானவர்கள், ஆனால் என் அம்மம்மா அவ்  இலக்கணம் எழுதிடும் மொழியனவர். நான் கவலையில் துடிப்பது எவருக்கும் தெரியாது, கூறி என்ன செய்வது என தெரியவில்லை. "இப்பொழுது மட்டும் ஏன் கூறினாய்?" என எதாவது ஒரு ஜீவன் கட்டாயம் கேட்கும். அவை ஏதாவது பிழைக் கண்டறிய வேண்டுமே.. என கேட்க எத்தணிப்பது.. அவற்றுக்கு நான் விளக்கிடத் தேவையில்லை, சோற்றுக்கு இடையே சிக்கிய கல் போன்றவர்கள் அவர்கள், தூக்கி எரிந்து விட வேண்டுமே தவிரச்  சாப்பிடக்கூடாது.

இதற்கு மேல் அவரை பற்றி அந்த பிரிவைப்பற்றி நான் எழுத விரும்பவில்லை, கண்ணீரின் அளவு அதிகரிப்பதை உணர்கிறேன். என் உயிரை கவலை எனும் கொடூரன் இறுக்குவதை உணர்கிறேன். தலைக்குள் ஏதோ வெடிப்பது போலத் தோன்றுகிறது,முடியவில்லை தொடர்ந்திட, முடித்துக்கொள்கிறேன். எழுத்து தொடரும்...

~அன்புடன் கோகுலன்.

Comments

  1. She was a nice person.
    And she will remain as a nice memory forever. :(

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

துவக்கம்... (The Beginning)

இன்று மனம் ஏனோ சற்று இளைப்பாற தொடங்கியது,ஏதாவது செய்வோம் என தொடங்க ஏதோ சில தடங்கல்கள் செய்ய விடாமல் தடுத்தது." சரி போகட்டும் நாளை பார்த்துகொள்வோம் " தினமும் எம்மில் பலரும் உச்சரிக்கும் மந்திரம். பத்திரிகை தொட்டேன், வாசித்த மனமோ சற்று தமிழை காதலிக்க தொடங்கியது, எழுத்தில் எனக்கும் ஆர்வம் உண்டு அனால் யாரும் கண்டுகொண்டதில்லை, எழுத்தில் ஆர்வம் இருப்பினும் எழுதுபவன் எழுத்தில் அழகும் வேண்டும் - சிலர் கருத்து. வழக்கமாக இவ்வேளைகளில் கவிதைகளுக்கு வித்திடும் பேனா இன்று தமிழுக்கு விருந்து வைக்க தொடங்கியது. உவமைகளை உருப்பமைய தீட்டிட நான் அனுபவசாலி அல்ல புதிதாய் பூத்த பூவாய் பூவுலகை பார்க்கும் பாக்கியசாலி என வைத்துக் கொள்ளலாம். பிழைகள் இருக்கலாம் கட்டாயம் எழுத்து பிழைகள் இருக்கும் தொட்டில் பழக்கம் விடுவது கடினம், முயற்சிக்கிறேன் பார்ப்போம்.  எழுத தொடங்கி விட்டேன் தலைப்பு எதுவுமில்லை மனம் எழுத எத்தணிக்கிறது. "ச்சே!" தமிழ் பசியை போக்க முயலுகிறது நுளம்பு, அடித்துவிட்டேன், இறந்து விட்டது, தொடரலாம் ... படிப்பதற்கு பல விடயம் உண்டு, விரும்பவில்லை மனம் இப்பொழுது, நேரம்...

ஒரு கதை...

படிக்க தொடங்கி 5 நிமிடம் கூட ஆகவில்லை, தூக்கம் கண்ணை மிருதுவாக வருடுகிறது. என்ன செய்ய? பொதுவாக இளம் வயதில் உள்ள பலரின் பரம்பரை நோய் இது. கையடக்கத் தொலைபேசியில் கோலமிடத் தொடங்கியது விரல்கள், இசையில் நனையலாம் என பாடல்கள் சில தேடினேன் காதல் பாடல்களின் தொகுப்பே அதிகமாக இருந்தது, உனது தொலைப்பேசித்தானே நீ தானே அதில் அந்த பாடல்களைச் சேமித்திருப்பாய் என நீங்கள் கேட்க்கக் கூடும். உண்மைதான் தமிழ் திரையிசைப் பாடல்களில் நம்மில் பலரின் மனதை கவருவது ஏனோ இந்த வகைப் பாடல்கள் தான். சிறுவயதில் பெரிதாக யாரும் இவ்வகைப்பாடல்களை விரும்புவதில்லை ஆனால் கட்டிளமைப் பருவத்தை தொட்டவுடன் பெண்களை நோக்கி எம் பார்வையில் அப்பப்பா எவ்வளவு காதலடா? அதோடு மனது காதல் பாடல்களின் வசம் ஈர்க்கப் படுகிறது, ஒவ்வொரு வரியையும் ரசிக்கத் தொடங்குகிறது, சில நேரம் மனனம் கூட செய்து விடுகிறது மனது - நாம் அல்ல மனதே ... ஐயோ பாவம் யார் செய்த தவமோ? யார் அளித்த வரமோ? தெரியாது மானுடரில் பலருக்கு இப்படி நடக்கிறது. பாடல்களோடு மட்டுமல்ல காதல் திரைப்படங்கள்,புத்தகங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,மிகவும் முக்கியமாக சிலரின் அ...

காதலர் தின சிறப்பு கதை..

கனவின் கதைகள்... பெங்களூரில் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய விபத்து ஒன்று ஏற்படவில்லை மிகவும் கோரமான சம்பவம் அது, நிஷா அதிகளவில் காயப்பட்டிருந்தாள் அவள் அவசர பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளுக்கு ஓ+ குருதி வகை தேவை பட்டிருந்தது, அதே சம்பவத்தில் சில காயங்களுடன் தப்பிய தருண் அவளுக்கு குருதியை கொடுத்துகொண்டிருந்தான்... இவன் கண்ணில் கவலையுடன் கலக்கமும் நிறைந்திருந்தது ஏதோ ஒன்று இல்லாமல் போன தவிப்பு இருந்தது, அவள் உயிருக்கு போராடுவதை விட வேறொரு விடயத்தால் மிகவும் நொந்திருந்தாள்.யார் இவர்கள் இவர்களுக்குள் என்ன? சற்று பின்னோக்கி சென்று பார்போம்... 5 வருடங்களுக்கு முன்பு தருண் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த வாலிபன்,மிகவும் சுறுசுறுப்பானவன் துருதுரு என திரிவான், 25 வயது அன்று தான் பெங்களூர் வந்திறங்கினான். பெங்களூரில் மிகவும் பிரபல்யமான கணணி நிறுவனத்தில் அவனுக்கு வேலை  கிடைத்திருந்தது. நல்ல சம்பளம் ஓடி வந்துவிட்டான் சென்னையில் இருந்து. முதல் நாள் பெரும் எதிர் பார்ப்புகளுடன் நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தான், சடுதியாக அவன் சென்ற பஸ் ...