Friday, April 26, 2013

அழகின் மாயம்

உன் கண்கள் கண்டதும் ஏற்பட்ட மயக்கம்,
 என் உள்ளத்துள் நான் உணர்ந்த நடுக்கம்,
வெண் முகிலுக்குள் ஏற்பட்ட அந்த கலக்கம்,
 என் காதல் சொல்ல வழியின்றி தவித்த தயக்கம்...

உன்னுடன் பல ஜென்மம் நான் வாழ்ந்த நெருக்கம்,
 என்னுடன் புதிதாய் இன்று பூத்திருக்கும் வெட்கம்,
மண்ணுடன் நான் வாழும் இக்காலம் இனி சுவர்க்கம்,
 மானுடன் என் வாழ்க்கையில் வீசிய புது மகரந்தம்...

என் விழிக்குள் இன்று நான் செதுக்கிய உன் சிற்பம்,
 இங்கு கல் பட்டும் நொறுங்கிடாத கண்ணாடி இதயம்,
பெண் கண்டு விறைத்திருந்தும் ஏதோ சிறு வெப்பம்,
 அங்கு பாலைநிலத்தில் நான் தொலைத்துவிட்ட தடயம்..

உன் பெயர் எழுத்துக் கூட்டி எழுதவே தோன்றிடும் கவிதையும்,
 பெண் நீ என் கண்ணுள் சிக்கியதால் ஏற்பட்ட இம்மாற்றமும்,
மண் உலகம் நான் விட்டு விண்ணுலகம் வென்றிட இன்று வித்திடும்,
 உன்  ஞாபகங்களும் இனி என் வாழ்கையை அழகாய் சிதைத்தே செதுக்கிடும்...

~அன்புடன் கோகுலன்.

No comments:

Post a Comment