Thursday, December 20, 2012

காத்திருந்த காலம்...

   மாடி 1                                                                                                                                 படி 4

மார்கழி மாத குளிர் மனதோடு ஏற்படும் சில உணர்வுகள், கண்கள் மூடி இமைகள் திறக்கும் முன் சடுதியாக ஓடிவும் நிகழ்வுகள், பெயர் கூறி கூப்பிட பயபட்டவாறு பதுங்கிக்கிடக்கும் தருணங்கள், இவை ஒரு சில இளமையின் அழகிய நிழல்கள்.ஹரியின் வாழ்வில் நடந்தேறிய அவன் வாழ்வின் இனிமையான தருணங்கள், இளம் வயதில் அவன் சந்தித்தப் பெண்ணால் ஏற்பட்ட காதலின் அவஸ்தைகள்.

ஹரி இக்கதையின் கதாநாயகன்,கல்லூரியில் 2ம் வருட மாணவன் திடகாத்திரமான உடல்வாகு,அழகிய தோற்றத்துக்கு சொந்தக்காரன், பெண்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒருவன்.அவன் சிரிப்பு,பேச்சுக்கு மயங்காத பெண்களே இல்லை, ஆனால் உண்மையான ஒரு காதலை கண்டிராத மனம் கொண்டவன். கண்னனுக்கேற்ற ராதையை தேடித்திரிந்தான். நேஹா, திறந்திருக்கும் கண்களின் விம்பங்களை நிரப்பிச் செல்பவள், தேவதைக்கான விளக்கத்தை தருபவள். தொடுவானத்தில் பூத்த வெண்ணிலவால் செதுக்கி சிலையாக உருவாக்கப்பட்டவள். எந்த ஆணிடமும் இலகுவில் சிக்காத அழகியப் பூங்கொத்து, ஹரி படிக்கும் அதே கல்லூரியில் 2ம் வருட மாணவி ஆனால் வேறுப் பிரிவு. காலம் இவர்கள் இருவரின் வாழ்வில் செய்த குழப்பங்களின் தொகுப்பு உங்களுக்காக செதுக்கப் போகிறேன்.

கல்லூரியில் புதியவர்களை வரவேற்கும் நிகழ்வு அதற்கான குழு நியமிப்பு கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தேர்ந்தெடுத்திருந்தது. நேஹா தனக்கு தலைமை பதவி கிடைக்கும் என எதிர்ப்பாத்திருந்தாள். அறிவிப்பாளர்  உபத்தலைவர் "நேஹா கிருஷ்ணன்" என்றார் , திடுக்கிட்டாள், குழப்பத்துடன் மெதுவாக மேடைப்படி ஏறினாள். எல்லார் மனதிலும் ஒரு கேள்வி, "தலைவர்?". அறிவிப்பாளர், "இவ்வருடம் தலைமை பொறுப்பை தட்டிச் செல்பவர்" ஓர் அமைதி "ஹர்ஷன் ராம்", ஹரி ஒரு புன்சிரிப்புடன் எழுந்தான் மேடையை நோக்கி நடந்துவந்தான். நேஹா குனிந்த தலை நிமிர்ந்தாள், அவள் விழிகளை ஹரியின் முகம் ஆண்டுக்கொண்டிருந்தது. அவள் இதழ்கள் ஆச்சரியத்துடன் திறந்தது. அவன் அவளை நோக்கி வந்து அவளை வாழ்த்தக் கைகொடுத்தான் அவளும் கைகுலுக்கிவிட்டு கையெடுத்தாள். இருவரின் உடல்களுக்குள் ஏற்பட்ட அந்த முதல் ஸ்பரிசம் காதலை உதிக்கச் செய்தது. இருவரும் ஏதோ மயக்கத்தில் ஆழ்ந்துப் போவதாக உணர்ந்தனர் முதல் பார்வை, முதல் காதல் இருவர் மனதிலும் உருவானது. கல்லூரி நாட்கள் அவர்களை முகவும் நெருக்கமாக்கியது. மிகவும் நெருங்கிய நண்பர்களானார்கள், அந்தக் காதலர்கள். அவள் கொண்டு வரும் மதிய உணவை அவன் ஊட்டிவிட உண்டு மகிந்தாள். ஹரி அணியும் ஆடைகள் அவள் விருப்பப்படி அமைந்திருந்தது. அவளது இதயம் முழுவதும் அவன் உருவம், அவளை உலுக்கி எடுத்து.

ஹரி பேசும் வார்த்தைகள் கவிதையாக உருமாறியது. அவன் பாடும் பாடல்கள் காதலைப் போற்றிடத் துவங்கியது. இசையில் ஏற்கனவே ஆர்வம் உள்ள அவன் அவளுக்காக பாடலும் இயற்றியிருந்தான். நாட்கள் கடந்தது நெருக்கமான உறவுகள் காதலைத் தம்முள் ஆழப்புதைத்துக்கொண்டனர். உறக்கமில்லாத இரவுகள்,செல்லிடத்துள் புதைந்த மௌனங்கள்,சிரிக்கையில் இனித்திடும் நொடிகள், அவளைப் பார்க்க ஓடிவரும் வைகரைப் பொழுதுகள், பிரிந்து செல்லும் போது ஏற்படும் வலிகள் என காலம் அவர்களின் வாழ்கையைக் கவிதைகள் ஆக்கியது. செந்தேனை வார்த்திடும் அந்நாட்கள் ஒரு மெல்லிசையை மீட்டியது.

பூங்காற்றைக் கூட ரசித்து வாழ்ந்தன அந்தக் காதல் பறவைகள், ஹரியின் கைகோர்த்து நேஹா நடக்கையில் உலகத்தை இருவருமே மறந்தனர் அவளைத் தொடும் பொது அவன் உடல் சிலிர்த்திடவே தொடங்கியது. அவன் காதலைச் சொன்ன நாள் ஜூன் 7, அன்று காலையிலேயே கல்லூரியை அடைந்தான். அவள் வரும் வரை காத்திருந்தான் வெள்ளை சுடிதாரில் தேவதைப்போல் அவள் வந்தால். மெதுவாக அவன் முன் வந்து புன்னகையால் அவனைக் கைதுச் செய்தாள். அவள் முன் ஹரி மண்டியிட்டான்,அவன் திட்டப்படி அவன் நண்பர்கள் இசைமீட்டிடத் தொடங்கினர், வலக்கையில் அவன் வைத்திருந்த ரோஜாவை அவள் முன் நீட்டி , என் வாழ்க்கையை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறாயா? என்றான், கண்களில் கண்ணீர் சொட்ட அவனைக்கட்டியணைத்து, அவன் இதழ்களை நனைத்தாள். காதல் வானில் சிறகடிக்கத் தொடங்கினர்.

அழகாய் ஓடிய நாட்களில் அவர்களின் காதலில் திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படத் தொடங்கியது. அவர்களின் காதல் உறவு நேஹாவின் வீட்டுக்கு தெரியவந்தது மிகப்பெரிய குடும்பம் அவளுடையது, எல்லாரும் கூடி அவளை சரமாரியாக வசைப்பாடத் தொடங்கினர்.

அவள் தந்தை அவளிடம், "உனக்கு அவனை பிடிச்சிருக்கா? அப்ப அவன் தன என் மருமகன் நீ ஒன்னும் யோசிக்காதம்மா எல்லாம் நல்லப் படியா  நடக்கும்"என்றார். அவள் அம்மாவும் அவளை அன்புடன் அரவணைத்தார், "இவங்களப் பத்தி நீ ஒன்னும் யோசிக்காத அவன் உன்னை உண்மையாகவே விரும்பிறதா இருந்தா நாங்க உன் ஆசைக்கு குறுக்க வரவே மாட்டோம்" என்றார். ஆனால் அவளின் சொந்தங்கள் அவளை எச்சரித்ததை கண்டு ஹரிக்கு எதாவது ஆகிவிடுமோ என பயந்தாள், அவனுக்கு தொலைப்பேசி அழைப்பு எடுத்தாள்," என் கூட இனி பேசாதிங்க, இது தான் நான் உங்ககூடப் பேசும் கடைசி தடவை,இனி நான் உங்கக்கூடக் கதைக்க மாட்டேன், நீங்க உங்க படிப்பு முடிச்சப்பிறகு வீட்ல வந்துக் கதைங்க, இன்னும் ரெண்டு வருஷம் தானே" என கூறி விட்டு அழைப்பை துண்டித்தாள். அவன் அவளிடம் எவ்வளவோ கதைக்க முற்பட்டான், அவள் அந்த அழைப்புகளை கண்டுக்கொள்ளவே இல்லை. ஒரே ஒரு குறுந்தகவல் அவன் தொலைப்பேசிக்கு வந்தது அவளிடம் இருந்து,"என்னை வெறுத்திட முயற்சிசெய்யுங்கள் - நேஹா"...

இரண்டு வருடத்துக்குப் பிறகு...

நேஹா அவள் வீட்டில் மிகவும் ஆனந்தத்துடன் காத்திருந்தாள், இன்று தான் அவள் தந்த இரண்டு வருடத்தின் முடிவு, அவன் கதைப்பான் என காதலுடன் காத்திருந்தாள்... அவன் வரவே இல்லை, அழைப்புகளும் இல்லை, முகப்புத்தகம், குறுந்தகவல் எதற்கும் மறு பதில் இல்லை, அவளுக்கு ஹரியிடம் பேசாமல் இருக்க முடியவில்லை, அவளின் பெற்றோரின் சம்மதத்துடன் அவனைக்கான விரைந்து அவன் வீட்டுக்குச் சென்றாள். அவன் வீடுப் பூட்டிக்கிடந்தது. அவர்கள் எங்கே என அயலவர்களிடம் விசாரித்தாள். அவர்கள் கோயிலுக்கு போய்விட்டார்கள் என்றனர். ஒரு பதப்பதப்புடன் கோயிலுக்கு விரைந்தாள். அங்கு அமைதியாகப் பூசை நடந்துக்கொண்டிருந்தது, அருகே சென்றாள், அவனைக்கண்டு பின்புறமாகச் சென்று தொட்டாள் அவன் திரும்பினான், அது ஹரி அல்ல ஹரியின் தம்பி, இவள் கேள்வியுடன் "ஹரி?" என்றாள், திரும்பியவன் சற்றே விலகினான் அங்கு ஹரியின் படத்துக்கு மாலையிட்டு இருந்தனர், இது ஹரிக்கு 2ம் வருட நினைவஞ்சலி, அவள் அங்கேயே மயங்கி வீழ்ந்தாள்...

இரண்டு வருடத்துக்கு முன்பு அவள் "என்னை வெறுக்க முயற்சி செய்யுங்கள்" என்று ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் அல்லவா? ஹரி இதுவரை நேஹா கூறி எதையும் செய்யாமல் இருந்ததில்லை ஆனால் அவளை வெறுக்கும் அளவுக்கு அவன் மனம் கல் போன்றது அல்ல, உண்மைக்காதல், அதுவும் முதல் காதல், அவன் இதுவரை வேறேந்தப்பெண்ணையும் கடைக்கண்ணால் கூட பார்த்ததில்லை. அவளின் குறுந்தகவல் படிக்கும் நேரம் அவன் பாதையின் ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்தான். அவளை வெறுக்கமுடியாது என முடிவெடுத்தவன் பாதையின் குறுக்கே நடந்து விட்டான், 3 வாகனங்களில் மோதியவன் உடல் பாதையில் வீழ்ந்தது, "நேஹா உன்னை வெறுக்க ஏலாதும்மா மன்னிச்சிரு..." எனக் கூறியப்படி உயிர் பிரிந்தது...

"காதல் காலமிருக்கும் வரை காத்திருக்கும்,
ஆனால் காலம் காதல் வரும்வரை காத்திருப்பதில்லை"

~அன்புடன் கோகுலன்.

Friday, December 14, 2012

வலி...


போற்ற தேவையில்ல கண்ணே,
தூற்றாதிரு நித்தோம் முன்னே,
விளையும் நிலமடி பெண்ணே,
முத்து குளிக்கயில மூழ்கி செத்தனே....

பொங்கி வச்ச சோறு நான் தொடவே கசக்குது,
நெஞ்சு குழிக்குள்ள ஒரு ஜீவன் தவிக்குது,
ஊரு சனம் எல்லாம் நம்ம பொலப்ப பாத்து சிரிக்குது,
எழும்பிட நினச்சவன ஆறடிகுள்ள அடக்குது.....

சின்னஞ்சிருசு கூட என்ன கண்டா ஒதுங்குது,
கட்டையில போக கூட வழியின்றி ததும்புது,
மொத்ததுல நானோ என்ன சொல்லி பொலம்புறது,
பேசயில கூட சத்தம் வர மறுக்குது....

கொலகுத்தோம் செஞ்சவன் கூட சந்தோசமா திரியுறான்,
ஒருக்க தோத்துப்புட்டு தெனமும் சாகுரனே நெதமும்....
செதறுன என்ன சேத்து வைக்க தேவல,
செரகொடிஞ்ச பறவய பறக்க விட இங்க யாருமில்ல...

~அன்புடன் கோகுலன்.

அன்பே!


உன் கண்கள் கண்ட நினைவுகள்,
 உன் சாலைகள்  கடந்த பொழுதுகள்,
உன் வீட்டினில் கழித்த நிமிடங்கள்,
 தினம் தேனாய் ஊறுது அன்பே.....

மனதுக்குள் காதல் பூத்த தருணங்கள்,
 கனவுக்குள் உண்டான நெருக்கங்கள்,
விழிகளுக்குள் வரைந்த உன் விம்பங்கள்,
 காலம் அது நிதம் இனிக்குது அன்பே.....

சில்லிடும் தென்றலில் நடந்த நொடிகள்,
 வெண்பனியில் ஒளிந்திருந்த தடவைகள்,
கல்மேலே தாவித் திரிந்த காலங்கள்,
 நினைக்கையில் சிரிக்கிறேன் அன்பே.....

பெண்ணாக பிறந்தது உன் தவறா?
 நான் ஆணாக பிறந்தது என்ன சதியா?
நமக்குள் காதல் வந்ததென்ன விதியா?
 உண்மை நீ சொல்லடி அன்பே.....

~அன்புடன் கோகுலன்.

Thursday, December 13, 2012

யாரோ அவள்?



மறைந்திருக்கும் உன் முகம் பார்க்க,
 மனமோ மயிரிழையில் ஊசலாடுது,
மானிடத்தின் மலைகுருவியாய்,
 மங்கையவள் மாதவியாய் தோன்றியவள் அவளோ?

உன் கண்கள் தினம் காக்க,
 இமைகள் ஆகிட என் இருதயம் துடிக்குதே,
என்னை விலகிட துடிக்கும் உன் கூந்தலுக்குள் பதுங்கிடும்,
 பூவாய் மாறிட என் மனமும் தவிக்குதே...

வேடங்கள் இட்டு வேடிக்கை காட்டுகிறாய்,
 என் உயிரோ வேதனைக்குள் வெந்திடுத்தே,
வேரோடு கொய்த மரமாக நானும்,
 நீர் காண பயிர் நிலமாய் வாடினேன் தினமும்...

மயிலிறகால் வருடிச்செல்லும் மாருதமாய் நீயும்,
 மணிக்கணக்காய் காத்துக்கிடந்தேன் மணிக்குயிலாய் நானும்,
கல்போன்ற மனமோ கரைந்துவிட்ட நிலையில்,
 சிறகொடிந்த பறவையாய் தவித்திருக்கிறேன் தினமும்...

~அன்புடன் கோகுலன்.

Tuesday, December 11, 2012

விதியா? விடுகதையா?


தீயிலே வாழ்கிறேன் மௌனத்தில் சாகிறேன்,
பேதையாய் திரிகிறேன் போதையை வெறுக்கிறேன்,
தேடல்கள் முடிகிறதே சிரசும் வலிக்கிறதே,
ஆயிரம் கோடி பிழைகளும் என் கழுத்தை நெரிக்கிறதே...

கடவுளை மறுத்தாலும் மறக்கவில்லை எக்கணமும்,
ராஜ்யங்கள் தேடியே அடங்கிவிட்டேன் இடுகாட்டிலே,
மனமிங்கு தடை பல உடைத்தாலும்,
விடை இன்றி வாழ்கையும் வெறுக்கிறதே...

கவலைகள் கானகத்துக்கு வழி காட்டும்,
மதி தனை விதியதும் மூடிவிடும்,
வேரின்றி மரம் மட்டும் என்ன செய்யும்,
கருகிட தனிமையில் துடித்து நிற்கும்,

ஏழையாய் பிறந்தாலும் மன்னனாக துடிக்கிறோம்,
தொடர்கதை இங்கு முடிவேது பிறகு ஏன் வருந்துகின்றோம்,
கோடி விளக்குகளும் இரவுகளை மாற்றுவதில்லை,
மன மாரும் நேரம் எம்முயிருக்கு இப்பூமியில் இடமுமில்லை....

~அன்புடன் கோகுலன்.

Monday, December 10, 2012

என் தோழன்...


நிழலாய் மாறியே தினமும் குடைப்பிடித்தாய் தோழா,
நான் கண்கலங்கும் வேலை நீ அழுதாயே தோழா,
என் தவறுகளுக்கு நீ தண்டித்துக் கொண்டாயே தோழா,
நினைவுகள் என் கனவுகளில் உன் சிரிப்பை காட்டுதே தோழா..

உன் தோழில் சாய்ந்தேன் கவலைகள் மறந்திட,
உன் சோற்றைப் பகிர்ந்தேன் என் பசியைப் போக்கிட,
உன் வீட்டில் உறங்கினேன் உண்மைகள் பகிர்ந்திட,
உன் விளக்கிலே படித்தேன் என் வாழ்க்கை விளங்கிட...

நட்புக்கு இலக்கணமில்லை விளக்கிட வழிகளில்லை,
விளக்கிட நான் துடித்த வேலைகளில் வலிக்குதே என் மூளை,
இருளை நான் கண்டது இல்லை தோழா,
என்னுடன்  என் பாதைகளில் நீ  தொடர்ந்திடும் போது...

எண்ணங்கள் மேலோங்கிட செய்தவன் நீயே,
அலை மோதிய என் கனவுகளை நனவாக்கியவன் நீயே,
கோடிப் பேர் கொண்ட உலகத்தில் எனை நாடியவன் நீயே,
உலகமே இருண்டிடும் போதும் என்னுடன் உலகை வெல்ல துடிப்பவன் நீயே...
என் தோழன்...

~அன்புடன் கோகுலன்.


Sunday, December 9, 2012

வேகம் குறையபோவதில்லை...


தனிமையில் வாழ்ந்திடு தரங்கெட்டு வாழ்ந்திடாதே,
விதையாய் மாறிடு விருட்சமாய் வளர்ந்திடு,
அமைதியாய் வாழ்ந்திடு அடங்கிட மறுத்திடு,
வேகத்தை கூட்டிடு வேலையை கூட்டிடு...

இளமையை புசித்திடு ரத்தத்தையும் ரசித்திடு,
சித்தனாய் உயர்ந்திடு நித்திரையிலும் விழித்திடு,
புத்தனாய் பொறுத்திடு யுத்தங்களையும் விரும்பிடு,
வித்தகனாய் இருந்திடு விஞ்ஞானத்தையும் விளக்கிடு...

தடைகளை உடைத்திடு தரிப்பதை தவிர்த்திடு,
அரசனாய் வாழ துடித்திடு அடிமைத்தனம் வெறுத்திடு,
தீமையை தீயிலிடு தீது செய்வாரை தீண்டாதிரு,
நரகத்தில் வாழ்ந்திடு நன்மைகளை புகட்டிவிடு...

வீழ்ந்திடும் ஒவ்வொரு முறையும் விழுதாய் மாறிடு,
மேதையாய் மாறிடு மேகத்தையும் வீடாய் மாற்றிடு,
சாலையில் வாழ்ந்தாலும் சரித்திரம் படைத்திடு,
மடமைகளை மறந்திடு மனிதனாய் வாழ்ந்திடு!

~அன்புடன் கோகுலன்.

Tuesday, December 4, 2012

ஒரு கதை...


படிக்க தொடங்கி 5 நிமிடம் கூட ஆகவில்லை, தூக்கம் கண்ணை மிருதுவாக வருடுகிறது. என்ன செய்ய? பொதுவாக இளம் வயதில் உள்ள பலரின் பரம்பரை நோய் இது. கையடக்கத் தொலைபேசியில் கோலமிடத் தொடங்கியது விரல்கள், இசையில் நனையலாம் என பாடல்கள் சில தேடினேன் காதல் பாடல்களின் தொகுப்பே அதிகமாக இருந்தது, உனது தொலைப்பேசித்தானே நீ தானே அதில் அந்த பாடல்களைச் சேமித்திருப்பாய் என நீங்கள் கேட்க்கக் கூடும். உண்மைதான் தமிழ் திரையிசைப் பாடல்களில் நம்மில் பலரின் மனதை கவருவது ஏனோ இந்த வகைப் பாடல்கள் தான். சிறுவயதில் பெரிதாக யாரும் இவ்வகைப்பாடல்களை விரும்புவதில்லை ஆனால் கட்டிளமைப் பருவத்தை தொட்டவுடன் பெண்களை நோக்கி எம் பார்வையில் அப்பப்பா எவ்வளவு காதலடா? அதோடு மனது காதல் பாடல்களின் வசம் ஈர்க்கப் படுகிறது, ஒவ்வொரு வரியையும் ரசிக்கத் தொடங்குகிறது, சில நேரம் மனனம் கூட செய்து விடுகிறது மனது - நாம் அல்ல மனதே...

ஐயோ பாவம் யார் செய்த தவமோ? யார் அளித்த வரமோ? தெரியாது மானுடரில் பலருக்கு இப்படி நடக்கிறது. பாடல்களோடு மட்டுமல்ல காதல் திரைப்படங்கள்,புத்தகங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,மிகவும் முக்கியமாக சிலரின் அனுபவங்கள், இவ்வாறு வகைப்படுத்திக்கொண்டே போகலாம். காதல் அற்புதமான உணர்வு, கள்ளங்கபடமில்லாதது, கடவுளுக்கு அடுத்தப்படியாக எம்மில் பலர் அடிபணிவது, துன்பத்தில் கூட ஒரு இன்பத்தை விரும்புவது,மனிதனுக்கு மட்டும் உணர்வுகளால் உயிரூட்டப்பட்டது, ஆக்கத்துக்கும் அழிவுக்கும் கூட அழகாய் பாதை அமைப்பது,சின்னச் சின்னத் தவறுகளைக் கூட நேசிக்கச் செய்வது, மனிதனை ரசிகனாக்குவது என பலவாறு கூறலாம். இவை பொது கருத்துகள், என் சுய கருத்துகள் மனதில் பட்டதைக் கூறினேன். அதிகமாக பிதற்றாதே விடயத்துக்குவ என சிலர் கூறுவது காதில் படுகிறது. என்னை போல் தமிழை நேசிக்கும்,"காதலிக்கும்" என் வாசர்கர்களுக்காக ஒரு அழகிய கதைக் கூறப் போகிறேன். பலர் என்னிடம் கேட்டது, அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல, இதில் உங்கள் கதையும் கூட அடங்கியிருக்கலாம். பலரும் மிகவும் ரசிக்கும் ஒரு கதை ஒரு சிலரின் வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் ஒரு பகுதியை முற்றிலும் அழகாக்கிடும் நிகழ்வு, என் கற்பனைகளின் கோர்வையாய் இலக்கிய பசிக்காக நீங்கள் ருசித்திட இங்கு பிறக்கப் போகிறது...

பாடசாலைக்காலம் வகுப்புக்குள் ஒருவன் நுழைகிறான், எண்ணை தோய்த்து வாரிய தலை, மிகவும் நேர்த்தியான உடல் வாகு, மெலிந்த தோற்றம் கொண்டவன், நுழைந்தவனை நண்பர் பட்டாளம் தங்கள் கதைக் கூட்டணிக்குள் இணைத்துக்கொண்டனர், கதைகளில் ஆழ்ந்து போனவனின் கண்கள் மட்டும் ஒரு தேடலைத் தொடங்கியது பெண் பிள்ளைகளின் பக்கம் நோக்கி அலைப்பாய்ந்தது, அவளை கண்டுக்கொண்டுவிட்டான், மனதுக்குள் ஓர் சிரிப்பு, "பார்ப்பாயா அன்பே?" ஒரு ஏக்கம், அவளும் பார்த்தாள் வழமைப்போல் மெல்லிய சிரிப்பு, அவனுக்கோ உள்ளுக்குள் ஒரு பூகம்பமே வெடித்து போல ஓர் உணர்வு, இவனும் பதிலுக்கு சிரித்து விட்டு ஓரிரு வார்த்தைகள் கதைத்தான் அந்த உரையாடல் அவனை நண்பர் மத்தியில் இருந்து தனியே பிரித்தெடுத்தது, அழகிய உரையாடல்களின் தொகுப்பு, ஒரு பரவசநிலை, சிலருக்குத் தான் அந்த பாக்கியம் கிடைக்கும், இவன் மனதில் காதல் அவள் மனதில் சராசரி நட்பு அவ்வளவு தான் இவ்விருவரினதும் உறவு, இவ்வாறான நிகழ்வுகளால் அவர்களின் காலம் இனிதாய் நகர்ந்தது...

இவன் பலமுறை தன் காதலைச் சொல்ல எத்தனித்தும் ஏதோ ஒரு சக்தித் தடுத்து. நட்பு வட்டாரம் கிண்டலடித்தது ஆனால் இவனோ வெறும் நட்பு தான் என ஏமாற்றிவிட்டான், பொதுவாக பலரும் செய்யும் ஒரு சாமர்த்தியம். அதில் எந்த பிழையுமில்லை காரணம் காதல் என நாம் ஒப்புக் கொண்டால், ஒருவேளை அவ்விடயம் அந்த பெண்ணுக்கு தெரிந்து நட்பும் உடைந்துவிட்டால்? அவன் மனது எவ்வளவு கஷ்டப்படும்? ஆகவே இவ்வாறன பதில்கள் பலருக்கும் ஒரு பாதுகாப்பு தான்.

அவள் வேறு ஆண்களோடு சற்று சிரித்தே கதைக்கும் பொது அவன் மனம் பதபதைக்கும், இதயம் கண்ணீர் விட்டலும் உதடுகள் மட்டும் போலியான சிரிப்பை மௌனத்துடன் தழுவும். மூளை திருகிக் கொள்ளும், செய்வதறியாது திகைத்து நிற்கும். இப்படியே விட்டால் தான் பைத்தியமாகி விடுவேன் என யோசித்தான் அவளுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினான், அவளுடன் உரையாடும் நேரத்தை அதிகரித்தான், அவள் வருமுன் பாடசாலை சென்றடைந்தான் யன்னல் ஓரம் விழிகளை தேக்கி வழிமீது தேங்கிக் கிடந்தான். அவளைக்கண்டவுடன் புன்னகைத்து, கையசைத்து உரையாட தொடங்குவான்...

பலநாள் தனிமையில் இவ்விருவரினதும் உரையாடல்கள் தொடர்ந்தது, அது அவர்களை மிகவும் நெருக்கமாக்கியது, செல்லிட தொலைப்பேசிகள் அழகிய குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்ளத் தொடங்கியது. அவர்களின் குறுந்தகவல்கள் மிகவும் நெருக்கமான ஒரு உறவை பிரதிப்பளித்தது. இவனது தகவல்கள் நட்பு சாயம் பூசி காதலை  சுவைத்திருக்கும், அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்து, அவனின் செயல்களை ரசிக்கத் தொடங்கினாள், அவனுடன் இருப்பதை மிகவும் விரும்பினாள், உரிமையுடன் கை கோர்த்து திரியவும் செய்தாள்  எனினும் காதலைச் சொல்ல மறுத்தாள்...

உறவுகள் மிகவும் நெருக்கமானது, எனினும் இருவர் மட்டும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பாடசாலை முடிவு பிரிவுகளின் ஓர் அத்தியாயம் கட்டாயம் எல்லோரும் சிதறிச் செல்ல வேண்டியத் தருணம், இரு உள்ளங்கள் மட்டும் செய்வதரியாது திகைத்திருந்த நிமிடம். இன்று சொல்லிவிடுவோம் என முடிவெடுத்தான், அவள் அருகில் சென்றான், கூறிவிடுவோம் என முற்படுகையில், அவளின் செல்லிடம் அழைப்பு மணியை உமிழ்ந்தது, தயக்கத்துடன் அவனை பார்த்தவள் சைகை காட்டி விட்டு கதைக்க தொடங்கினால் தொலைப்பேசியில், சில நிமிடங்களின் பின்னர் சிரிப்புடன் முடித்தவள் என்ன விடயம் என கேட்டாள், அப்போது அவனின் நண்பன் அவசரமாக வந்து அவனைக் கூப்பிட அவளை அங்கேயே நிறுத்தி வைத்தவனாய் சென்றுவிட்டான். அவளுக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் தொடங்கியது சில மணி நேரம் காத்திருந்தவளுக்கு பயமும் அதிகரித்து எங்கே அவன் பிரிந்து விடுவனோ என்று அவள் உள்ளம் அழுதது...

அவன் வந்தான் அவளை தனிமையில் ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றான். தைரியமாக அவளின் கண்களை பார்த்து இவ்வாறு பேசத்தொடங்கினான், " நான் பல பிரிவுகள பார்த்தவன் தான் ஆனா இன்னைக்கு ஏதோ ஒரு புது பயம், என்னைக்கும் இல்லாத ஒரு நடுக்கம், ஒவ்வொரு நாளும் ஒருத்தர பார்குறதுக்காக வாறேன் அந்த சந்தோசம் இனி இருக்காதுன்குற வேதனை இருக்கு, அவங்கள பார்க்க முடியாதேங்குற கவலை இருக்கு, பலமுறை என் செயல்கள் அவங்கள காயப்படுத்தினாலும் அதுக்காக மன்னிப்பு கேட்டு கேஞ்சுரப் போதுள்ள சுகம் இனி இருக்காதுன்குற பயம் இருக்கு, அவங்க கண்கள இனி பார்க்க முடியாம போய்விடுமோ? என்கிற தவிப்பு இருக்கு, சிரிப்ப புதுசா உணர வச்ச அவங்களோட சிரிப்பா இனி பார்க்க முடியாதோ? என்னும் சலனம் இருக்கு, என்னை அப்படியே ஏத்துக்கிட்ட அவங்க இனிமேலும் என் கூட இருபாங்களாங்குற கேள்வி எனக்குள்ள இருக்கு, அவங்க என் மேல வச்ச நட்பு என்னை விட்டுட்டு விலகிடுமோ? என்கிற அங்கலாய்ப்பு இருக்கு, எல்லாத்துக்கும் மேல என் காதல் அவ ஏத்துகுவாளா? என்னும் சந்தேகம் எனக்குள்ள இருந்து தினம் தினம் என்னை கொண்ணுக்கிட்டு இருக்கு..." என அவன் கூறி முடிக்க அவன் கண்களில் கண்ணீர், அதை துடைத்த அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவளின் கன்னங்களை ஈரமாக்கியது, சில நொடிகள்  நீடித்தது மௌனங்கள், அவளின் உதடுகளில் அழகாய் ஏற்பட்டது நடுக்கங்கள், காதலால் நிறைந்தது அவள் விழிகள், ஏங்கி தவித்த அவன் காதலை அவள் இதயம் ஏற்றுக்கொண்டது...

~அன்புடன் கோகுலன்.

Wednesday, November 21, 2012

வரம் வேண்டும்


 இரவு முழுதும் நான் விழித்திட வெண்ணிலவும் உதித்திடுமோ?
 கண் இமைகளை வருடும் காற்றும் கதைகள் பல கூறிடுமோ?
உணர்வை வாட்டிடும் காதலும் உயிரை உறையச் செய்திடுமோ?
 என் மௌனத்தை சிதறச் செய்த உன் குரல் இன்று மந்திரமாகிடுமோ?

உன் விரல் தொட்டு இடை பிடித்து முத்தமிட ஆசைதான்,
 கண் திறந்திருந்து கனவுகளை பருகிட ஆசைதான்,
என் மனம் விற்று உன் காதலை வாங்கிட ஆசைதான்,
 மண் உலகம் விட்டு விண்ணுலகம் பறந்திட ஆசைதான்...

மகரந்தம் கூடிய மலர்களாய் மாறி,
 உன் கூந்தலுக்குள் மணந்திட வேண்டும்...
மலர்கள் கூடிய மலர்மாலைகள் சூடி,
 உன் கரம்பற்றி மணந்திடும் நாளும் வேண்டும்...

காலம் மாறிடும் கவலைகள் விரைந்தோடும்,
 விழிகளின் ஈரமும் விடைகண்டு அகன்றிடும,
என் தேகமும் உன் மடியில் சரணடையும்,
 நம் உயிரும் ஓர் உணர்வால் இணைந்திடும்...

~அன்புடன் உன் கோகுலன்.

Friday, November 16, 2012

கலங்கரையே.. களைந்ததுவே...


காதலே என் காதிலே உன் காதலை நீ சொல்லிவிடு...
 பூவாசமே என் சுவாசமே உயிர் காதலை நீ கிள்ளிவிடு..
தென்றலே என் நெஞ்சிலே உன் நினைவுகளை நீ உருக்கிவிடு..
 மாலையில் ஒரு மாலையாய் உன் மார்புக்குள் எனை ஒளித்துவிடு..

காதலின் மடமைக்குள் மூழ்கி மடிந்தேன்,
 கடவுளின் பெயரையும் உணர மறுத்தேன்,
காவியமாய் புது கவிதை வடித்தேன்,
 கானகத்துள் கண் இழந்து தவித்தேன்...

மரங்கொத்தியே மனதை கொத்தி விட்டாய்,
 துளை இட்டதும் தூரத்தில் மறைந்து விட்டாய்,
காலம் ஓடுது கவலையும் கூடுது,
 கலங்கரையாய் இருந்தவள் களைந்து விட்டாள் ...

என் மாதங்கள் உன் நாதத்தால் நிறைகிறது,
 விடை தேடிட விடுகதைகள் மறுத்திடுது,
காற்றிலே உன் வாசமும் இன்று,
 என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று அழிக்கிறது...

~அன்புடன் கோகுலன்.

Wednesday, November 14, 2012

உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...


பார்ப்பவரை சிலையாக்கிடும் உந்தன் கண்கள்,
தென்றலையும் வருடிடும் உந்தன் கூந்தல்,
ஒரு கணம் ருசி பார்க்க தூண்டும் உந்தன் இதழ்களையும்,
மறக்காது எந்தன் நெஞ்சம்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...

புல்லின் நுனியில் தவழ்ந்திடும் உந்தன் கால்கள்,
பஞ்சில் நெய்தது போன்ற உந்தன் கைகள்,
பளிங்கில் வார்த்தது போன்ற உந்தன் மேனியையும்,
விட்டு விலகாதடி எந்தன் நிழழும்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...

பேசாமல் எரித்திடும் உந்தன் கோபம்,
உன் வார்த்தைக்காக ஏங்கிடச்செய்யும் உந்தன் மௌனம்,
பயத்துள் மூழ்கிக்கிடக்கும் உந்தன் மதியையும்,
வெறுக்கிறேன் நான் தினமும்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...

என் கனவுகளை நிரப்பிடும் உந்தன் நினைவுகளையும்,
என் கண்களை கலங்கிடச்செய்யும் உந்தன் வார்த்தைகளையும்,
என்னை நான் வெறுத்திடச் செய்த நம் காதலாலும்,
தவிக்கிறேன் ஒவ்வொரு நொடியும்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...

~அன்புடன் கோகுலன்.

Sunday, November 11, 2012

என்னை கொய்தவள்!


மின்னல் பாய்ந்து தென்றல் தோய்த்து மங்கை ஆனவள்,
 கண்கள் கோர்த்து நெஞ்சம் பார்த்து காதல் சேர்த்தவள்,
மனதுள் பூத்து மோகம் வார்த்து கவிதை தந்தவள்,
 விழிக்குள் விழுந்து உணர்வுகள் கொய்து என்னை வாட்டியவள்...

மெல்ல சிரித்து கொள்ளை கொண்டாள்,
 முகத்தை முத்தங்களால் ஈரம் செய்தாள்,
கைகளுக்குள் உடலை சேர்த்துக் கொண்டாள்,
 சிரிப்பால் எனையும் கைது செய்தாள்...

மூளையை திருகி மனதை பிழிந்தாள்...
 வானவில்லை குடையாய் வானத்தையும் கூரையாக்கினாள்,
நினைவுகளில் சிக்கி கனவுகளில் தவிக்கவிட்டாள்,
 அவள் குரல் கேட்டு மனதையும் இளகச் செய்தாள்...

புன்னகை பூவாய் என் உள்ளமெங்கும் பூத்தவள்,
 ஓவியங்களாய் அவள் கண்கள் வரைந்திடச் செய்தவள்,
கடமைகளை மறந்து கவிதைகளை மந்திரமாக்கியவள்,
 உணர்வுகள் இழந்து அவள் உறவுக்காக தவித்திடச் செய்தவள்...

~அன்புடன்  கோகுலன்.

Thursday, November 8, 2012

பிரிவு


மாடி-1                                                                                                                      படி-2


வாழ்கை ஒரு நாடக மேடை, வாழ்கை ஒரு சக்கரம் என பலர் பலவாறு கூறுவதை தினமும் கேட்டு வளர்கிறோம். இதற்கு புதிதாக ஓர் அர்த்தத்தை வழங்க முடிவு செய்து விழிகள் புத்தகங்கள் சிலவற்றை ஊடுறுவத் தொடங்கியது. பல மணிநேர முயற்சிக்கு பின்பு தெளிவாக ஒன்று மட்டும் விளங்கியது, அர்த்தம் தேடிட இது ஒன்றும் ஆங்கில புத்தகத்தில் நான் வாசித்த இலக்கிய சொல் அல்ல என்பது. உண்மைதான் வாழ்கையை நாம் வாழ்ந்து தான் அர்த்தம் தேடிட முடியுமே தவிர, ஆராய்ச்சியால் அல்ல.

 ஏன் இவன் திடீர் என்று வாழ்கையை பற்றி அலட்டிக் கொண்டு இருக்கிறான் என நீங்கள் என்ன கூடும். ரசித்து வாசிக்கும் வாசகனுக்கு அது இரண்டாம் வசனம் வாசிக்கும் போதே என்ன கூறப் போகிறேன் என அவனுக்கு விளங்கி இருக்கும், "உண்மைதானே?"-விளங்கியவரிடம், சரி உங்களுக்கு இனி சொல்கிறேன்,எல்லாவற்றுக்கும் ஒரு முகப்பு அவசியம் அல்லவா? அதுதான்."சம்பந்தம் இல்லாமல் குழப்புகிறானே..." என என்ன வேண்டாம் சம்பந்தமுண்டு கட்டுரைக்கு இது அவசியம் .

வாழ்கையில் நாம் இன்பம், துன்பம், தவிப்பு, சலனம், நிம்மதி, தடங்கல், நிறைவு,காதல் போன்ற பலவற்றை சந்தித்திருக்கிறோம் அதில் முக்கியமான ஒரு பகுதி எனக்கு, நான் இங்கு கூறப்போவது, சிலருக்கு அது அவர்கள் கடந்து வந்த பாதையை பொருத்தது.அனுபவசாலிகள் அப்படித்தான் என்னவென்று யோசிக்காதிர்கள் தலைப்பை பற்றித்தான் கூறுகிறேன், "பிரிவு" அனுபவசாலிகளுக்கு ஆயிரத்தில் ஒன்று, என் போல் சாதரணமானவனுக்கு அனுபவத்துக்கு ஒன்று...

 ஏன் இன்று பிரிவைப் பற்றி பேசுகிறான் என நீங்கள் என்னக்கூடும். இது ஒரு பொது விடயம் ஆனால் மனதளவில் பலரையும் பாதிப்படையச்செய்யும்  நிகழ்வு, பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்கக் கூடும் இப்பொழுது, சரி பொதுவாக அலசி, துவைத்து, காயவைக்கும் அளவுக்கு எனக்கு அனுபவமில்லை ஆகவே நான் சந்தித்த பிரிவுகளின்/பிரிவின் தொகுப்பைத் தருகிறேன். தொகுப்பு என்று கூறிவிட்டு அதிகளவில் அடுக்கி விடப்போவதில்லை.ஒரு சில முக்கியமான நிகழ்வுகளை அல்லது ஒரு நிகழ்வை பற்றி மட்டுமே எழுதப்போகிறேன், பார்ப்போம் எவ்வளவு முடியும் என்று அது என் நினைவுகளைப் பொறுத்தது...

 வாழ்நாளில் நான் பல பிரிவுகளைச் சந்தித்திருப்பினும் கூட மனம் எதிலும் சலனம் அடைந்ததில்லை எதிலும் பெரிதாக காயப்பட்டதில்லை.பிரிவில் என்னை மிகவும் பாதித்தது ஒரே விடயம் தான் அது  என் அம்மம்மாவின் இறப்பு தாயின் ஸ்தானத்தில் இருந்து என்னை நேசித்து வளர்த்தவர்,இந்த உலகில் நான் அதிகளவில் நேசித்த மனிதரில் ஒருவர் அதிலும் என்னை மிகவும் நேசித்த மனிதரில் ஒருவர். அம்மாவை விடவா? என நீங்கள் என்ன கூடும், அம்மா என்னை நேசிப்பதை போல தம்பியையும் நேசிக்க வேண்டும் நாங்கள் இருவரும் அவரின் இரு கண்கள் ஆனால் என் அம்மம்மாவுக்கு எத்தனை பேரன்,பேத்திமார் இருப்பினும் எனக்கு காட்டிய அளவுக்கு யாருக்கும் பாசத்தை காட்டவில்லை என்றே கூறலாம்.

அவரை பற்றி நினைக்கும் போதே கண்கள் கலங்குகிறது கண்ணீரால் நிரம்புகிறது,கவலை! மனதில் ஆழமாக ஏற்பட்ட காயம் "அழுதுவிட்டேன்". அடிக்கடி அவர் நினைப்பு என்னை கண்கலங்க வைத்துவிடும்,பிரிவின் வேதனையை நான் உணர்ந்த முதல் தருணம். புவிஅதிர்ச்சியை என் உள்ளம் உணர்ந்தத்  தருணம், அவரின் ஆத்மா ஆழ்ந்த உறக்கத்தை தழுவிய அந்த நொடி.இறந்துவிட்டார், என்னைப்  பிரிந்து சென்றுவிட்டார் என்பதை மனம் இன்னும் ஏற்க மறுக்கிறது.எங்கோ என்னைப்  பார்த்துக்  கொண்டு இருக்கிறார், எனக்காக காத்துக் கொண்டுயிருக்கிறார் எனும் எண்ணம் என்னைச் சுற்றி தினமும் ஓடுகிறது.

ஏன் அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என சிலர் கேட்கலாம்,மறந்தால் தானே அதை மறுபடி நினைக்க என் மனம் கேள்வி கேட்பவருக்கு தரும் பதில். என் மனம் படும் அவஸ்தையை நான் யாரிடமும் சொல்லவில்லை காரணம் அதை கேட்க பெரும்பாலும் எவரும் விரும்பவில்லை.ஆயினும் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து இறுக்கம் கொண்டு தவிப்பதை விட இங்கு கொட்டிவிடுவது சற்று மனதை இலகுவாக்கும். பிரிவுகளின் வேதனை பலருக்கும் உண்டு ஆனால் கண் முன்னே அவர் பிரிந்துச்சென்ற அந்த நொடி நான் உடைந்ததை இன்றும் மறந்திட முடியவில்லை, நிம்மதியான உறக்கம் தான், உறக்கத்திலேயே ஏற்பட்ட மரணம் எவருக்கும் அந்த பாக்கியம் இலகுவாக கிடைத்து விடுவதில்லை கேட்பவருக்கு நான் சொன்ன பதில்..., அனால் "அம்மா! என்னை தனியாக விட்டுவிட்டாயே!உன் மகனை பார்த்துக்கொள்ள இனி யார் இருக்கிறார்கள்?" என எண்ணிப் பார்க்கும் முன்பே என்னை பிரிந்து சென்றுவிட்டார்.

வருடக்கணக்கில் பக்குவமாய் செதுக்கிய சிலை ஒரு நொடியில் சிதையும் போது அதை செதுக்கிய சிற்பியின் நிலை தான், அன்று நான் உணர்ந்தது. குளிர்ச்சியை விரும்பாத உடல் குளிர்ந்துப் போனது,என் தலையை மிருதுவாய் தடவும் விரல்கள் விரைத்துப் போனது, எனக்காய் ஓடித் திரிந்தக் கால்கள் நின்றுவிட்டது. எனை பாசத்துடன் பார்த்திருக்கும் அந்த விழிகள் மங்கிவிட்டது, "அப்பா,மகனே" என அழைத்த அந்தக் குரல் இனி கேட்க்காது. இதுதான் உலக நியதியா? இதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கையா? கத்தி அழுது உருண்டு வீழ்ந்தேன், துடிதுடித்தேன், உடல் நடுக்கம் கொண்டது, பயம் அறிந்தேன், பதறிப்போனேன்...

உள்ளம் கண்ட உயரிய அதிர்ச்சி அது, என்னை வளர்த்த தாய், என்னை நேசித்த, மிகவும் நேசித்த ஒரே ஜீவன் என்னை பிரிந்துவிட்டாள் , தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டாள், என் வளர்ச்சியை காண இன்று அவள் இல்லை,எதை செய்தாலும் அவரிடம் சொல்லாமல் இருந்ததில்லை. இன்று அவரை பற்றி ஒரு கட்டுரையை எழுதும் அளவுக்கு செய்துவிட்டார். அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது ஆனாலும் நான் வாசித்துப் புரியவைப்பேன் ஆனால் அவரை பற்றி எழுதி இன்று நான் இந்த வெண் காகிதத்தை நனைப்பேன் என கடைசிவரை நான் நினைத்ததில்லை. தனிமையின்  கொடுமையை உணர்ந்துவிட்டேன். அம்மா,அப்பா அன்புக்கு இலக்கணமானவர்கள், ஆனால் என் அம்மம்மா அவ்  இலக்கணம் எழுதிடும் மொழியனவர். நான் கவலையில் துடிப்பது எவருக்கும் தெரியாது, கூறி என்ன செய்வது என தெரியவில்லை. "இப்பொழுது மட்டும் ஏன் கூறினாய்?" என எதாவது ஒரு ஜீவன் கட்டாயம் கேட்கும். அவை ஏதாவது பிழைக் கண்டறிய வேண்டுமே.. என கேட்க எத்தணிப்பது.. அவற்றுக்கு நான் விளக்கிடத் தேவையில்லை, சோற்றுக்கு இடையே சிக்கிய கல் போன்றவர்கள் அவர்கள், தூக்கி எரிந்து விட வேண்டுமே தவிரச்  சாப்பிடக்கூடாது.

இதற்கு மேல் அவரை பற்றி அந்த பிரிவைப்பற்றி நான் எழுத விரும்பவில்லை, கண்ணீரின் அளவு அதிகரிப்பதை உணர்கிறேன். என் உயிரை கவலை எனும் கொடூரன் இறுக்குவதை உணர்கிறேன். தலைக்குள் ஏதோ வெடிப்பது போலத் தோன்றுகிறது,முடியவில்லை தொடர்ந்திட, முடித்துக்கொள்கிறேன். எழுத்து தொடரும்...

~அன்புடன் கோகுலன்.

Monday, November 5, 2012

வலை!


உன்னை நினைத்து உள்ளதை உருக வைத்தாய்,
 இருள் விலகினும் ஒளியின்றி திணர வைத்தாய்,
காரணமின்றி கானகத்தில் காக்க வைத்தாய்,
 விடையில்லா வினாக்களை விழிக்குள் வைத்தாய்...

வலக்கையை பிடித்து வழுக்கி வலைக்குள்ளே விழுந்தேன்,
 வலி கொண்டு துடித்து வழியின்றி தவித்தேன்...
கவலையின் கரையில் கரைந்து கறையானேன்,
 விளக்கமின்றி விரைந்தோடி இன்று விறைத்தொடுங்கினேன்...

உன் நியாயங்கள் என் காயங்கள் ஆற்றுமா?
 கண்ணீரில் தோய்ந்து தேய்ந்து அழியுமா?
என் காதலின் நிலைகண்டு கல்லறையும் அழைக்குமா?
 என் வேதனையின் திடம் கண்டு விண்ணும் கலங்கிடுமா?

காதலில் தோற்பவன் காதலை வெறுக்கிறான்,
 காதலில் வெல்பவன் காதலியிடம் தோற்கிறான்...
என் மங்கையின் மௌனத்தால் மனமும் மரணிக்குதே...
 போதையில் வீழ்ந்தழியும் பேதையாய் ஆக்குதே...

~அன்புடன் கோகுலன்.

Friday, November 2, 2012

முடிவா?


தேடியது காதலா? நெஞ்சங்களின் மோதலா?
பேசியது புரியவில்லை மனமே...
மாதரின் விழி கண்டு மடமைக்குள் மூழ்கினேன்,
ஏங்குகிறேன் உன்னை நினைத்து தினமே...

சதிகளின் சங்கமமிது சடலமாய் உடல் மாறுது,
மரணத்தின் வாசலில் இன்று மண்டியிட்டு கிடக்கின்றேன்...
நிமிடங்கள் முழுவதும் உன் நினைவுகளால் நிரம்புது,
மனதை கட்டுபடுத்த மதி வழியின்றி தடுமாறுது...

துன்பங்களும் வாழ்கையில் ஒரு பகுதி தான்,
என் வாழ்க்கையோ துன்பத்துள் ஒரு பகுதி தான்,
இன்பத்தால் சிரிக்கும் நேரம் கூட,
துன்பம் என்னை வந்து அணைக்கிறது...

காத்து கிடக்கும் சுகங்கள் இனி இல்லை,
ஏங்கி தவிக்கும் நாட்கள் இனி இல்லை,
ஒரு வார்த்தையில் நீ முடித்தாய்...
இன்று என் வாழ்கையே முடிந்து விட்டதே...

~அன்புடன் கோகுலன்.

Wednesday, October 31, 2012

கண்ணீர்!



சிரிக்க நினைக்கிறேன் மனம் அழுது சிதையுதே,
 வாழ துடிக்கிறேன் இதயம் துடிக்க மறுக்குதே,
கனவு முழுவதும் இந்த கணத்தில் நொறுங்குதே,
 உயிரில் பாதி என்னை புரிய மறந்ததே...

வேதனையடி கண்ணே வெந்து சாகிறேன்,
 பேதையடி பெண்ணே நொந்து அழுகிறேன்,
காதலடி நெஞ்சே நீ தீயில் எரித்தது,
 உணர்வடி உயிரே நீ உடைத்து சென்றது...

தேவனில்லை நான் உன்னை மறந்து மகிழ்ந்திட,
 விலங்கில்லை நான் புது உறவு தேடிட,
மானுடனடி உன்னை உயிராய் நேசித்தது,
 சடலமானதடி இன்று உன்னை யாசித்தது...

கூறுவதை கூறிவிட்டேன் இனி உன் விருப்பம்,
 கவிதையல்ல பெண்ணே இது கண்ணீரின் வாசகம்,
நிதமும் நீ விளையாடி மகிழ்ந்திட,
 இது விளையாட்டில்லை அமுதே வாழ்கை....

~அன்புடன் கோகுலன்.

Sunday, October 28, 2012

மனதின் மரணம்.


அன்பே உந்தன் குரல் ஏனோ,
 என் செவி அடைந்திட மறுத்திடுதே...
தனிமையில் இன்று தவிக்கும் நிலை,
 தினமும் முடிவின்றி நீடித்திடுதே...

உன்னை கண்டு நான் கண்விழித்தேன்,
 நினைவில்லை கனவென்று உணர்ந்தேனடி...
உண்மைகள் என் உணர்வுகளை வாட்டிட,
 இன்று விழிகள் திறந்திடும் போதே வலித்திடுதே...

என் இதயம் கண்ணீரில் நனைந்திடுதே,
 குருதி இன்றி அது இன்று துடித்திடுதே...
உள்ளமோ உன்னை தினம் தேடிடுதே,
 உயிரோ நீ இன்றி உருகிடுதே...

காதல் என்னும் பிறவித் துன்பம்,
 நீ இன்றி நானும் உணர்ந்தேன்...
மரணம் காண மதி விரும்பும் நிலையில்,
 நீ இல்லா ஒரு உலகம் இனி வேண்டாம் அன்பே!

~அன்புடன் கோகுலன்.

Tuesday, October 23, 2012

ஏங்குகிறேனடி!


இதயத்துள் உன்னை சுமந்துகொண்டு,
 தொலைத்தூரமும் நான் கடந்துவிட்டேன்,
இதழ்களோ மௌனித்துப் போனது அன்பே,
 உன் குரலை கேட்டிடவே என் செவிகளும் ஏங்குது இங்கே!

வீசும் காற்றில் உன் சுவாசத்தை மட்டும் தனியாய் நுகர்ந்தேன்,
 உன் தடத்தில் என் கால் பதித்தே தினமும் நடந்தேன்,
சிந்தும் மணியாய் சிதறும் உன் சிரிப்பை கொஞ்சம் ரசித்தேன்,
 உன் பார்வையில் வீழ்ந்து மடிந்திடவே இன்று வாழ்கிறேன்...

உன் உடலுக்குள் உயிராய் வாழும் வரமொன்று கேட்கிறேன்,
 தூரத்தில் விலகியிருந்தும் உன் நினைவுகளால் சிரிக்கிறேன்,
உன் குரல் இல்லா நாட்களில் சிதைந்தே மடிகிறேன்,
 உனக்காய் வாழ்வதை எண்ணி மறுபடிப் பிறக்கிறேன்...

நீண்ட நாட்களும், நிம்மதியில்லா உறக்கங்களும்,
 என் மனதை சிறைக்குள் அடைக்குதம்மா...
உன் நினைவுகளும், உன்னை காணும் கனவுகளும்,
 என்னை சிறகடித்துப் பறந்திடவேச் செய்யுதம்மா!

~அன்புடன் கோகுலன்.

Saturday, October 20, 2012

மனதில் கொஞ்சம் ஈரம்..



நிதமும் உன்னால் என் விழிகள் காணும் ஈரம்,
 தினமும் விடியலை கண்டதும் மறைந்திட கூடும்,
எனினும் உன்னால் என் மனதில் உண்டான காயம்,
 என் உயிர் பிரியும் போதிலும் அழியாதம்மா...

நினைவுகள் இனிமையானவை தான் கண்ணே,
 ஏனடி என் மனம் மட்டும் அழுகிறது?
கனவுகள் சுகமானவை தான் அன்பே,
 ஏனடி என் உயிர் மட்டும் உறைகிறது?

கண்கள் மூடினால் உன் முகம்,
 இமைகளுக்குள் செருகிய தூசியாய் உறுத்துகிறதே...
சிந்தனைக்குள் உன் உருவம்,
 என் உறக்கங்களையும் இன்று பறித்ததுவே...

மௌனங்களுக்கு என் வார்த்தைகள் அடங்குதடி,
 நிலவுக்கும் என் மனம் இன்று மயங்குதடி,
ஆனால் நீ இன்றி என் மனம் மட்டும்,
 காதலுக்குள் சிக்கித்  தனியாக தவிக்குதம்மா..

~அன்புடன் கோகுலன்.

Monday, October 15, 2012

செம்மொழி!


நினைவுகள் சிதைந்தது மனம் நிமிர்ந்து நின்றது,
 கனவுகள் கலைந்தது புது கற்பனைகள் பிறந்தது,
வித்திட்ட விதைகளும் இன்று விண்ணுக்கு படர்ந்தது,
 வேதனையின் வேர்களும் கூட கருகியே அழிந்தது...

உணர்வுக்கு உயிரூட்டி உடலினை மெருகூட்டி,
 மனமது தலைதூக்கி தலைக்கனம் வெறுத்தொதுக்கி,
விளையாட்டாய் ஓடிய மனமது,
 அர்த்தங்களை தேடிட தொடங்கியது...

கணப்பொழுதில் புது கவிதைகளும்,
 கடலலையாய் நிதம் திரண்டிடவே,
கலைமகளுக்கு சிரந் தாழ்த்திய என் வரிகளும்,
 தமிழ் அமுதை அழகாய் வார்த்தெடுத்தது...

அன்று சுடுப்பட்ட நெஞ்சம் தினமும் புண்பட்டதும் கொஞ்சம்,
 இன்று நான் செதுக்கிடும் வரிகளை இசை மெட்டுகளும் கொஞ்சும்,
மடைதிறந்த நதியலையாய் இனி என் வரிகளும்,
 எல்லை இன்றியே எட்டுத்திக்கும் ஓடும்....!

~அன்புடன் கோகுலன்.

Saturday, October 6, 2012

உந்தன் நினைவுகள்...


மனமது கடலலைபோல் கரைமீது அலைமோதுதே,
 கனவது உன் நினைவுகளால் தினமது நிறைந்ததுவே,
ஞாபகத்தில் கதவுகள் இன்று மறுபடி திறந்ததுவே,
 சிந்தனைகளால் இதயமும் நிதம் சித்தரவதை பட்டிடுதே...

காதல் எனும் பட்டாம்பூச்சி மீண்டும் என்னுள் குடிப்புகுந்ததே,
 நேரங்கள் மறந்து பாதைகள் தொலைத்து அலையசெய்ததே,
மரணத்தின் விளிம்பையும் எட்டிப் பார்த்திடும் ஆசை வந்ததே,
 உன் நினைவுகளால் சிறை பட்டிருப்பதையே உயிர் தினம் விரும்புதே...

தேகம் தினம் மெலிவதை மனம் ஏற்க மறுக்குது,
 கதவுகள் திறந்திருந்தும் கால்கள் வெளியேறுவதை தவிர்க்குது,
உன் ஓர் பார்வையால் பூத்த காதலடிப் பெண்ணே,
 உனக்காய் வாழ்வதையே என் உயிர் விரும்பிடுது...

பிரிவின் வலி எனும் கொடுமையை முதல்முறை உணரவைத்தாய்,
 தினமும் நொடி முழுதும் உன்னை மட்டும் நினைக்கவைத்தாய்,
வானவில்லின் நிறங்களுக்குள் என்னை வசிக்கவைத்தாய்,
 உனக்காய் அலைமோதிய உயிரையும் இன்று அழகாய் கொய்து சென்றாய்...

~அன்புடன் கோகுலன்.

Saturday, September 29, 2012

சிதறல்கள்...

1.
காதல்,
மாதாவின் கோவிலை அல்ல, 
மரணத்தின் வாசலை திறந்திடும் சாவி...

2.
களைத்துப் போய் கண்ணயர்கையில்,
முதுகில் வலியின்றி செருகிய கொடுவாள்...
துரோகம்!
  
3.
நடந்து சென்றவனை,
மிதக்க செய்யும்,
சந்தோசத்தின் ஒரு பகுதி...
வெற்றி!

4.
இனிமையான வாழ்க்கையை இடித்து செல்லும்,
இடிந்த வாழ்க்கையை இசைக்கச் செய்யும்,
பிரம்மனின் படைப்பு...
பெண்!

~அன்புடன் கோகுலன்

Friday, September 28, 2012

இதயத்துள் ஓர் கனவு...

தொட்டதும் இனித்திடும் முத்தங்கள் தானடி,
 சித்தத்துள் தோன்றுது யுத்தங்கள் ஏனடி,
விட்டதும் விலகிடும் விண்மீனும் நீயடி,
 உனக்காய் ஏங்கிடும் மனமும் இதுவடி...

கற்பனைகள் களைந்திட கலங்கிடும் கண்களடி,
 வேதனையின் விளிம்பையும் தொட்டுணர்ந்த மனமடி,
வெந்திடும் நொடிகளிலும் உன்னை சிந்தித்தேன் நிதமடி,
 கடலுக்குள் தொலைந்த கப்பலாய் கரைதேடுகிறேன் தினமடி...

பனி காலம் கூட தேகம் முழுதும் வியர்க்குதடி,
 கோடையில் கூட உடல் எங்கும் குளிருதடி,
தேகம் கூட உந்தன் நினைப்பால்,
 தினமும் மெலிந்து சிதைந்து நொறுங்குதடி...

உன்னை கரங்களுக்குள் கட்டிட என் விரல்களும் தவிக்குதடி,
 உன் தடங்களில் நடந்திட என் பாதங்களும் விரையுதடி,
விண்மீனும் பெண் பூவாய் உருவானதேனடி?
 உன் விரலுக்குள் மோதிரமாகும் அந்நாளும் எப்போதடி...!

~அன்புடன் கோகுலன்.

Wednesday, September 12, 2012

நண்பன்... (Friend)



பாதை தேடி பயணங்கள் போகும் நேரம்,
 வழி துணையாய் வந்தவனும் அவனே...
நிம்மதி தொலைத்து நேரம் மறந்த போது,
 துக்கத்தை நான் பகிர தூக்கத்தை தொலைத்தவனும் அவனே...

தடுக்கி வீழ்ந்து மிதிபட்ட வேளைகளில்,
 தூக்கி விட்டு தோழ் தந்தவன் அவனே,
செய்வதறியாது சிதறிய பொழுதினில்,
 சேர்த்தெடுத்து சிலையாக்கியவன் அவனே...

மழை வரும் வேளைகளில்,
 நிதம் குடைபோல் காத்தவன்,
வெயில் சுடும் காலங்களில்,
 நிழலாய் மாறியே குளிரும் தந்தவன்...

நட்புக்கு இலக்கணமல்ல அவன்,
 இதிகாசமாய் மாறியே உயர்ந்தவன் அவன்,
தோழமையின் தோழனும் அவன்,
என் உயிர் நண்பனும் அவன்தானே...

~அன்புடன் கோகுலன்.

Sunday, September 9, 2012

துவக்கம்... (The Beginning)


இன்று மனம் ஏனோ சற்று இளைப்பாற தொடங்கியது,ஏதாவது செய்வோம் என தொடங்க ஏதோ சில தடங்கல்கள் செய்ய விடாமல் தடுத்தது."சரி போகட்டும் நாளை பார்த்துகொள்வோம்" தினமும் எம்மில் பலரும் உச்சரிக்கும் மந்திரம். பத்திரிகை தொட்டேன், வாசித்த மனமோ சற்று தமிழை காதலிக்க தொடங்கியது, எழுத்தில் எனக்கும் ஆர்வம் உண்டு அனால் யாரும் கண்டுகொண்டதில்லை, எழுத்தில் ஆர்வம் இருப்பினும் எழுதுபவன் எழுத்தில் அழகும் வேண்டும்- சிலர் கருத்து.

வழக்கமாக இவ்வேளைகளில் கவிதைகளுக்கு வித்திடும் பேனா இன்று தமிழுக்கு விருந்து வைக்க தொடங்கியது. உவமைகளை உருப்பமைய தீட்டிட நான் அனுபவசாலி அல்ல புதிதாய் பூத்த பூவாய் பூவுலகை பார்க்கும் பாக்கியசாலி என வைத்துக் கொள்ளலாம். பிழைகள் இருக்கலாம் கட்டாயம் எழுத்து பிழைகள் இருக்கும் தொட்டில் பழக்கம் விடுவது கடினம், முயற்சிக்கிறேன் பார்ப்போம்.

 எழுத தொடங்கி விட்டேன் தலைப்பு எதுவுமில்லை மனம் எழுத எத்தணிக்கிறது. "ச்சே!" தமிழ் பசியை போக்க முயலுகிறது நுளம்பு, அடித்துவிட்டேன், இறந்து விட்டது, தொடரலாம்... படிப்பதற்கு பல விடயம் உண்டு, விரும்பவில்லை மனம் இப்பொழுது, நேரம் அழகிய விடயங்களை தினமும் நமக்கு ஊட்டுகிறது, அனுபவங்கள்,பழக்கங்கள்,மறக்க முடியாத நினைவுகள் பல உண்டு அனால் படிப்பு மட்டும் பெரிதாக மனதில் பதிவதில்லை இது பொதுவாக பலருக்கு உள்ள பிரச்சனை.

நாளை நண்பனிடம் கொடுத்து சற்று திருத்தி கேட்பேன் முகத்தில் ஓர் அசடு வழியும் சிரிப்புடன் வாசிப்பான். என் எழுத்து ஊக்கமளித்த முதல் நண்பன், முதல் மனிதன் என கூற முடியாது அவ்விடம் இன்னொருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. எழுதுவது நல்ல பழக்கம் தன பெரிதாக எல்லாரும் எழுதிவிடுவதில்லை நானும் தான், நீ மட்டும் என்ன பெரிய எழுத்தாளனா? கேட்காதிர்கள் என் பேனா நின்று விடக்கூடும், பழக விடுங்கள், நேரம் கொடுங்கள். எங்கும் பார்த்து எழுதவில்லை மனதுக்கு தோன்றுபவை என் பேனா மை விதைக்கிறது. எவரும் மற்றவரை எளிதாகப் புகழ்ந்து விடுவதில்லை,கேலி, நகைத்தல்,நையாண்டி இலகுவாக வலிகொளிடுவது சிலருக்கு அது சில நொடி சந்தோசம் மறுபுறம் நகைக்க படுபவர் மனம் வித்தியாசமான விடயங்களை நினைக்கக் கூடும். இது பொதுவாக எவரும் யோசிப்பதில்லை. யாரையும் குறை கூறவில்லை மனதுக்கு பட்டதை சொல்கிறேன் அவ்வளவுதான்.

மனிதர்கள் வித்தியாசமானவர்கள் வித்தியாசமான பழக்கங்கள் உடையவர்கள் எல்லோரையும் இலகுவாகப் புரிந்துக் கொள்ள முடியாது. தன்னை தானே அடையாளங் கனவே பல வருடங்கள் கடக்கிறது. நான் ஞானி போல கதைப்பதாக என்ன வேண்டாம் நிச்சயம் கதைக்க மாட்டேன் இது மிகவும் எளிமையான விடயம் யாரும் புரிந்து கொள்வார்கள்.

சரி, விடயத்துக்கு வருவோம் எழுத தொடங்கியவன் பிதற்றிக் கொண்டிருக்கிறான் என நீங்கள் என்ன கூடும்.தலைப்பே இல்லாமல் எழுதத் தொடங்கினால் எல்லோரும் பிதற்றுவது உண்மைதான். என் அனுபவங்கள் சிலவற்றை இன்று எழுதுவோம் வரவேற்பை பொருது தொடரலாம் இல்லை கைவிடக்கூட நேரிடலாம். தோல்விகளை மட்டும் கண்ட மனம் இலகுவாக சளைத்துவிடாது முயற்சி தொடரும் தினமும்.

என் கவிதைகள் பற்றி எழுதுகிறேன் விரும்பினால் நீங்கள் வசிப்பதை தொடரலாம் இல்லையேல் மூடி வைத்து விட்டு விடைப்பெறலாம்.
தொடருபவருக்காக...

சுமார் 5 வருடங்களுக்கு முன்பு, 5  வருடம் தன எவ்வித மாற்றமும் இல்லை. உயர் வகுப்புக்காக புது ஊர்,புது பாடசாலை குடிப்புகுந்தேன். அந்நியனாகவே பலருக்கும் தெரிந்தேன். வேற்றுக் கிரக வாசியல்ல நானும் மனிதன் பிதற்றியது மனம் எவரும் கண்டுகொள்ளவில்லை, பக்கத்தில் நான் உட்காருவதை கூட விரும்பவில்லை சிலர், பெரும் குழப்பங்களுடன் நகர்ந்த நாட்கள்... இளமையின் முதல் நிலை, உடலில் ஹார்மோன்களின் அட்டகாசங்கள் தொடங்கிய நாட்கள், பெண்களை நோக்கி மட்டுமே மனம் அலையாய் திரண்ட நாட்கள், எவளும் திரும்பி கூட பார்க்காத நாட்கள். "இப்பொழுது மட்டும் பார்கிறார்களா?" என நீங்கள் கேட்கக் கூடும். இப்பொழுது மனம் பழகிவிட்டது ஓர் நிலைப்பாட்டுக்காக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கும் மனம் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

அந்நாட்களில் தான் நாம் கண்ணாடி முன்பு மணித்தியாலங்களை தொலைத்தோம், மன்னிக்கவும் "நான்""தொலைத்தேன்", தொடரலாம்... இளமையின் திருவிளையாடல்களில் மனம் இளகிக்கொண்டு இருந்தது, எப்படி கதாநாயகனாவது...? மூளை கேள்விகளை சராமாரியாக தொடுத்துக்கொண்டு இருந்தது, முக்கியமாக பெண்களுக்கு முன்பு, எனது வகுப்பில் இருந்த சக மாணவியருக்கு முன்பு... வீரம் காட்டவோ உடலை காட்டி வசப்படுத்தவோ முடியாத நிலை சற்று வேகமாக காற்றடித்தாலே பறக்கக் கூடிய உடல் வாகுதான், என்ன செய்வதென்று கடுமையாக யோசித்தது மூளை, பௌதிகவியலில் கணக்கு செய்யக்கூட நான் அவ்வளவு யோசித்ததில்லை.

கவிதை எனும் பேரில் 2 ,3 வரிகள் கிறுக்கிப்பார்த்தேன் நண்பர் வட்டம் வழமை போல்,"எங்கு பார்த்தேழுதியது?" எனும் கேள்வியை கேட்டு கேலிச்சிரிப்புகளை தூரச் செய்தது. என் உயிர் தோழன் மட்டும் நன்றாக இருக்கிறது தொடரு என்றான், அவன் கொடுத்த அந்த ஊக்கம் என் கவிதைகள் சற்றே மெருகேறியது, அம்மா கூட கண்டுக்கொள்ளவில்லை, வழமையாக நடப்பது தானே அவருக்கு நான் படித்தால் மட்டும் போதும் 21ம் நூற்றாண்டின் இடைநிலை வகுப்பின் குடும்பத்தலைவி அவ்வளவுதான் யோசிப்பார், 5 வருடம் முன்பு இளமை வயது இப்படியும் யோசித்தது.


கவிதைகள் சாரலாகத் தூறியது, பெண்களை குறிவைத்தே எழுதப்பட்டது, அவர்களை ஈர்ப்பதற்காக செதுக்கப்பட்டது, நானும் சிறிது சிறிதாக அவர்கள் முன்புக் கதாநாயகனானேன்.கட்டம் அடித்து செய்த திட்டம் வீண் போகவில்லை.காதலுக்குள் மனம் சிக்கத் தொடங்கியது, கவிதைகளை காதலிக்கத் தொடங்கியது. அழகிய பல கவிதைகள் உருவாகின பலவற்றை சக மாணவியர் சேர்த்துக் கொண்டனர். மனம் மேகங்களுக்குள் மிதக்கத் தொடங்கியது. பேனாவின் நுனி தான் கக்கும் ஒவ்வொரு துளி மைக்கும் அழகை சேர்த்தது. எனது கவிதைக்கும் ரசிகர்கள்,ரசிகைகள் தான் அதிகம். அதிலும் சிலர் குறிப்பிடத்தக்கவர்கள் அவர்கள் பற்றி இங்கு கதைக்கக் கூடாது பிறகு பார்ப்போம். நானும் கதாநாயகனானேன், கவிதை அடையாளமிட்டது என்னை. மதிக்கப்பட்டேன் சிலரால், மிதிக்கப்பட்டேன் பலரால் ஆயினும் எழுத்து ஓயவில்லை பேனா மை திறவில்லை. 10 ரூபாய்தான் பேனை முடிந்தால் இன்னொன்று புதிதாக வாங்குவேன் என்று கூறிவிட்டு தொடர்ந்தேன். இன்றும் தொடர்கிறேன் ஓர் ஒழுங்கான அடையாளம் கிடைக்கும் வரை, என்று கிடைக்கும் என்று தெரியவில்லை அனால் கிடைக்கும் எனும் நம்பிக்கை உண்டு, கிடைக்கும் கட்டாயம் எனக் கூற ஊக்கமளிக்க ஒரு தோழன் உண்டு அவனுக்காக மட்டுமாவது என் கவிதைகள் கடைசி வரை எழுதப்படும். நேரம் சிறந்த மருந்து எல்லாவற்றுக்கும் விடை தரும் கலைக்களஞ்யம் எனக்கும் ஒரு பக்கம் வேண்டாம் ஒரு வரியாவது ஒதுக்கப் பட்டிருக்கிறதா? இருக்கும் கட்டாயம். ஓயாது என் எழுத்து, திமிரல்ல தன்னம்பிக்கை, முடியும் எனும் தன்னம்பிக்கை.

போதும்பா, எப்ப தான் முடிக்கப்போகிறாய் என நீங்கள் கூற எத்தனிக்கும் முன்பு முடித்துக்கொள்கிறேன் இப்போதைக்கு மட்டும் எழுதுவது முடியாது என் இறுதி நாடி இப்பூவுலகில் அடங்கும் வரை...

        
~அன்புடன் கோகுலன்.

Tuesday, June 12, 2012

Biotech- The Future

Biotechnology


Biotechnology a common word in the uncommon human kind i may say. A unique science to the future of man kind that is being developed in today's world, i am a student who is interested and studying in this area where many of my friends doesn't know anything about it.

 
Biotechnology (sometimes shortened to "biotech") is a field of applied biology that involves the use of living organisms and bio processes in engineering, technology, medicine and other fields requiring bio products. Biotechnology also utilizes these products for manufacturing purpose. Modern use of similar terms includes genetic engineering as well as cell and tissue culture technologies. The concept encompasses a wide range of procedures for modifying living organisms according to human purposes going back to domestication of animals, cultivation of plants, and "improvements" to these through breeding programs that employ artificial selection and hybridization. By comparison to biotechnology, bioengineering is generally thought of as a related field with its emphasis more on higher systems approaches (not necessarily altering or using biological materials directly) for interfacing with and utilizing living things. The United Nations Convention on Biological Diversity defines biotechnology as "Any technological application that uses biological systems, living organisms, or derivatives thereof, to make or modify products or processes for specific use."

In other terms: "Application of scientific and technical advances in life science to develop commercial products" is biotechnology. Biotechnology draws on the pure biological sciences (genetics, microbiology, animal cell culture, molecular biology, biochemistry, embryology, cell biology) and in many instances it is also dependent on knowledge and methods from outside the sphere of biology (chemical engineering, bio process engineering, information technology, bio robotics). Conversely, modern biological sciences are intimately entwined and dependent on the methods developed through biotechnology and what is commonly thought of as the life sciences industry.


 

Here i have given a rough idea that you can get from this article that what is biotech really about. This one of the greatest revolution which will help the future mankind \to survive in this world peacefully and healthily.

The concept is simple so let's don't make it complex so that we won't understand it anyway forever...

Ok fellows reading is fun, Keep it up and Keep in touch.

Cheers!

~Kohulan.

Kathal - The truth


Sunday, June 10, 2012

Ninaivil nee



kathalin vali


VFX - The Third Eye.

The Visual FX


Visual effects a common word that is being used these days in world of Media. This called as VFX,Visual effects or Visual FX. It is a process by which imagery is created or manipulated outside the context of a live action shooting.

VFX is media that we can create a thing that is not really happening or that is not available in this world for us to see. This is a context which includes live action motion with a combination of imaginary generated group of pictures which helps in creating a environment which looks realistic.

The VFX is used in generating scenes which are realistic, but would be dangerous, costly, or simply impossible to capture on film.VFX those are created using CGI (Computer Generated Imagery) commonly in big budget films these days. It's really been a must on those films to attract more audience and to earn more income.

Visual effects are often integral to a movie's story and appeal. Although most visual effects work is completed during post-production, it usually must be carefully planned and choreographed in Pre-production and production. Visual effects are designed and edited in Post-Production, with the use of graphic design, modeling, animation and similar software, while special effects are made on set, such as explosions, car chases and so on. A visual effects supervisor is usually involved with the production from an early stage to work closely with production and the film's director to achieve the desired effects.

Visual effects may be divided into at least four categories:

  •     Models: miniature sets and models, animatronics, stop motion animation.
  •     Matte paintings and stills: digital or traditional paintings or photographs which serve as background plates for keyed or rotoscoped elements.
  •     Live-action effects: keying actors or models through bluescreening and greenscreening.
  •     Digital animation: modeling, computer graphics lighting, texturing, rigging, animating, and rendering computer-generated 3D characters, particle effects, digital sets, backgrounds.
Digital effects (commonly shortened to digital FX or FX) are the various processes by which imagery is created and/or manipulated with or from photographic assets. Digital effects often involve the integration of still photography and computer generated imagery (CGI) in order to create environments which look realistic, but would be dangerous, costly, or simply impossible to capture in camera. FX is usually associated with the still photography world in contrast to visual effects which is associated with motion film production.Amateur VFX Animation which are VFX made by budding VFX artists. e.g. Fancock 4 and LTS.

 The audience of this decade love to see the films which contains those Big Bang features has the ability to attract the audience to freeze them in their place till a movie finishes. You can say that the films those are produced these days depends on the VFX only. There are some certain audience who still loves the realistic films but I can say those are created only to telecast a director's/performer's talent in the visual media and also to achieve an award in the film industry.

There may be some certain films that can attract audience only with the live action shooting but as my final conclusion the film industry of now really depends on the VFX without it the industry of motion picture is nothing.


~Kohulan













Saturday, June 9, 2012

The Tick Tock Theory of INTEL

The theory that Intel using in their production of microprocessors is called the TICK TOCK thoery.
 
"Tick Tock" is a model adopted by chip manufacturer Intel Corporation since 2007 to follow every micro architectural change with a die shrink of the process technology. Every "tick" is a shrinking of process technology of the previous micro architecture and every "tock" is a new micro architecture Every year, there is expected to be one tick or tock.

The first architectural change was a "Die shrink" one.Presler, Cedar Mill, Yonah are the code names that were used for the first ones. On 5th of January 2006 these were launched into market as Pentium 4,D,M,Dual-Core and Celeron.

The final one in the line up is "tick" the one that was built to a die shrink in the architectural change of the "Tick Tock". The final one was a 22nm micro processor which was code named as "Ivy Bridge". This one was launched on 29th of April 2012.

The future of the concept will continue till 2021 when the 5nm processor will be produced by the Intel corporation as for their prediction.

Let's what what will happen to the silicon valley in future, as for now wait for you guys,




Just wait till my next BLOG.


~Kohulan.

The Beginning

Hi Friends,

Don't waste time reading my blogs if you guys are not interested in IT,Network,Media,IQ and etc....
Here i am just going to share the things that i heard,saw,read and knew.After reading my posts you can say this such a time waste so be careful when you start reading my blogs.

This is my first post in the blog spot so it can be messy one... Hey! still i am a beginner so i need some time to learn the faults so kindly notify me if i  have done anything wrong K?

That's all for now I'll catch you guys/girls later with my posts.

Wish me luck!!

~Kohulan