Friday, September 28, 2012

இதயத்துள் ஓர் கனவு...

தொட்டதும் இனித்திடும் முத்தங்கள் தானடி,
 சித்தத்துள் தோன்றுது யுத்தங்கள் ஏனடி,
விட்டதும் விலகிடும் விண்மீனும் நீயடி,
 உனக்காய் ஏங்கிடும் மனமும் இதுவடி...

கற்பனைகள் களைந்திட கலங்கிடும் கண்களடி,
 வேதனையின் விளிம்பையும் தொட்டுணர்ந்த மனமடி,
வெந்திடும் நொடிகளிலும் உன்னை சிந்தித்தேன் நிதமடி,
 கடலுக்குள் தொலைந்த கப்பலாய் கரைதேடுகிறேன் தினமடி...

பனி காலம் கூட தேகம் முழுதும் வியர்க்குதடி,
 கோடையில் கூட உடல் எங்கும் குளிருதடி,
தேகம் கூட உந்தன் நினைப்பால்,
 தினமும் மெலிந்து சிதைந்து நொறுங்குதடி...

உன்னை கரங்களுக்குள் கட்டிட என் விரல்களும் தவிக்குதடி,
 உன் தடங்களில் நடந்திட என் பாதங்களும் விரையுதடி,
விண்மீனும் பெண் பூவாய் உருவானதேனடி?
 உன் விரலுக்குள் மோதிரமாகும் அந்நாளும் எப்போதடி...!

~அன்புடன் கோகுலன்.

No comments:

Post a Comment