Wednesday, September 12, 2012

நண்பன்... (Friend)



பாதை தேடி பயணங்கள் போகும் நேரம்,
 வழி துணையாய் வந்தவனும் அவனே...
நிம்மதி தொலைத்து நேரம் மறந்த போது,
 துக்கத்தை நான் பகிர தூக்கத்தை தொலைத்தவனும் அவனே...

தடுக்கி வீழ்ந்து மிதிபட்ட வேளைகளில்,
 தூக்கி விட்டு தோழ் தந்தவன் அவனே,
செய்வதறியாது சிதறிய பொழுதினில்,
 சேர்த்தெடுத்து சிலையாக்கியவன் அவனே...

மழை வரும் வேளைகளில்,
 நிதம் குடைபோல் காத்தவன்,
வெயில் சுடும் காலங்களில்,
 நிழலாய் மாறியே குளிரும் தந்தவன்...

நட்புக்கு இலக்கணமல்ல அவன்,
 இதிகாசமாய் மாறியே உயர்ந்தவன் அவன்,
தோழமையின் தோழனும் அவன்,
என் உயிர் நண்பனும் அவன்தானே...

~அன்புடன் கோகுலன்.

No comments:

Post a Comment