Monday, December 10, 2012

என் தோழன்...


நிழலாய் மாறியே தினமும் குடைப்பிடித்தாய் தோழா,
நான் கண்கலங்கும் வேலை நீ அழுதாயே தோழா,
என் தவறுகளுக்கு நீ தண்டித்துக் கொண்டாயே தோழா,
நினைவுகள் என் கனவுகளில் உன் சிரிப்பை காட்டுதே தோழா..

உன் தோழில் சாய்ந்தேன் கவலைகள் மறந்திட,
உன் சோற்றைப் பகிர்ந்தேன் என் பசியைப் போக்கிட,
உன் வீட்டில் உறங்கினேன் உண்மைகள் பகிர்ந்திட,
உன் விளக்கிலே படித்தேன் என் வாழ்க்கை விளங்கிட...

நட்புக்கு இலக்கணமில்லை விளக்கிட வழிகளில்லை,
விளக்கிட நான் துடித்த வேலைகளில் வலிக்குதே என் மூளை,
இருளை நான் கண்டது இல்லை தோழா,
என்னுடன்  என் பாதைகளில் நீ  தொடர்ந்திடும் போது...

எண்ணங்கள் மேலோங்கிட செய்தவன் நீயே,
அலை மோதிய என் கனவுகளை நனவாக்கியவன் நீயே,
கோடிப் பேர் கொண்ட உலகத்தில் எனை நாடியவன் நீயே,
உலகமே இருண்டிடும் போதும் என்னுடன் உலகை வெல்ல துடிப்பவன் நீயே...
என் தோழன்...

~அன்புடன் கோகுலன்.


No comments:

Post a Comment