Tuesday, December 11, 2012

விதியா? விடுகதையா?


தீயிலே வாழ்கிறேன் மௌனத்தில் சாகிறேன்,
பேதையாய் திரிகிறேன் போதையை வெறுக்கிறேன்,
தேடல்கள் முடிகிறதே சிரசும் வலிக்கிறதே,
ஆயிரம் கோடி பிழைகளும் என் கழுத்தை நெரிக்கிறதே...

கடவுளை மறுத்தாலும் மறக்கவில்லை எக்கணமும்,
ராஜ்யங்கள் தேடியே அடங்கிவிட்டேன் இடுகாட்டிலே,
மனமிங்கு தடை பல உடைத்தாலும்,
விடை இன்றி வாழ்கையும் வெறுக்கிறதே...

கவலைகள் கானகத்துக்கு வழி காட்டும்,
மதி தனை விதியதும் மூடிவிடும்,
வேரின்றி மரம் மட்டும் என்ன செய்யும்,
கருகிட தனிமையில் துடித்து நிற்கும்,

ஏழையாய் பிறந்தாலும் மன்னனாக துடிக்கிறோம்,
தொடர்கதை இங்கு முடிவேது பிறகு ஏன் வருந்துகின்றோம்,
கோடி விளக்குகளும் இரவுகளை மாற்றுவதில்லை,
மன மாரும் நேரம் எம்முயிருக்கு இப்பூமியில் இடமுமில்லை....

~அன்புடன் கோகுலன்.

No comments:

Post a Comment