Friday, December 14, 2012

வலி...


போற்ற தேவையில்ல கண்ணே,
தூற்றாதிரு நித்தோம் முன்னே,
விளையும் நிலமடி பெண்ணே,
முத்து குளிக்கயில மூழ்கி செத்தனே....

பொங்கி வச்ச சோறு நான் தொடவே கசக்குது,
நெஞ்சு குழிக்குள்ள ஒரு ஜீவன் தவிக்குது,
ஊரு சனம் எல்லாம் நம்ம பொலப்ப பாத்து சிரிக்குது,
எழும்பிட நினச்சவன ஆறடிகுள்ள அடக்குது.....

சின்னஞ்சிருசு கூட என்ன கண்டா ஒதுங்குது,
கட்டையில போக கூட வழியின்றி ததும்புது,
மொத்ததுல நானோ என்ன சொல்லி பொலம்புறது,
பேசயில கூட சத்தம் வர மறுக்குது....

கொலகுத்தோம் செஞ்சவன் கூட சந்தோசமா திரியுறான்,
ஒருக்க தோத்துப்புட்டு தெனமும் சாகுரனே நெதமும்....
செதறுன என்ன சேத்து வைக்க தேவல,
செரகொடிஞ்ச பறவய பறக்க விட இங்க யாருமில்ல...

~அன்புடன் கோகுலன்.

No comments:

Post a Comment