Tuesday, December 4, 2012

ஒரு கதை...


படிக்க தொடங்கி 5 நிமிடம் கூட ஆகவில்லை, தூக்கம் கண்ணை மிருதுவாக வருடுகிறது. என்ன செய்ய? பொதுவாக இளம் வயதில் உள்ள பலரின் பரம்பரை நோய் இது. கையடக்கத் தொலைபேசியில் கோலமிடத் தொடங்கியது விரல்கள், இசையில் நனையலாம் என பாடல்கள் சில தேடினேன் காதல் பாடல்களின் தொகுப்பே அதிகமாக இருந்தது, உனது தொலைப்பேசித்தானே நீ தானே அதில் அந்த பாடல்களைச் சேமித்திருப்பாய் என நீங்கள் கேட்க்கக் கூடும். உண்மைதான் தமிழ் திரையிசைப் பாடல்களில் நம்மில் பலரின் மனதை கவருவது ஏனோ இந்த வகைப் பாடல்கள் தான். சிறுவயதில் பெரிதாக யாரும் இவ்வகைப்பாடல்களை விரும்புவதில்லை ஆனால் கட்டிளமைப் பருவத்தை தொட்டவுடன் பெண்களை நோக்கி எம் பார்வையில் அப்பப்பா எவ்வளவு காதலடா? அதோடு மனது காதல் பாடல்களின் வசம் ஈர்க்கப் படுகிறது, ஒவ்வொரு வரியையும் ரசிக்கத் தொடங்குகிறது, சில நேரம் மனனம் கூட செய்து விடுகிறது மனது - நாம் அல்ல மனதே...

ஐயோ பாவம் யார் செய்த தவமோ? யார் அளித்த வரமோ? தெரியாது மானுடரில் பலருக்கு இப்படி நடக்கிறது. பாடல்களோடு மட்டுமல்ல காதல் திரைப்படங்கள்,புத்தகங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,மிகவும் முக்கியமாக சிலரின் அனுபவங்கள், இவ்வாறு வகைப்படுத்திக்கொண்டே போகலாம். காதல் அற்புதமான உணர்வு, கள்ளங்கபடமில்லாதது, கடவுளுக்கு அடுத்தப்படியாக எம்மில் பலர் அடிபணிவது, துன்பத்தில் கூட ஒரு இன்பத்தை விரும்புவது,மனிதனுக்கு மட்டும் உணர்வுகளால் உயிரூட்டப்பட்டது, ஆக்கத்துக்கும் அழிவுக்கும் கூட அழகாய் பாதை அமைப்பது,சின்னச் சின்னத் தவறுகளைக் கூட நேசிக்கச் செய்வது, மனிதனை ரசிகனாக்குவது என பலவாறு கூறலாம். இவை பொது கருத்துகள், என் சுய கருத்துகள் மனதில் பட்டதைக் கூறினேன். அதிகமாக பிதற்றாதே விடயத்துக்குவ என சிலர் கூறுவது காதில் படுகிறது. என்னை போல் தமிழை நேசிக்கும்,"காதலிக்கும்" என் வாசர்கர்களுக்காக ஒரு அழகிய கதைக் கூறப் போகிறேன். பலர் என்னிடம் கேட்டது, அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல, இதில் உங்கள் கதையும் கூட அடங்கியிருக்கலாம். பலரும் மிகவும் ரசிக்கும் ஒரு கதை ஒரு சிலரின் வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் ஒரு பகுதியை முற்றிலும் அழகாக்கிடும் நிகழ்வு, என் கற்பனைகளின் கோர்வையாய் இலக்கிய பசிக்காக நீங்கள் ருசித்திட இங்கு பிறக்கப் போகிறது...

பாடசாலைக்காலம் வகுப்புக்குள் ஒருவன் நுழைகிறான், எண்ணை தோய்த்து வாரிய தலை, மிகவும் நேர்த்தியான உடல் வாகு, மெலிந்த தோற்றம் கொண்டவன், நுழைந்தவனை நண்பர் பட்டாளம் தங்கள் கதைக் கூட்டணிக்குள் இணைத்துக்கொண்டனர், கதைகளில் ஆழ்ந்து போனவனின் கண்கள் மட்டும் ஒரு தேடலைத் தொடங்கியது பெண் பிள்ளைகளின் பக்கம் நோக்கி அலைப்பாய்ந்தது, அவளை கண்டுக்கொண்டுவிட்டான், மனதுக்குள் ஓர் சிரிப்பு, "பார்ப்பாயா அன்பே?" ஒரு ஏக்கம், அவளும் பார்த்தாள் வழமைப்போல் மெல்லிய சிரிப்பு, அவனுக்கோ உள்ளுக்குள் ஒரு பூகம்பமே வெடித்து போல ஓர் உணர்வு, இவனும் பதிலுக்கு சிரித்து விட்டு ஓரிரு வார்த்தைகள் கதைத்தான் அந்த உரையாடல் அவனை நண்பர் மத்தியில் இருந்து தனியே பிரித்தெடுத்தது, அழகிய உரையாடல்களின் தொகுப்பு, ஒரு பரவசநிலை, சிலருக்குத் தான் அந்த பாக்கியம் கிடைக்கும், இவன் மனதில் காதல் அவள் மனதில் சராசரி நட்பு அவ்வளவு தான் இவ்விருவரினதும் உறவு, இவ்வாறான நிகழ்வுகளால் அவர்களின் காலம் இனிதாய் நகர்ந்தது...

இவன் பலமுறை தன் காதலைச் சொல்ல எத்தனித்தும் ஏதோ ஒரு சக்தித் தடுத்து. நட்பு வட்டாரம் கிண்டலடித்தது ஆனால் இவனோ வெறும் நட்பு தான் என ஏமாற்றிவிட்டான், பொதுவாக பலரும் செய்யும் ஒரு சாமர்த்தியம். அதில் எந்த பிழையுமில்லை காரணம் காதல் என நாம் ஒப்புக் கொண்டால், ஒருவேளை அவ்விடயம் அந்த பெண்ணுக்கு தெரிந்து நட்பும் உடைந்துவிட்டால்? அவன் மனது எவ்வளவு கஷ்டப்படும்? ஆகவே இவ்வாறன பதில்கள் பலருக்கும் ஒரு பாதுகாப்பு தான்.

அவள் வேறு ஆண்களோடு சற்று சிரித்தே கதைக்கும் பொது அவன் மனம் பதபதைக்கும், இதயம் கண்ணீர் விட்டலும் உதடுகள் மட்டும் போலியான சிரிப்பை மௌனத்துடன் தழுவும். மூளை திருகிக் கொள்ளும், செய்வதறியாது திகைத்து நிற்கும். இப்படியே விட்டால் தான் பைத்தியமாகி விடுவேன் என யோசித்தான் அவளுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினான், அவளுடன் உரையாடும் நேரத்தை அதிகரித்தான், அவள் வருமுன் பாடசாலை சென்றடைந்தான் யன்னல் ஓரம் விழிகளை தேக்கி வழிமீது தேங்கிக் கிடந்தான். அவளைக்கண்டவுடன் புன்னகைத்து, கையசைத்து உரையாட தொடங்குவான்...

பலநாள் தனிமையில் இவ்விருவரினதும் உரையாடல்கள் தொடர்ந்தது, அது அவர்களை மிகவும் நெருக்கமாக்கியது, செல்லிட தொலைப்பேசிகள் அழகிய குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்ளத் தொடங்கியது. அவர்களின் குறுந்தகவல்கள் மிகவும் நெருக்கமான ஒரு உறவை பிரதிப்பளித்தது. இவனது தகவல்கள் நட்பு சாயம் பூசி காதலை  சுவைத்திருக்கும், அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்து, அவனின் செயல்களை ரசிக்கத் தொடங்கினாள், அவனுடன் இருப்பதை மிகவும் விரும்பினாள், உரிமையுடன் கை கோர்த்து திரியவும் செய்தாள்  எனினும் காதலைச் சொல்ல மறுத்தாள்...

உறவுகள் மிகவும் நெருக்கமானது, எனினும் இருவர் மட்டும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பாடசாலை முடிவு பிரிவுகளின் ஓர் அத்தியாயம் கட்டாயம் எல்லோரும் சிதறிச் செல்ல வேண்டியத் தருணம், இரு உள்ளங்கள் மட்டும் செய்வதரியாது திகைத்திருந்த நிமிடம். இன்று சொல்லிவிடுவோம் என முடிவெடுத்தான், அவள் அருகில் சென்றான், கூறிவிடுவோம் என முற்படுகையில், அவளின் செல்லிடம் அழைப்பு மணியை உமிழ்ந்தது, தயக்கத்துடன் அவனை பார்த்தவள் சைகை காட்டி விட்டு கதைக்க தொடங்கினால் தொலைப்பேசியில், சில நிமிடங்களின் பின்னர் சிரிப்புடன் முடித்தவள் என்ன விடயம் என கேட்டாள், அப்போது அவனின் நண்பன் அவசரமாக வந்து அவனைக் கூப்பிட அவளை அங்கேயே நிறுத்தி வைத்தவனாய் சென்றுவிட்டான். அவளுக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் தொடங்கியது சில மணி நேரம் காத்திருந்தவளுக்கு பயமும் அதிகரித்து எங்கே அவன் பிரிந்து விடுவனோ என்று அவள் உள்ளம் அழுதது...

அவன் வந்தான் அவளை தனிமையில் ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றான். தைரியமாக அவளின் கண்களை பார்த்து இவ்வாறு பேசத்தொடங்கினான், " நான் பல பிரிவுகள பார்த்தவன் தான் ஆனா இன்னைக்கு ஏதோ ஒரு புது பயம், என்னைக்கும் இல்லாத ஒரு நடுக்கம், ஒவ்வொரு நாளும் ஒருத்தர பார்குறதுக்காக வாறேன் அந்த சந்தோசம் இனி இருக்காதுன்குற வேதனை இருக்கு, அவங்கள பார்க்க முடியாதேங்குற கவலை இருக்கு, பலமுறை என் செயல்கள் அவங்கள காயப்படுத்தினாலும் அதுக்காக மன்னிப்பு கேட்டு கேஞ்சுரப் போதுள்ள சுகம் இனி இருக்காதுன்குற பயம் இருக்கு, அவங்க கண்கள இனி பார்க்க முடியாம போய்விடுமோ? என்கிற தவிப்பு இருக்கு, சிரிப்ப புதுசா உணர வச்ச அவங்களோட சிரிப்பா இனி பார்க்க முடியாதோ? என்னும் சலனம் இருக்கு, என்னை அப்படியே ஏத்துக்கிட்ட அவங்க இனிமேலும் என் கூட இருபாங்களாங்குற கேள்வி எனக்குள்ள இருக்கு, அவங்க என் மேல வச்ச நட்பு என்னை விட்டுட்டு விலகிடுமோ? என்கிற அங்கலாய்ப்பு இருக்கு, எல்லாத்துக்கும் மேல என் காதல் அவ ஏத்துகுவாளா? என்னும் சந்தேகம் எனக்குள்ள இருந்து தினம் தினம் என்னை கொண்ணுக்கிட்டு இருக்கு..." என அவன் கூறி முடிக்க அவன் கண்களில் கண்ணீர், அதை துடைத்த அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவளின் கன்னங்களை ஈரமாக்கியது, சில நொடிகள்  நீடித்தது மௌனங்கள், அவளின் உதடுகளில் அழகாய் ஏற்பட்டது நடுக்கங்கள், காதலால் நிறைந்தது அவள் விழிகள், ஏங்கி தவித்த அவன் காதலை அவள் இதயம் ஏற்றுக்கொண்டது...

~அன்புடன் கோகுலன்.

7 comments:

  1. intha kadayil varum kathapathirangal yar yar ena kuripittu irunthaal super ahh irunthirukum !!! :P

    ReplyDelete
    Replies
    1. பெயர் குறிப்பிட்டாள் கதையில் சுவாரசியம் இருக்காது தோழா!!!

      Delete
  2. "கலப்படமற்ற கற்பனை" அப்படித்தானே..?
    அனுபவப் பாடம் புகட்டும் அன்பனே..

    பெரும்பாலான காதலர்கள் தங்கள் காதல் வாழ்வின் ஏதேனும் ஒரு பக்கத்தில் இந்த சம்பவங்களின் சாரலடித்திருப்பதை உணர்வார்கள். இந்தக் கதையில் வீசும் வெப்பத்தை பெரும்பாலான காதலர்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சுவாசித்து விசும்பியிருப்பார்கள்.

    வாழ்த்துக்கள் வளர் கவியே !! வார்த்தைகளும் வளரட்டும்.. எட்டுத்திசையும் எட்டட்டும் !!

    நான் தமிழன்,
    -சிவ.கஜன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பான கருத்துகளுக்கு நன்றி அன்பரே... எல்லோர் வாழ்க்கையிலும் எதாவது ஒரு பகுதியில் இந்த விடயத்தை கட்டாயம் சந்தித்திருப்பர் அத்துடன் சில எனது கற்பனைகளால் நனைக்கப்பட்டதுவே...

      Delete
  3. kandipa ithu katpanai alla.... un anubawamum iruku da..... anyhow story superb.....

    ReplyDelete
    Replies
    1. Unmaiya sonna namba matingale... Ithu ellorum kadakkum oru valkai sambavam...

      Delete